NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Tuesday, May 31, 2011

தமிழக அரசு 680 கிலோ தங்கம் வாங்குகிறது-தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 16-ந் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 7 திட்டங்களை அமல்படுத்த உத்தரவிட்டு கையெழுத்திட்டார். படித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்பது அதில் ஒரு திட்டமாகும்.

"தாலிக்கு தங்கம்" என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திட்டத்தை வெற்றிகரமாக அமல் படுத்த சமூக நலத்துறை சார்பில் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தமிழ் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பெண்கள் திருமண வயதில் இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு தலா 4 கிராம் தங்க காசு வழங்குவதற்காக 680 கிலோ தங்கம் வாங்க தீர்மானித்து இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார். அ.தி.மு.க. அரசின் மிக முக்கியமான திட்டங்களில் இந்த திருமாங்கல்ய திட்டமும் ஒன்று என்றும் அவர் கூறினார்.

தாலிக்கும் தங்கம் திட்டத்தின் படி குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உதவி கிடைக்கும். இதற்காக தமிழக அரசு ரூ.148.22 கோடி செலவிடும். திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் கொடுப்பதுடன், 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவி வழங்கவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post Comment

Friday, May 27, 2011

தமன்னா பிட்


தமன்னா முதுகில் பிட் எழுதி வைத்து பரீட்சை எழுதுவது போன்ற காட்சியை ஒரு படத்தில் வைத்து, கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது தெலுங்கு படமொன்று! 16 பிட் போஸ்டர்கள் செய்யாத பப்ளிசிட்டியை சமீபத்திய கலாச்சாரப்படி பொதுநல வழக்குகள் செய்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த இந்த புது டெக்னிக் இப்போது தெலுங்கு சினிமாவுக்கும் தாவியிருக்கிறது. தெலுங்கில் வெளியான 100 பர்‌சென்ட் லவ் என்ற படத்தில் ஒரு காட்சி. கதைப்படி நாயகி தமன்னாவின் வெள்ளை வெளேர் முதுகில் பிட் எழுதி வைத்துக் கொண்டு பின்னால் இருந்து அதை பார்த்து பார்த்து எழுதுவாராம் நாயகன் நாக சைதன்யா. அடிக்கடி அவர் தமன்னாவின் பனியனை தூக்கி தூக்கி பார்ப்பதை கண்டித்து சில பொதுநல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளன.

பொதுநல அமைப்பின் ஆக்ரோஷ ஆர்ப்பாட்டத்தால் 100 சதவீத லவ் வசூலை வாரி குவித்து விட்டதாம். குறிப்பிட்ட அந்த கிளுகிளு காட்சியை நீக்க உத்தரவு போட்ட பிறகும் கூட கட்டுக்கடங்காமல் திரிகிறதாம் ரசிகர்கள் கூட்டம். கலெக்ஷனை அள்ள இந்த புது டெக்னிக் உதவும் என நினைக்கும் பட அதிபர்கள் தங்களது படத்தில் மேற்படி காட்சியைப் போல ஒரு பிட் காட்சியை சொருகி, கண்டன அறிக்கை வெளியிடுவதற்காகவும், பொதுநல வழக்கு தொடருவதற்காகவும் சமூக நல ஆர்வலர்களை வாடகைக்கு பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுத‌ல் தகவல்.

Post Comment

Thursday, May 26, 2011

இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு- நடந்தது என்ன

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில், இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத் தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ்(18).இவர் இந்தாண்டில், அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிப்பதற்காக சேர்ந்தார். பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பியதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த பிப்., 8 ல் விசாரணைக்குப் பின், போலீசாரால் கைது செய்யப்பட்டு, 24 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட அரசுத் தரப்பு வக்கீல், கிருத்திகா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அதற்கான ஆவணங்களை நீக்கிய பின்பும் கூட, அவர் பள்ளியில் இருந்து ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.குற்றச்சாட்டுகள் பொய் என தெரிந்த பின், பள்ளியில் இருந்து ஒரு மின் அஞ்சல் அவருக்கு வந்தது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அவர் பள்ளிக்கு மீண்டும் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:எனக்கு தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால், போலீசார் அதைப் பொருட்படுத்தாமல் என்னை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்த ஒரே ஒரு கழிவறையைக் கூட என்னைப் பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் என்னை காக்க வைத்தனர். அதன் பின், எல்லோர் முன்பும் அக்கழிவறையைப் பயன்படுத்த வேண்டியவளானேன்.என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பிய சீன மாணவனை, அவர்கள் ஏன் கைது செய்யவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னை கைது செய்யும்படி, பிரின்சிபால் கடுமையாக நிர்பந்தம் செய்தார் என்று மட்டும் தெரியும்.இவ்வாறு கிருத்திகா தெரிவித்தார்.

கிருத்திகாவின் வக்கீல் ரவி பத்ரா இதுபற்றி கூறியதாவது:கிருத்திகாவை 24 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் வைத்திருந்தது, சர்வதேச, அமெரிக்க மாகாண மற்றும் நியூயார்க் நகர சட்டங்களுக்கு விரோதமானது.அவரது தந்தை தேபாஷிஷ் பிஸ்வாசுக்கோ, தூதரக தலைமை அதிகாரி பிரபு தயாளுக்கோ கூட இந்த கைது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.அவருக்கு தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால், அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.இந்திய தூதரக அலுவலக தலைமை அதிகாரி பிரபு தயாள் கூறுகையில்,"தூதரக பாதுகாப்பு என்பது அதிகாரிக்கு மட்டும் தான் உண்டு. அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடையாது' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் நீதி கிடைத்த பின், இந்தியா திரும்பப் போவதாக கிருத்திகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

Post Comment

ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூபாய்க்கு போன் பில்

சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்தவர் நிசார் அகமது. "பாவா டெவலப்பர்ஸ்' என்ற பெயரில் அரும்பாக்கத்தில் அலுவலகத்தை வைத்து, ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர், தனியார் மொபைல் நிறுவனம் ஒன்றில், "ஐவிஆர்' (இன்டர் ஆக்டிவ் வாய்ஸ் ரெக்கார்டர்) முறைப்படி, அலுவலகத்திற்கு போன் இணைப்பு வாங்கினார். ஒரு மாதம் 7,485 ரூபாய் பேசிக் கொள்ளும் வசதி கொண்டது.இவருக்கு ஏப்., 27ம் தேதியிட்ட டெலிபோன் பில் வந்தது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரையிலான இந்த பில் தொகை 5.67 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. மே 16ம் தேதி ஒரே நாளில் 5.67 லட்சம் ரூபாய்க்கு பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நிசாருக்கு தலையைச் சுற்றியது. ஆப்கானிஸ்தான், தைவான், மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் அழைப்புகள் போயிருந்தன.

இதனால் பதறிப்போன நிசார், மே 20ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் அளித்தார். "சாட்டலைட் உதவியுடன் மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார். இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மே 18ம் தேதியிட்டு 106 பக்கங்கள் கொண்ட ஒரு பில் வந்தது. அதில், ஏப்., 17 முதல் மே 18 வரையிலான நாட்களுக்கான பில் தொகை 35.47 லட்சம் எனவும், அதற்கு முந்தைய பில்லுடன் சேர்த்து 41.14 லட்ச ரூபாய் கட்ட வேண்டுமென்று இருந்தது. வழக்கம் போல் அந்த பில்லிலும், அயல் நாடுகளுக்கு சாட்டலைட் உதவியுடன் பேசியிருந்தனர். இதனால், நிசார் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் உறைந்தனர்.

