NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Wednesday, May 30, 2012

சூர்யா புராணம் பாடும் ரசிகைகள்

காலேஜ் நாட்களில் உங்க பாட்டு டிவியில வந்தாலே உங்களைப் பார்க்க ஓடோடி வருவோம். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கூட டான்ஸ் ஆடிக்கிறேன். இதெல்லாம் என்ன வென்று பார்க்கிறீர்களா? நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் நடிகர் சூர்யாவிடம் பேசும் வார்த்தைகள்தான் இவை. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பியை கூட்டுவதற்காக ஒரு இளம் பெண் சூர்யாவை முத்தமிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இவற்றை பார்க்கும் போது தமிழ்நாட்டுப் பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா நடத்துகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போதுதான் இது அதிகமாக சூர்யா புராணம் பாடும் நிகழ்ச்சியாக மாறிக்கொண்டு வருகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் என்றாலும் சரி, லைப்லைனில் வருபவர்கள் என்றாலும் சரி ஒரே சூர்யா புராணம்தான். விஜய் டிவி நிறுவனத்தினர் அதை கொஞ்சம் எடிட் செய்தாவது போடலாம். இதில் சூர்யாவை குறை சொல்ல முடியாது அவர் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார் என்பதை முக்கியமாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடும்ப குத்துவிளக்குகள் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது அவர்களின் குடும்பத்தினர் எந்த அளவிற்கு இதை சகித்துக்கொள்கின்றனர் என்பது அவர்களின் குடும்பத்தினருக்கே வெளிச்சம்.

எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அதன் தொகுப்பாளரோ, ஒருங்கிணைப்பாளரோ அவர்களுக்கு என்று ஒரு எல்லை இருக்கும். ஆண் நடிகர் என்பதால் கொஞ்சம் அதிகமாக நடந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. இதேபோல இந்த நிகழ்ச்சியை ஒரு தமிழ் நடிகை நடத்தினால் அந்த நடிகையை கட்டிப்பிடிக்கவோ, நடனமாடவோ தமிழ்நாட்டு இளைஞர்களை அனுமதிப்பார்கள் என்றும் கூற முடியாது. எனவே நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்புங்கள் என்பது பாதிக்கப்பட்ட ஆண் நேயர்களின் கோரிக்கையாகும்.

Post Comment

Monday, May 28, 2012

சுக்குநூறான 20 கோடி ரூபாய் அஸ்டன் மார்ட்டின் கார்


சீனாவில் அதிவேகத்தில் சென்ற அஸ்டன் மார்ட்டின் சூப்பர் கார் விபத்தில் சிக்கி சுக்குநூறான தகவல் அந்நாட்டு  இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் கார்கள் உலக அளவில் புகழ்பெற்றதாக திகழ்கிறது. ஜேம்ஸ்பாண்ட் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்கள் என்பதால் இந்த கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது.

இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 என்ற கார் மாடலை ஸ்பெஷல் எடிசனாக அஸ்டன் மார்ட்டின் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்தது. வெறும் 77 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த காரை அஸ்டன் மார்ட்டின் டெலிவிரி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் டெலிவிரி கொடுக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் ஒன் 77 கார் ஒன்று அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. அதில் இருந்தவர் நிலை குறித்த விபரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.

ஒரு லாரியில் பின்னால் ஏற்றப்பட்ட அந்த காரின் முன்பக்கம் முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அதை ஒருவர் படமெடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த கார் டெலிவிரி கொடுக்கப்பட்டு வெறும் ஒரு வாரமே ஆகியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த லிமிடேட் எடிசன் அஸ்டன் மார்ட்டின்  ஒன் 77 காரில் 7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 522 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதிவேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த காரை ஓட்டியவர் கட்டுப்படுத்த தெரியாமல் ஓட்டியதால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட அஸ்டன் மார்ட்டின் கார் விபத்தில் சிக்கி சுக்குநூறாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post Comment

Wednesday, May 23, 2012

ஐ.பி.எல் வீரர்கள் லஞ்சம்

பன்றிக்கு பவுடர் போட்டு வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல்லில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.