இதுகுறித்து நிசார் கூறியதாவது:நான் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறேன். இதுவரை வெளிநாட்டிற்குச் சென்றதும் இல்லை; உறவினர்களும் அங்கு இல்லை. என் அலுவலக போனை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் மர்ம நபர்கள் பேசியுள்ளனர். தனியார் தொலைபேசி நிறுவனத்தினர் என் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். என் நிறுவனத்தின் மொத்த வரவு செலவே மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் தான். இதைச் சொன்னதும், அந்த தொலைபேசி நிறுவன அதிகாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.ஆனால், அடுத்த மாதமே 41 லட்சம் ரூபாய்க்கு நான் பேசியதாக பில் வந்துள்ளது. பயங்கரவாதிகள் யாரும் என் போன் எண்ணை பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் பில் வந்தபோதே, கடந்த மாதம் 20ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அடுத்த பில் வந்து என்னை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளேன்.இவ்வாறு நிசார் கூறினார்.

Post Comment

Wednesday, May 25, 2011

செல்போனுக்கு பரிசு விழுந்ததாக கூறி கோடிக்கணக்கில் மோசடி


ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில் உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில் பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8 ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம் பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத், விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது. அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.

Post Comment

நாக்கை காணிக்கை செலுத்திய சரிதாவுக்கு அரசு வேலை


ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து தனது நாக்கைத் துண்டித்து காணிக்கை செலுத்திய சரிதா என்ற பெண்ணுக்கு முதல்வர் ஜெயலலிதா அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா, தேனி மாவட்டம் வீரபாண்டியிலுள்ள அருள்மிகு கெளரியம்மன் திருக்கோயிலில் 13.5.11 அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார்.
இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், இவர் கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்தியதை அறிந்ததும், ஆண்டிப்பட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டார்.இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதாவுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.சரிதா கணவனால் கைவிடப்பட்ட நிலையில், அவரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதாம் அளிக்கும் வகையில், சத்துணவு துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும், எம்.ஜி.ஆர் அறக்கட்டளையின் மூலம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195/- ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார். அத்துடன், எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.இதைத் தவிர, அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையை எம்.ஜி.ஆர் அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கவும் ஆணையிட்டார்.இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சரிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Post Comment

Tuesday, May 24, 2011

சிஸ்கோ தேர்வு எழுதி 10வயது சிறுமி சாதனை


இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

Post Comment

Monday, May 23, 2011

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்


தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார்.

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார். சென்னை நோக்கி காரில் வந்த அவருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் பயணித்தார்.
இவர்களது கார் சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென முன்னாள் சென்ற பஸ் மீது கார் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அமைச்சர் சிவபதிக்கு விபத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மரியம் பிச்சை முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். முதல் முறையிலேயே அவர் அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

60 வயதான மரியம் பிச்சை ஆரம்பத்தில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். தியேட்டர் ஒன்றையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பாளராக செயல்பட்ட இவர் 27வது வார்டு கவுன்சிலராக இருந்தார். தேர்தலில் நிற்பதற்காக அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.விபத்தில் உயிரிழந்த மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Post Comment

மு.க.அழகிரியை காணவில்லை-இதுதான் தில்லு


மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை மு.க.அழகிரிக்கு பிடித்த விஷயம் போஸ்டர்தான்.இதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.

பெரிதாக என்று சொல்வது கூட சிறிய விஷயம் , பிரம்மாண்டமாக போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டுவார்கள்,அடித்த போஸ்டரில் 50 சதவீதத்தை அவர் குடியிருக்கும் மதுரை டி.வி.எஸ்.,நகர் பகுதியில் ஒட்டுவார்கள்.அவர் பார்வை படும்படியான சுவரானது, ஊருக்கு போக வழிகாட்டும் பெயர் பலகையாக இருந்தால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் ஒட்டுவார்கள்.ஆனால் மறந்தும் கூட அவரது வீட்டு சுவரில் ஓட்டமாட்டார்கள்,காரணம் அண்ணன் கோவிச்சுக்குவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணன் வீட்டு சுவர் மட்டும் பாழாகிவிடக்கூடாது என்ற கவலை ஒரு பக்கம்.

இப்படி போஸ்டர் ஒட்டுபவர்களை, கருணாநிதி முன்னிலையிலேயே துரைமுருகன் போன்றவர்கள் அரசு விழாவிலேயே, "போஸ்டர் கிங்' என்று பாராட்டி பட்டம் கொடுத்து வேறு மகிழ்வார்கள். இத்தயை பாராட்டிற் கு பிறகு மதுரையில் போஸ்டர் ஒட்டுவதற்கு கேட்கவேண்டுமா என்ன.?அதுவும் சமீபத்தில் நடந்த அவரது இல்ல திருமண விழாவின் போது, மதுரையில் போஸ்டர் இருந்ததா அல்லது போஸ்டருக்குள் மதுரை இருந்ததா என்று வித்தியாசப்படுத்திப்பார்க்க முடியாதபடி காணப்பட்டது.சரி ஏதோ "குழந்தைத்தனம்' மாறாமல் போஸ்டரில் சந்தோஷம் கொள்கிறார், இருந்துவிட்டு போகட்டும் என்ற நிலையில்; இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது இருந்தால், அவர்களை அசிங்கப்படுத்தவும் இந்த போஸ்டர் கலாச்சாரத்தை, இவரது ஆதராவாளர்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான் மகா கொடுமை.இது மாதிரி போஸ்டர்களை இவர் ஒரு போதும் கண்டித்தது இல்லை.மாறாக மறைமுக ஊக்கப்படுத்துகிறார் என்று எண்ணும்படியாக முதல் நாள் நூற்றுக்கணக்கில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மறுநாள் ஆயிரக்கணக்கில் ஒட்டப்படும்.அடுத்தவரை களங்கப்படுத்தும், கண்ணியக்குறைவை ஏற்படுத்தும், கவலையை உண்டாக்கும் இது போன்ற போஸ்டர்களை மதுரை போலீசாரும் கண்டுகொள்வது இல்லை.

இப்படி போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்திய மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக ஒரு போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் வலம்வருகிறது.அந்த போஸ்டரை ஒட்டியவர் அழகிரி ஆதராவாளர்கள் போல பொய், புனை பெயரில் ஒளிந்துகொள்ளவில்லை., தனது பெயர்,படம் மட்டும் மொபைல் எண்ணை போட்டு தைரியமாக ஒட்டியுள்ளார்.போஸ்டரில் உள்ள வாசகங்களில் கிண்டலும்,கேலியும் கொப்பளிக்கிறது.

காணவில்லை
2011 ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க.,என்ற கட்சியே காணமால் போய்விடும் என்று கூறிய ,மு.க.அழகிரியை காணவில்லை
விபரம்
பெயர் : மு.க.அழகிரி
அப்பா பெயர் :தட்சிணாமூர்த்தி(எ)கருணாநிதி
பிறந்தது :சென்னை,கோபாலபுரம்
வளர்ந்தது :மதுரை அவணியாபுரம்
வேலைபார்ப்பது :ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர்
சாதனை :தா.கிருஷ்ணன் கொலை,ஆலடிஅருணா கொலை....


இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்
இவண்எம்.ஜி.ஆர்.வாசன்,பகுதிகழக செயலாளர்,திருவல்லிக்கேணி.9941172464

இப்படிப்பட்ட வாசகங்களுடன் வண்ணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை பலரும் நின்று படித்து செல்கின்றனர்,அதிலும் ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர் வேலை என்ற வார்த்தையை படித்துவிட்டு சிரிக்கின்றனர்.எது,எப்படியோ தலைவலியோ,முதுகுவலியோ தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள், அது போல மற்றவர்களை போஸ்டர் மூலம் புண்படுத்துவதால் ஏற்படும் வேதனை எப்படி இருக்கும் என்பதை இப்போது அழகிரி நிச்சயம் உணர்ந்து இருப்பார் என்று நம்பலாம்

Post Comment

Saturday, May 21, 2011

மூலிகை அறிமுகம் -10-குப்பைமேனி


1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.

2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.

3) குடும்பம் :- EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில்
ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட
குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.

6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.

இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

நாடாப்பூச்சி, புழு - குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.

புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

Post Comment

Friday, May 20, 2011

கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு ;கனிமொழி கைதாகிறார்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனியமாழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .

கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.

“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.

பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.

Post Comment

ரூ.33 கோடிக்கு ஆசை காட்டி ஏமாற்றும் இணையதளம்


"ஒரு கையில், 17 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மறு கையில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏ.டி.எம்., கார்டு கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறி, 17 ஆயிரம் ரூபாய் பறிக்கும் இணையதள மோசடி, தமிழகத்திலும் தடம் பதித்துள்ளது.

தமிழகத்தில், தற்போது நூதன மோசடி கும்பல், பலரையும் ஏமாற்ற துவங்கியுள்ளது. பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது. அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 33 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர். இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

Post Comment

Thursday, May 19, 2011

திரை அரங்கில் அரங்கேறிய உண்மை காதல்

Post Comment

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு மாஸ்டர் பிளான் ஆசாமி கண்டுபிடிப்பு

(click the image to enlarge)

Post Comment

Wednesday, May 18, 2011

நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட்?


மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நோக்கியாவின் ஹேண்ட்செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, மொபைல் ரிவியூ பத்திரிகை ஆசிரியர் தனது ப்ளாகில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இதுகுறித்த டீல் எட்டப்படும் எனத் தெரிகிறது. மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிள் ஐபோனுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது விண்டோஸ் மொபைல். அதற்கு நோக்கியாவை வாங்குவது உதவும் என நம்புகிறது.
மேலும் மொபைல் ஹேண்ட்செட் வடிவமைப்பில் இன்னும் அழகிய வடிவமைப்பைக் கொடுக்கவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட். நோக்கியாவும் மைக்ரோசாப்டும் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து செயல்படப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொன்னது இந்த மொபைல் ரிவ்யூ பத்திரிகைதான் என்பதால், இப்போது அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புதிய செய்திக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

Post Comment

தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது :ஜெ உத்தரவு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

Post Comment

டிஜிபியிடம் வடிவேலு மனு


தே.மு.தி.க.வினர் தொடர்ந்து தாக்கி வருவதால் தனது குடும்பத்துக்குப் பாதுகாப்பு தேவை என தமிழக டி.ஜி.பி.யிடம் நடிகர் வடிவேலு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன்.தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர்.இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது. எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன.எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,தே.மு.தி.க.வினரே முழு காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரசாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Post Comment

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்-பழ. நெடுமாறன்


மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.


1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.


தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.



உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?
கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.
பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?
""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்''

Post Comment

Tuesday, May 17, 2011

கலப்பட பெட்ரோல் விற்பனை

காங்கயம் மற்றும் வெள்ளகோவில் இடைப்பட்ட பகுதி நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் கூட இல்லை. இது திருச்சி, கருர் செலூம் பிரதான வழித்தடமாக உள்ளது. காங்கயம் தாண்டி வண்டி நிண்றால் 15 கிலோ மீட்டருக்கு மேல் வந்து வெள்ள கோவிலில் உள்ள பங்க்குகளில் தான் பெட்ரோல் நிரப்ப வேண்டும். இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர் பலசரக்குக்கு கடைகள். பங்க் இல்லாத இடங்களில் பலசரக்கு கடைகளில் பெட்ரோல் விற்பனை கனஜோராக நடைபெறுகின்றன்றது. நாளொன்றுக்கு சுமார் 20 பேராவது பெட்ரோல் தீர்ந்து வாகனங்களை உருட்டிச் செல்லும் நிலை உள்ளது.

அவசரத்தால் அவசியமாகிறது...

வாகன ஒட்டிகளின் அவசரம் மற்றும் அவசியத்தை உணர்ந்த பலசரக்கு மற்றும் சைக்கிள் கடைகள் போன்ற கடைகள் பங்க்கில் பெட்ரோல் வாங்கி வந்து அனுமதியின்றி விற்கின்றனர். வெள்ள கோவில் ஒலப்பாளையம் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பெரும்பாலான சைக்கிள் கடைகள், பலசரக்கு கடைகளில் கேன்களில் மொத்தமாக பெட்ரோல் வாங்கி வந்து, அதனுடன் மண்ணெண்ணெய் கலந்து மறைத்து வைத்துக் கொள்கின்றனர். பெட்ரோல் இல்லாமல் தவிக்கும் வாகன ஒட்டிகளை மடக்கி, கடைகளில் வைத்திருக்கும் கலப்பட பெட்ரோலை விற்கின்றனர். சுற்றுப் பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் இல்லாததது, குடியிருப்பு பகுதியும் அதிகம் இல்லாமல் பாதுகாப்பாக எங்கேயும் வண்டியை நிறுத்தி விட்டுச் செல்லவும் முடியாமல், நெடுஞ்சாலையில் அல்லாடும் வாகன ஒட்டிகளுக்கு இந்த கலப்பட பெட்ரோலை விற்கின்றனர். இதனால் வாகன ஒட்டிகளின் அவசரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லிட்டருக்கு 5 ரூபாய் கட்டணம் அதிகமாக விற்கின்றனர்.

நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

அதிக விலை எதிர்த்து வாகன ஒட்டிகள் கேட்டால், பெட்ரோல் பங்க் சென்று நியாயமான விலையில் போட்டுக் கொள்ளுங்கள் இங்கு தரப்படமாட்டாது என்ற பதில் கடைக்காரர்களிடம் இருந்து எதிரொலிக்கிறது. வேறுவழியின்றி அவசரத்துக்கு அதிக விலை கொடுத்து பெட்ரோலை வாங்கினாலும், கலப்பட பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்கள் விரைவில் பழுதடைகின்றன, பெட்ரோல் அடைப்பு, இன்ஜின்னும் விரைவில் பழுதடைகின்றன.