என்னதான் பன்றிக்கு பவுடர் போட்டு சிங்காரித்து வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் நாலு கால் பாய்ச்சலில் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல் மெகா சீரியலில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். எந்த வடிவம் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் என்று ஐ.பி.எல் முதலாளிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் ஓதி வந்ததோ அதே வடிவம் தனது சிங்காரங்களைக் கலைத்தெறிந்து விட்டு அம்மணக்கட்டையாக நிற்பது தான் இதன் சிறப்பு.
கடந்த பதினான்காம் தேதி இந்தியா டி.வி என்கிற தனியார் தொலைக்காட்சி நடத்திய இரகசிய  விசாரணையை பகிரங்கமாக வெளியிடுகிறது. இரகசிய கேமராவில் பதிவான காட்சிகளில்  நான்கு ஐ.பி.எல் வீரர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசமாக விளையாட முன்வந்தது (ஸ்பாட் பிக்சிங்) அம்பலமானது. எந்தக் கூச்சமும் இன்றி, நோ பால் போட இன்ன ரேட், வைடு பால் போட் இன்ன ரேட் என்று சாவகாசமாக இந்த வீரர்கள் பேரம் பேசியதை நாடே பார்த்தது. விசாரணையை நடத்திய இந்தியா டி.வி, பிரச்சினை இது போன்ற ஒரு சில கருப்பு ஆடுகள் தான் என்பது போலவும், பிற சீனியர் வீரர்கள் காசு வாங்காத யோக்கியர்கள் என்றும் சொல்லி நெருப்பின் மேல் வைக்கோலைப் பரப்பி அமுக்கப் பார்த்தாலும் புகை இன்னும் அடங்கிய பாடில்லை.
இந்த ஐ.பி.எல் சீசனில் மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய்கள் அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி சூதாட்டத்தில் புழங்கும் பணத்தின் அளவு தான் இந்திய அளவில் தரகு முதலாளிகளின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. போட்டியில் ஒரு அணி தோற்கலாம்; ஆனால், அதன் உரிமையாளருக்குத் தோல்வியே கிடையாது என்பது தான் ஐ.பி.எல்லின் ஆதார விதி. இதனால் தான் தனது விமானக் கம்பெனி நட்டத்தில் மூழ்கிக் கிடப்பதாக வங்கிகளின் வாசலில் தட்டேந்தி நிற்கும் சாராய மல்லையா, ஆயிரக்கணக்கான கோடிகளை ஐ.பி.எல்லில் கொட்டுவதற்கும் வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயங்குவதில்லை.
இந்த ஸ்பாட் பிக்சிங் மேட்டரை ஆங்கில ஊடகங்கள் மென்று முழுங்குவதற்குள் அடுத்த பிடி அவலை அள்ளி அவர்கள் வாயில் திணிக்கிறார் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான். கடந்த பதினாறாம் தேதி தனது அணி ஆடிய மேட்ச் ஒன்றைக் காண மும்பை வான்ஹடே மைதானத்துக்கு தனது பிள்ளைகளோடு வந்த ஷாருக்கான், மேட்சின் முடிவில் தனது அணி வென்றதை அடுத்து கொஞ்சம் சோம பானத்தை உள்ளே விடுகிறார். பண போதையோடும் புகழ் போதையோடும் அதிகார போதையோடும் சாராய போதையும் சேர்ந்தது கிறுக்குப் பிடித்த குரங்கு கள்ளைக் குடித்த கதையானது. மேட்ச் முடிந்த பின் மைதானத்துக்குள் தனது நண்பர்களோடு சென்று கொண்டாடலாம் என்று உள்ளே நுழைய முற்பட்டவரை மைதானத்தின் காவலர் வழிமறிக்கிறார்.
அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது. கேமாராக்களின் வெளிச்சத்தில் அந்தக் காவலரிடம் மல்லுக்கு நிற்கும் அந்தக் காட்சிகளை நீங்கள் அவசியம் காண வேண்டும். பண பலம், அதிகார பலம் போதாதற்கு மும்பை தாதா உலகத்தோடு  தொடர்பு என்று ஷாருக்கானுக்கு இருக்கும் அத்தனை பின்புலத்துக்கும் அஞ்சாமல் அந்த காவலர் துணிச்சலாக விசில் அடித்து வாசலைக் காட்டுகிறார். அமெரிக்காவில் பணிந்து குழைந்து ‘வீரம்’ காட்டிய பாலிவுட்டின் பாதுஷாவுக்கு பாடம் நடத்தி வழியனுப்பியுள்ளார் அந்தக் காவலர்.