மிகவும் ஆபத்தான எரிபொருளை அனுமதியின்றி விற்பதால் அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்துக்கு உத்தரவாதம் தான். இப்படி அனுமதியின்றி பெட்ரோல் விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை விரைவில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

Post Comment

Monday, May 16, 2011

முதல் அமைச்சர் - ஆக ஜெயலலிதா பதவி ஏற்பு - வீடியோ




ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்த ஒரு பார்வை...

ஓ.பன்னீர் செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 60 வயதாகும் பன்னீர்செல்வம், பி.ஏ. படித்தவர். பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.முதல் முறையாக 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது 6 மாத காலத்திற்கு முதல்வர் பதவியை வகித்தார் ஓ.பன்னீர் செல்வம்.பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது பன்னீர் செல்வம் பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
எளிமையானவராக அறியப்படும் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். ஜெயலலிதா எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அளவுக்கு தீவிரமான அதிமுக விசுவாசியும் கூட.இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.

கே.ஏ.செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதி செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர்.
அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.
விவசாயியானசெங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் அமைச்சராவது இது 2வது முறையாகும்.
கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.

ஆர். விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டார். இந்த முறை மின்சாரத் துறை அமைச்சராகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்.சொந்த செல்வாக்குடன் கூடிய வெகுசில அதிமுக தலைவர்களில் இவரும் ஒருவர். 62 வயதான விஸ்வநாதன் பிஎஸ்சி படித்தவர். திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருக்கும் விஸ்வநாதனுக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா, ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

கே.பி.முனுசாமி

59 வயதான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். மிகவும் முக்கியமான உள்ளாட்சித் துறையை இவருக்குக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.பி.ஏ., பி.எல் படித்துள்ளமுனுசாமி கவுண்டர் ஆவார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சி.சண்முகவேலு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகவேலு. தொழில்துறை அமைச்சராகியுள்ளார். எம்.ஏ. படித்துள்ள இவர் கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்.

ஆர்.வைத்திலிங்கம்

ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம். வீட்டு வசதித்துறை அமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை இவர் ஏற்பது இது 2வது முறையாகும்.பி.ஏ. படித்துள்ள வைத்திலிங்கம் 2001ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சரானார். பின்னர் வனத்துறைக்கு மாற்றப்பட்டார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார். அமைச்சராவது இது அவருக்கு முதல் முறை.

எஸ்.கருப்பசாமி

சங்கரன்கோவிலைச் சேர்ந்த கருப்பசாமி மிகவும் எளிமையானவர். கால்நடைத்துறை அமைச்சராகியுயள்ளார். கருப்பசாமி அமைச்சராவது இது 2வது முறையாகும்.

பி.பழனியப்பன்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து வென்று முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே உயர் கல்வித்துறை என்ற உயரிய துறையைப் பெற்றுள்ளார் பழனியப்பன்.எம்.எஸ்.சி படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார். மனைவி, ொரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சி.வி. சண்முகம்

ஜெயலலிதாவின் படைத் தளபதிகளில் இவரும் ஒருவர். பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களில் இவரும் ஒருவர். பாமகவின் தீவிர பாலிட்டிக்ஸை சமாளித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்.கடந்த ஆட்சியில் இவர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகியுள்ளார்.இவரது தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பியாக இருந்தவர்.

செல்லூர் ராஜு

முதல் முறையாக அமைச்சராகியுள்ளார் செல்லூர் ராஜு. மதுரை திமுக ஜாம்பவான் மு.க.அழகிரியின் வீடு அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில் அபார வெற்றி பெற்று அதற்குப் பரிசாக அமைச்சர் பதவியைப் பிடித்துள்ளார் ராஜு.முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த செல்லூர் ராஜு, உள்ளூர் அதிமுகவினரின் போட்டிகளையும் சமாளித்து அதிமுகவில் முக்கிய இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.டி.பச்சமால்

கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமாலுக்குச் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தம்மத்துக்கோணமாகும்.
1979ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் பச்சமால், அதிமுகவில் குமரி மாவட்ட கிழக்கு செயலாளராக செயல்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகியுள்ள பழனிச்சாமி அடிப்படையில் ஒரு சிவில் என்ஜீனியர் ஆவார். பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி பின்னர் அதை உதறி விட்டு அதிமுகவில் இணைந்தார்.நீண்ட காலமாக அதிமுகவில் செயல்பட்டு தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். சேவல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஜெயலலிதா அணி சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்களில் இவரும் ஒருவர்.

எஸ்.பி.சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் சண்முகநாதன். தற்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார்.இவர் கடந்த 2001-ம் ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்றவர். அப்போது கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கே.வி.ராமலிங்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கம் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராகியுள்ளார் ராமலிங்கம்.மடத்துக்குளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராமலிங்கத்திற்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி

முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு அமைச்சராகியுள்ளார் எஸ்.பி.வேலுமணி.முதல் முறையாக இவர் அமைச்சராகியுள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ள வேலுமணி, எம்.ஏ. எம்.பில் படித்தவர். குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.

டி.கே.எம்.சின்னையா

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைகிறார் சின்னையா. 48 வயதான பி.ஏ. பட்டதாரியான இவர் தாம்பரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதிமுக நகரச் செயலாளாக இருந்து வருகிறார்.நகராட்சி கவுன்சிலராக செயல்பட்டு வந்த சின்னையா, சட்டசபைத் தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது அமைச்சர் பதவியும் இவரைத் தேடி வந்துள்ளது.

மு.சி. சம்பத்

2வது முறையாக அமைச்சராகியுள்ளார் மு.சி.சம்பத். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான சம்பத் கடலூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினராகியுள்ளார்.கடந்த 2001 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பி.தங்கமணி

முதல் முறையாக அமைச்சராகியுள்ள தங்கமணிக்கு, வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.

ஜி.செந்தமிழன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 2வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ள செந்திழன், செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.வழக்கறிஞரான இவர் அதிமுகவில் மாணவர் அணியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தென் சென்னை மாவட்ட செயலாளராக செயல்படும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கோகுல இந்திரா

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான கோகுல இந்திரா, சிவகங்கையில் வக்கீலாகப் பணியாற்றியவர். அரசியலில் படிப்படியாக முன்னேறிய கோகுல இந்திரா சிறந்த பேச்சாளர். இதனால் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார் ஜெயலலிதா. 2001 முதல் 2007 வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றிய கோகுல இந்திரா, அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாகி அமைச்சராகியுள்ளார்.

செல்வி ராமஜெயம்

புவனகிரி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ராமஜெயம், 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவியாக இருந்தவர். தற்போது சமூக நலத்துறை அமைச்சராக முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

பி.வி.ரமணா

முதல் முறையாக அமைச்சராகியுள்ள ரமணா, எம்.எல்.ஏ. பதவிக்கு வந்துள்ளதும் முதல் முறையாகும்.கம்மவார் வகுப்பைச் சேர்ந்த இவர் பார்மஸி படித்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

ஆர்.பி.உதயக்குமார்

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த உதயக்குமார் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வழக்கறிஞரான உதயக்குமார் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவர் அணிச் செயலாளராக செயல்பட்டவர்.மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்.முதல் முறையாக எம்.எல்.ஏவாகியுள்ள உதயக்குமார், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார்.

ந.சுப்பிரமணியன்

கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியைச் சேர்ந்தவர். சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் முதல் முறையாக எம்எல்.ஏவாகி அமைச்சர் பதவியையும் அடைந்துள்ளார்.

செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியிலிருந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உள்ளூர் அதிமுகவில் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி பெற்று தற்போது அமைச்சர் பதவி என்ற ஜெயலலிதாவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.கரூர் மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, பி.காம். பட்டதாரி. 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தற்போது அமைச்சர் பதவியை எட்டியுள்ளார்.

மரியம்பிச்சை

கே.என். நேருவை படு தோல்வியடையச் செய்ததால் பரிசாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார் மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மரியம் பிச்சை, பி.ஏ. படித்தவர். இவர் எம்.எல்.ஏ ஆவதும் இதுவே முதல் முறையாகும்.

கே.ஏ.ஜெயபால்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சராகியுள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ள ஜெயபால், அமைச்சர் பதவிக்கு வருவதும் இதுவே முதல முறையாகும். நாகை மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பையும் தற்போது ஜெயபால் வகித்து வருகிறார்.

இசக்கி சுப்பையா

அம்பாசமுத்திரம் தொகுதியில், ஆவுடையப்பனை வீழ்த்தி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவரான இசக்கி சுப்பையா சட்ட அமைச்சராகியுள்ளார்.முதல் முறையாக எம்.எல்.ஏவான இவர் பெரும் தலையை வீழ்த்தியதால் அமைச்சர் பதவியையும் பரிசாக பெற்றுள்ளார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

புத்திசந்திரன்

நீலகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தி சந்திரன், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுற்றுலா அமைச்சராகியுள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் உயர்வது இதுவே முதல் முறை என்பதால் படுகர் சமுதாயமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


சி.த.செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி தொகுதியிலிருந்து வென்றுள்ள செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகியுள்ளார். காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவரான செல்லப்பாண்டியன் அமைச்சர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.எம்ஏ படித்துள்ள இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர்.

டாக்டர் வி.எஸ்.விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு
மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வேலூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஞானசேகரனை வீழ்த்தியதால் அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

என்.ஆர்.சிவபதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள சிவபதி 1963-ல்
பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார்.1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை
செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார்.

முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார் சிவபதி.

Post Comment

முதல்வர் ஜெ அவர்களின் கவனத்திற்கு


மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளதைத் தொடர்ந்து தொண்டர்கள் குறிப்பாக புது மாப்பிள்ளையாக மாறியுள்ள தேமுதிகவினர் ஆங்காங்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்காக போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு இவற்றுக்கு ஆரம்பத்திலேயே ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க முயல்வது நல்லது.

சாதாரண வெற்றி பெற்றாலே கட்சிக்கார்களைப் பிடிக்க முடியாது. தற்போது அதிமுக பெற்றுள்ள வெற்றி, குறிப்பாக தேமுதிகவுக்கு கிடைத்துள்ள வெற்றி மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. எனவே தேமுதிகவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.
தேர்தல் முடிவு வெளியான நாளன்று வாகனங்களை படு வேகமாக ஓட்டிக் கொண்டு அவர்கள் போன விதமும், பட்டாசுகளை ஆங்காங்கு வெடித்த விதமும் மக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் முகச் சுளிப்பையே ஏற்படுத்தியது.கையில் அதிகாரம் வரப் போகிறது, அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்ற பயமும் கூடவே மக்களுக்கு வந்துள்ளது.அதேபோல போலீஸாரும் தற்போது அதிமுகவின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

நேற்று ஜெயலலிதா தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள எம்.ஜிஆர் சிலை, பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்தையே நிறுத்தி விட்டனர் போலீஸார். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது. போக்குவரத்துப் போலீஸார் தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்ததாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒருபக்கம் வாகனங்களை சிக்கல் இல்லாமல் செல்ல வழி வகுத்து விட்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இப்படியா போக்குவரத்தை முடக்கி வைப்பது என்று அவர்கள் முனு முனுத்தனர். அதற்குள்ளேயே இப்படியா என்று அவர்கள் சலித்துக் கொண்டனர். கடந்த 1991 முதல் 96 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் தோல்வி அடைய இந்த போக்குவரத்துக் குளறுபடிகளும் ஒரு முக்கியக் காரணம்.சென்னை நகரில் ஜெயலலிதா எங்கு சென்றாலும் உடனே அந்தப் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் போலீஸார், ஜெயலலிதா போன பின்னர்தான் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அதிமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

தற்போது மிகப் பெரிய வெற்றியுடன் கோட்டைக்குத் திரும்பியுள்ள அதிமுக இந்த விஷயத்தில் மிகக் கவனமுடன் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆட்சி மீதும், அதிமுக மீதும் அதிருப்தியும் வந்து விடும் என்பதை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.நல்லாட்சியைத் தருவது மட்டும் ஒரு கட்சிக்கு முக்கியமானதல்ல. அவர்களையும் அறியாமல் கெட்ட பெயரை சம்பாதிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டியதும் அவசியமானது.அதேபோல ஆட்சி நம் கையில் என்ற மமதை தொண்டர்களுக்கும் வந்து விடாமல் இருப்பதும் முக்கியம். அதிமுகவினர் மட்டுமல்ல, முதல் முறையாக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள தேமுதிகவினரும் மிகுந்த கவனத்துடன், அடக்கத்துடன் இருந்து தாங்கள் இதுவரை பெற்றுள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வதும், அதை பலமாக்கிக் கொள்வதும் அவசியம்.

அதை விட்டு விட்டு 'வடிவேலுவை அடிப்போம்' என்ற ரீதியில் கிளம்புவது அவர்களுக்கு சமூகத்தில் நிச்சயம் நல்ல பெயரைக் கொடுக்காது.

அப்படி இல்லாமல் அதிமுகவினரும், தேமுதிகவினரும் அடிதடியில் குதித்தால், இவங்களுக்கு திமுக பரவாயில்லையே என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளது.

Post Comment

Saturday, May 14, 2011

பேஸ்புக், ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை ஏமாற்றும் வேலைகள்


பேஸ்புக், ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்குவைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதை கணினி மென்பொருள் உற்பத்திப் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் நடத்தியுள்ள ஆய்வு காட்டுகிறது. ஃபிஷிங் என்பது பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையையின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த ஒருஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்துவந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து விட்டுள்ளன என்று இந்த புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Post Comment

2011-அதிமுக கூட்டணி அமோக வெற்றி (the Mummy Returns)

அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார்.அ.தி.மு.க. தான் போட்டியிட்ட 160 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவையும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்தக் கூட்டணி ஏறத்தாழ 200 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. திமுக 119 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக் கட்சியின் மூத்த அமைச்சர்களான க.அன்பழகன், வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், க.பொன்முடி, பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10 மணி அளவில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதியானது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அந்தக் கூட்டணியின் முன்னணி தலைவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.அ.தி.மு.க. 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது. தேமுதிக போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கருணாநிதி வெற்றி:திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகிய ஒரு சிலரைத் தவிர அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
கருணாநிதிக்கு இணையான அனுபவம் கொண்ட மூத்த தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனிடம் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
மூத்த அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு, பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றி கடைசிவரை இழுபறியாகவே இருந்தது.
இந்தத் தோல்வி திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.காங்கிரஸ் கட்சி மொத்தம் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னணியில் இருந்தது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஞானசேகரன், பீட்டர் அல்போன்ஸ், யசோதா ஆகியோர் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
தகர்ந்தது தி.மு.க. கோட்டை: திமுக கோட்டை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த சென்னை நகரம் இப்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது. சென்னை நகரில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தவிர மற்ற எல்லா தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றுபெற்றுள்ளது.
இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் மாநில ஆளுநர் எஸ்.எஸ். பர்னாலாவைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெற்றிச் செய்தியை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா, ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.வாக்கு எண்ணிக்கை தாமதம்: பல புதிய விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது வாக்குகளை எண்ணுவதற்கு காலதாமதமானது. இதனால் இரவு 9.30 மணி அளவில்தான் 201 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Post Comment

இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்



மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்று இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மருந்து, மாத்திரை, மருத்துவமனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்புபடுத்தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவமனைக்கு சென்று யாரும் பார்த்ததில்லை.மேலும் அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்று சமீபத்தில்தான் பேட்டியளித்திருந்தார். யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற்றில்தான் ரஜினி அதிக கவனம் செலுத்தி வந்தார். அரிசி உணவுகளை முற்றாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராணா படத்துக்காக அவர் உடலை மேலும் ஸ்லிம்மாக்கும் முயற்சியில் 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். 20 நாட்களில் இந்த அளவு எடையைக் குறைத்துள்ளார் ரஜினி. இதற்காக மருந்து மாத்திரை எதுவும் எடுக்கவில்லையாம். வெறும் நீர்ம உணவு மற்றும் கடுமையான யோகாசனத்தை மேற்கொண்டுள்ளார் ரஜினி.

இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெயிக்வாட் கூறுகையில், "ராணா படத்தில் ஒரு கேரக்டருக்காக தம்பி 20 கிலோ வரை எடையைக் குறைத்துவிட்டார். இதற்காக அவர் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதுதான் அவருக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அதை அசட்டை செய்துவிட்டு தொடர்ந்து அவர் படப்பிடிப்புக்குப் போனதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு அதிகரித்துவிட்டது. ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை...", என்றார்.

மதுவுக்கு 'பை' சொன்ன ரஜினி!!

ரஜினி எந்த அளவுக்கு மது அருந்துவார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. சில நேரங்களில் 10 பெக் வரை கூட போவது அவர் வழக்கமாம். ஆனால் அவரது 61வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட தினத்திலிருந்து குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டாராம் ரஜினி. இன்றுவரை ஒரு சொட்டு மதுவைக் கூட அவர் தொடவில்லையாம்.

கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் மதுப்பழக்கத்தை திடீரென கைவிட்டது காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும், இனி மதுவைத் தொடுவதில்லை, சிகரெட்டையும் முழுமையாக விட்டுவிடுவதாக ரஜினி உறுதியெடுத்துள்ளதை அவரது குடும்பத்தினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

இந்த ஆச்சர்யம், குடி மற்றும் மதுவை விடமுடியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப்பமாம். இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்!!


வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது மனைவி லதா தெரிவித்தார்.
வைரஸ் காய்ச்சல், நீர்ச்சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வில் இருக்கும் ரஜினியின் உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.
இதனால் செய்தியாளர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிந்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் லதா ரஜினிகாந்த் கூறியது:
""ரஜினியின் உடல் நிலை பற்றி மிகவும் மோசமான வதந்திகள் வந்துள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இப்போது குணம் அடைந்துள்ளார். ஓய்வில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதைப் பின்பற்றி அவரும் ஓய்வில் இருந்து வருகிறார்.
ரஜினி மிகவும் சுறுசுறுப்பான மனிதர், ஓரிடத்தில் உட்கார வைப்பது கடினம். ஆகவே அவரை கவனமாக பார்த்துக் கொள்கிறோம். கோடை காலத்தில் வழக்கமாக வெளிநாடுகளுக்குச் செல்வோம். "ராணா' படப்பிடிப்பை தொடங்குவதில் அவசரம் காட்டமாட்டோம். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை அறிந்தோம். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எங்களது வாழ்த்துகள்'' என்றார் லதா ரஜினிகாந்த்.

Post Comment

Thursday, May 12, 2011

மிகப்பெரிய கிரிமினல்


இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணம் சட்ட விரோதமான வகையில் ஒரு நிறுவனத்தின் உட்தகவல்களை தெரிந்து கொண்டு அதில் முதலீடுகள் செய்ததான குற்றசாட்டில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ளார்.
தனியாருக்கு சொந்தமான முதலீடுகள் எனப்படும் ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் கோடீஸ்வரரான ராஜ் ராஜ்ரட்ணம் மீது எட்டு வாரங்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஏகமனதாக அவர் குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளார்.

பல தசாப்தங்களில் அமெரிக்காவில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி வழக்கு என்று இது கூறப்படுகிறது. நிதி மோசடி மற்றும் சதிச் செயல் செய்ததாக 14 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ராஜரட்ணம் சட்டவிரோதமான வகையில், நிறுவனங்களில் ரகசியத் தகவல்களை பெற்று அறுபது மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டினார் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.இந்த வழக்கில் இடைமறிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பெருமளவில் சாட்சியங்களாக வைக்கப்பட்டன.

அமெரிக்காவில் சட்ட விரோதமான வகையில் உட்தகவல்களைப் பெற்று அதன் மூலம் இலாபம் ஈட்டும் பெரிய ஒரு வலையமைப்பு தொடர்பாக அமெரிக்க அரசு நடத்திய விசாரணைகளில் ஒரு பகுதியாகவே இந்த வழக்கு இருந்தது.அமெரிக்க அரசின் அப்படியான விசாரணையில் இதுவரை இருபத்தியோரு பேர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளனர்.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராஜரட்ணத்துக்கு 15 ½ ஆண்டு முதல் 19 ½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.அவர் மீதான 14 குற்றச்சாட்டுகளில் ஐந்து சதித்தீட்டம் தீட்டம் தீட்டியது, இதர 9 நிதி மோசடிகள் தொடர்பிலானது.எனினும் அவரது வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளனர்.

கடந்த 2003 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் ராஜரட்ணம் பெரும் நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் மூலம் உட்தகவல்களை பெற்று அதன் மூலம் சட்ட விரோதமான வகையில் 63.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலாபம் ஈட்டினார் என அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.கூகிள், இண்டெல், ஹில்டன் ஹோட்டல்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் இதில் அடங்கும்.பெரு நிறுவனங்களில் உள்ள உயரதிகாரிகளின் ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உட்தகவல்களை பெறும் ஒரு வழியை ராஜரட்ணம் ஏற்படுத்தியிருந்தார் அமெரிக்க அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் ஜோனதன் ஸ்ட்ரீட்டர் கூறியுள்ளார்.

Post Comment

Wednesday, May 11, 2011

ஸ்கைப்பை வாங்குகிறது மைக்ரோ சாஃப்ட்


இணையதளத்தின் மூலம் தொலைபேசி மற்றும் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ள வழி செய்யும் சேவையான ஸ்கைப்பை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எட்டரை பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 36 ஆண்டு கால வரலாற்றில் மிகப் பெரிய வர்த்தக் கொள்முதல் இதுவேயாகும்.ஸ்கைப்பின் மூலம் மாதமொன்றுக்கு நூற்றி எழுபது மில்லியன் மக்கள், இணையதளத்தின் வழியாக ஒலி மற்றும் ஒளி வடிவிலான உரையாடல்களை மேற்கொள்கின்றனர்.இதன் மூலம் இந்தப் பெருந்தொகையானவர்கள் மைக்ரோ சாஃப்ட் மென் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் கூடுவார்கள்.

ஸ்கைப்பை தனது எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு கன்சோல், அவுட்லுக் மின்னஞ்சல் செயற்பாடுகள் மற்றும் அதிநவீன தொலைபேசிகளின் பயன்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என மைக்ரோ சாஃப்ட் கூறியுள்ளது.ஸ்கைப்புக்கு உள்ள இளைமைத் தன்மை, அதை பலதரப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்துவது போன்ற நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும் என மைக்ரோ சாஃப்ட் நம்பக் கூடும் என பிபிசியின் தொழில்நுட்பச் செய்தியாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Post Comment

Tuesday, May 10, 2011

மூலிகை அறிமுகம் -9- கற்பூரவல்லி


1)வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

2)தாவரப்பெயர்- COLEUS AROMATICOS.

3)குடும்பம்-லாமியேசியே.

4)வளரும் தன்மை-இதன் தாயகம் இந்தியா. இதைப்பற்றிய குறிப்பிகள் நமது சித்தர்கள் ஓலைச்சுவடிகளில்இருந்ததாக சரித்திரம் சான்றியம்புகிறது. இந்தியாவின்அனைத்துப்பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும். இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறு மண் மற்றும் வண்டல் மண்,செம்மண், களிகலந்த மணற்ப்பாங்கான இரு மண் பாட்டு நிலம் ஏற்றது.6.5 - 7.5 வரையிலான கார\ அமிலத்தன்மை ஏற்றது.தட்ப வெப்பம் குறைந்தது 25* செல்சியஸ் முதல்35* செல்சியஸ் இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய 4 இலைகளுடன் கூடுய சுமார் 4 அங்குலம்நீளம் கொண்ட தண்டுகளை நட்டு நீர் பாச்சினால்ஒரு மாதத்தில் நாற்று வளர்ந்து விடும். 6 மாதத்தில் பூக் காம்புகள் உருவாகும் போதே அதனை அகற்றிவிடவேண்டும். சுமார் 8 மாதத்தில் இலைகள் முதிர்வடைகின்றன. அப்போதுதான் 'மென்தால்' சதவிகிதம்அதிகமாக்க காணப்படும்.

5)பயன்தரும் பாகங்கள் - தண்டு, இலைகள் ஆகியவை.

6)பயன்கள் - கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

Post Comment

Monday, May 9, 2011

சிம்புவின் ஒஸ்தி ( போலீஸ்) படங்கள்








Post Comment

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

சிங்கப்பூரின் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி 60% வீதமான வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் எதிர்க்கட்சி மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் சனிக்கிழமை நடைபெற்ற இத்தேர்தலில், நாட்டின் வெளியுறவு அமைச்சரின் ஆசனம் உட்பட ஏனைய சில ஆசனங்களை, எதிர்க்கட்சி கைப்பற்றிருப்பது அரசியல் ரீதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கியிருக்கிறது.


சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்கும் மக்கள் செயற்பாட்டு கட்சி, இத்தேர்தலிலும் 87 ஆசனங்களில் 81 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டது.

எனினும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சராக இருந்து வந்த ஆளும் மக்கள் கட்சியின் ஜோஜ் யோ முதன் முறையாக இத்தேர்தலில் தோற்றிருப்பது அவருடைய ஆதரவாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்திருக்கிறது.

இது சிங்கப்பூர் வரலாற்றில் புதிய மாற்றத்தை தோற்றுவித்திருக்கிறது. கடும் சவாலுக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இது தான் வாழ்க்கை என யோ கருத்து தெரிவித்துள்ளார்.


1965ம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திரமடைந்ததிலிருந்து, ஆளும் கட்சியின் அதிகாரத்தில் இருந்துவரும் சிங்கப்பூர் மக்கள், இம்முறை தேர்தலில் எதிர்க்கட்சிக்கு கணிசமான வாக்குகள் அளித்திருப்பது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்பதை மக்கள் விரும்புவதை காட்டுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.இவ்வாக்கெடுப்பில், நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக 93 வீதமானோர் வாக்களித்திருக்கின்றனர்.



Post Comment

வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது.


"மக்களிடம் உள்ள நீதி, நேர்மை குறைபாடு, வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது. ஊழலை ஒழிக்க, மக்கள் எளிமையாக வாழ பழக வேண்டும்,'' என்று, தமிழக தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

கரூரில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் துவக்க விழா நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா, இயக்கத்தைத் துவக்கி வைத்து பேசியதாவது:பல ஆண்டுகளாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்குப் பிறகு, லோக்பால் மசோதா வரைவு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கமிட்டியில் இடம்பெற்றுள்ளோர் மீது, சில குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஊழலை எதிர்க்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, பிரதமரின் கையில் தான் இருக்கிறது.மத்திய அரசு அளவில் மட்டுமல்லாது, மாநிலங்களிலும் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை லோக்பால் அமல்படுத்த வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மட்டுமல்லாது ஆப்ரிக்கா போன்ற ஏழை நாடுகளிலும் ஊழல் உள்ளது.

டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் இருக்கும் அரசு, நல்ல அரசாக இருக்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசின் பல துறைகளில் செயல்படுத்துவது இல்லை. ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் நடக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் எவ்வளவு நாட்களுக்குள் பதில் கிடைக்கும் என்பதை தெளிவாக அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.இந்திய பிரதமரே, "ஊழல், புற்றுநோய் போல் பரவியுள்ளது' என்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா, "இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் ஊழல் பரவியுள்ளது' என்றார்.

ஊழலுக்கு எல்லைகள் கிடையாது. அதனால், ஊழலை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கக் கூடாது. வறுமை உள்ள இடத்தில் தான் ஊழல் அதிகமாக உள்ளது.பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு தங்களது காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். பணம் இல்லாததால், ஏழைகள் தான் ஊழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா இடங்களிலும் ஊழலும், வறுமையும் கைகோர்த்து நடக்கிறது. மக்களிடம் உள்ள நீதி, நேர்மை குறைபாடு, வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது. ஊழலை ஒழிக்க, மக்கள் எளிமையாக வாழ பழக வேண்டும்.

ஊழலை வேரறுக்க, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஊழலுக்கு எதிரான போதனையை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்று குறிப்பிட்ட நபர்களை குறை சொல்லக் கூடாது.ஊழலுக்கு எதிரான மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்பட வேண்டும். நமக்குள் கட்டுப்பாட்டை வளர்க்க வேண்டுமே தவிர, யாரையும் மிரட்டக் கூடாது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

Post Comment

Saturday, May 7, 2011

பதிவர்கள் தினமும் பதிவு எழுதி பிரபலமாவது எப்படி ?


தாங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எழுதலாம் ,
நீங்கள் எங்காவது அடிவாங்கி இருந்தால் அதை பற்றி எழுதலாம் (வண்டுமுருகன் ),
பிரபலமான பதிவு ஒன்றிற்கு எதிராக கருத்து எழுதலாம் ,அப்பத்தான் நிறைய திட்டி கமெண்ட்ஸ் வரும் ,

பெண்களை சுலபமாக கவர்வது எப்படி என்று எழுதலாம் ?

ஆண்களை எப்படி ஏமாற்றுவது எண்டு எழுதலாம் ?

பதிவர்கள் தினமும் பதிவு எழுதி பிரபலமாவது எப்படி என்று எழுதலாம் !!

மொக்கை போடுவது எப்படி என்று எழுதலாம் ?

அன்றைய செய்திகளை படித்து அவற்றிற்கு தங்களின் கருத்துகளை எழுதுவது , பயனுள்ள குறிப்புகள் எழுதலாம் ,

மொக்கை சினிமா விமர்சனம் எழுதலாம் ,

மனைவியிடம் எப்படி நல்லவர் போல நடிப்பது என்று எழுதலாம் ?

பஸ்ஸில் டிக்கெட் வாங்காமல் போவது எப்படி என்று எழுதலாம் ?

தாவூத் இப்ராஹிமை எப்போ சுட்டு கொல்வார்கள் என்று கூட எழுதலாம் ??


தினமும் பதிவு எப்படி எழுதுவது என்று தெரியாம நான் யோசித்து கொண்டு இருகையில் சும்மா ஜாலியாக எழுதியது ,
தினமும் பதிவு எழுத யாராவது ஐடியா இருந்தால் சொல்லவும் @!

Post Comment

Friday, May 6, 2011

மூக்கால் செல்போனை உபயோகபடுத்தும் முறை

Post Comment

பாஸ்போர்ட் கொடுமை


ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வருவோரை கொத்தடிமைகள் போல உட்கார வைத்து கொடுமைபடுத்துவது தொடர்கிறது. மண்டல அளவில் திருச்சியில் மட்டுமே பாஸ்போர்ட் தொடர்பான பரிவர்த்தனைகள் இருந்தன. இதனால் பலரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில் மதுரையை மையமாக வைத்து பாஸ்போர்ட்டு தொடர்பான பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னும் இதை எளிதாக்க மாவட்ட தலைநகரங்களில் தனிப்பிரிவு ஏற்படுத்தினர். ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான பிரிவு செயல்படுகிறது. தமிழக அளவில் பெரும்பான்மையாக வெளிநாடுகளுக்கு செல்வோர் ராமநாதபுரத்தில் தான் உள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், கோளாறுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தினமும் குவிந்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய மரியாதை இருப்பதில்லை. குறுகிய இடத்தில் அனைவரையும் கைதிகள் போல உட்கார வைத்து விசாரணை நடத்துகின்றனர். இன்னும் சிலர் வெளியே தியேட்டரில் டிக்கெட் வாங்குவதை போல நிற்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். அருகில் அலுவலக கழிப்பறையில் துர்நாற்றத்திற்கு மத்தியில் வேறு வழியின்றி சிரமப்படுகின்றனர்.


இன்றைய நிலையில் அதிக வருமானம் கிடைக்கும் பிரிவாக பாஸ்போர்ட் இருந்தும், வருவோரை உட்கார சொல்ல ஒரு நாற்காலி கூட இல்லை. பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளில் சென்று தான் கொத்தடிமையாக பணியாற்றுகிறார்கள் என்றால், இங்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வரும் போதே கொத்தடிமையாக மாறிவிடுகின்றனர். இடுப்பில் துண்டு கட்டாத குறையாக அனைவரும் தரையில் உட்கார்ந்திருக்க, அதிகாரிகள் மட்டும் ஒய்யாரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர். தொடரும் இந்த கொத்தடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் முன்வந்து மனிதனை மனிதனாய் பாவிக்கும் முறைக்கு உத்தரவிட வேண்டும்.

Post Comment

Thursday, May 5, 2011

குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது-பாகம்-2

குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது - போன பதிவை நிறைய பேர் படித்தார்கள் ஆனா என்ன மூணு பேர்தான் ஒட்டு போட்டார்கள் , ஒரு கமெண்ட்ஸ் கூட வரவில்லை , உங்க கருத்தை கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் இன்னும் நாலு பேத்துக்கு உங்கள் அனுபவம் கூட உபயோகப்படும்.
*****************


பொதுவாக இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டில் பார்த்தோமானால் முதல் குழந்தையை விட இரண்டாம் குழந்தை கொஞ்சம் அறிவு அதிகம் , துரு துரு என்று இருப்பது , நன்றாக மற்றவர்களிடம் பழகுவது இது போன்ற பல வேறுபாடுகள் இருக்கும் , ஆனால் இந்த வேறுப்பாட்டை பெற்றோர்கள் நினைத்தால் சரியான முறையில் இருவரையும் சமமாக கொண்டு வந்து விடலாம் ,ஆனால் நடப்பது என்னவோ எதற்கு எதிராக தான் ?!
திருட்டுபயலே படத்தை கூட ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம் , பொதுவாக பெற்றோர்கள் செய்வது என்னவென்றால் குழந்தைகளை வைத்து கொண்டு மற்றவர்களிடம் பேசும்போது ,

"சின்னப்பையன் ரொம்ப தெறமசாலி அவன் எப்படியும் பொழச்சுக்குவான்"
" ஆனா பெரியவனா நினச்ச தான் ரொம்ப கவலையா இருக்கு "

இது போல பெற்றோர்கள் சொல்வதை அந்த குழந்தை கேட்கும்போது , அது எவ்வளவு வருத்தப்படும் , அந்த வருத்தம் காலப்போக்கில் தன்னுடைய சகோதரன் மீது தன்னை அறியாமல் ஒரு மனதளவில் ஒரு ஏற்ற தாழ்வு வந்துவிடும் , வெறுப்பு வந்துவிடும்.


சிறுவயதில் ஒரு குழந்தை தன்னுடைய திறமை மீது எந்த அளவு நம்பிக்கை வைக்கிறதோ அதை பொறுத்துதான் அதனுடைய வளர்ச்சி இருக்கும் , குழந்தை வளர வளர அது தன் வாழ்நாளில் சந்திக்கிற வெற்றி தோல்வியை வைத்து அந்த நம்பிக்கையின் வடிவம் கூடவும் குறையவும் ஆகும் ,
இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களது பங்கிற்கு
நீ ஒரு ஒதவாக்கர ,
நீ எப்படித்தான் பொழைக்க போறியோ ,
ஒன்னவிட சின்ன பையன் எவளோ திறமையா இருக்கான் !

இப்படியெல்லாம் திட்டும்போது அந்த குழந்தையின் திறமை மீது அதற்கு உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக சிதைய ஆரம்பிக்கும் , தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாத சூழலை வீட்டில் பெற்றோரே உருவாகும்படி ஆகி விடுகிறது

தொடரும் .........

Post Comment

London 2012 Olympics Offices








Post Comment

POPULAR

Followers

FOLLOW ME