மேற்படி குழாயடிச் சண்டை ஊடகங்களில் நாறிக் கொண்டிருந்தாலும் கொஞ்சமும் கூச்சமின்றி தனது செயலை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான். இந்த சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றதையடுத்து ஷாரூக் மேல் நடவடிக்கை எடுத்திருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அடுத்து ஐந்தாண்டுகளுக்கு அவர் மும்பை வான்ஹடே மைதனத்துக்குள் நுழைய தடைவிதித்துள்ளது. குடித்து விட்டு பச்சையாக ரவுடித் தனத்தில் ஈடுபட்ட ஷாருக்கான் ஐ.பி.எல் அணியை நடத்தும் உரிமையை திரும்பப் பெறத் துப்பில்லாமல் ஐந்தாண்டுத் தடையென்று மயிலறகால் தடவிக் கொடுத்துள்ளனர்.
ஷாருக்-கான்
அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது
ஷாருக் விவகாரம் அடங்கும் முன் அடுத்தடுத்த அசிங்கங்கள் ஒவ்வொன்றாக மேலெழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. 18ம் தேதி லூக் போமெர்ஸ்பாக் என்கிற ஆஸ்திரேலிய ஐ.பி.எல் ‘வீரர்’ சித்தார்த் மல்லையா (சாராய மல்லையா மகன்) நடத்திய குடிவெறிப் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த அமெரிக்கப் பெண் சோகல் ஹமீதை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரம் வெடித்தது. அடுத்து இரண்டே நாளில், மும்பை ஜூஹூ பீச் அருகே ஒரு ஹோட்டலில் நடந்த ரேவ் பார்ட்டி எனப்படும் போதை மருந்துப் பார்ட்டியை ரெய்டு செய்த போலீசார், இரண்டு ஐ.பி.எல் ‘வீரர்களை’ கைது செய்துள்ளது. மேலும் பார்ட்டி நடந்த இடத்திலிருந்து கெண்ணாபீஸ், கொக்கெய்ன் போன்ற அதி வீரியமுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
லூக் அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சாராய மல்லையாவின் ஸ்ரேஷ்ட்ட புத்திரன் சித்தார்த் மல்லையா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை சரியில்லையென்றும், சம்பவம் நடந்த நாளில் அந்தப் பெண் தன்னிடம் ஓவராக இழைந்ததாகவும் டிவிட்டரில் எழுதியிருக்கிறார். பாலியல் கொடூரர்கள் வழக்கமாக தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க கடைபிடிக்கும் அதே உத்தியைத் தான் சித்தார்த்தும் கையாண்டிருக்கிறார். ஒரு வாதத்திற்கு அதை ‘உண்மை’ என்றே வைத்துக் கொண்டாலும் விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்து உரிமை உனக்கு எங்கே இருந்து வந்தது என்று கேட்கத் துப்பில்லாத ஊடகங்கள், அவரிடம் போய் ‘எதாவது விளக்குங்களேன்’ என்று வழிந்திருக்கின்றன. ஊடகங்களின் உண்மையான யோக்கியதையை நன்கு அறிந்து வைத்திருக்கும் சித்தார்த் மல்லையா, மூஞ்சியில் காறி உமிழ்வதைப் போல் நறுக்கென்று காரின் கதவை அடைத்து விட்டுச் சென்றுள்ளார்.
அளவற்ற பணம், புகழ் போதை, அதிகாரத் திமிர் மற்றும் மேட்டுக்குடி கொழுப்பு என்கிற கலவையான ராஜபோதையில்  உருண்டு புரண்டு திளைக்கும் தரகு முதலாளிகளும் அவர்கள் வீட்டுச் செல்லக் குட்டிகளும் உண்மையில் தங்கள் சொந்த வாழ்வில் பின்பற்றும் அறம் என்னவென்பதை இந்த ஐ.பி.எல் அசிங்கங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சித்தார்த் மல்லையாவுக்கு சற்றும் சளைக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் வாரிசு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் மும்பையில் இரவு நேரம் கெட்ட நேரத்தில் சரக்கு சப்ளை செய்யவில்லை என்று ஒரு ஹோட்டலில் தகராறு செய்து, தட்டிக் கேட்க வந்த போலீசாரையும் தாக்கியதாக செய்திகள் வெளியானது.
ஐ.பி.எல் என்பதே விளையாட்டு என்கிற அந்தஸ்த்தை இழந்து வெறும் முதலாளிகளின் மூணு சீட்டு என்பதாக சுருங்கிப் போய் விட்ட நிலையில், அதன் தர்க்கப்பூர்வமான விளைவுகள் மட்டும் வேறெப்படி இருக்கும்? ஊரில் கிராமத்தில் சந்து பொந்துகளில் குத்தவைத்து மூணு சீட்டு ஆடும் லும்பன்கள் வாயில் சுவர்முட்டியும், நாட்டுச் சாராயமும் வழிகிறதென்றால், ஐ.பி.எல் வீரர்கள் கொகெய்னை உறிஞ்சுகிறார்கள். என்ன இருந்தாலும் சர்வதேசத் தரமல்லவா?
மனமகிழ் மன்ற சீட்டாட்டக் கிளப்பின் புகை மண்டிய மூடிய அறைக்கும் திறந்தவெளி ஐ.பி.எல் மைதானத்துக்கும் ஐந்து வித்தியாசங்களைத் தோற்றத்தில் கண்டு பிடிக்க முடிந்தாலும் சாராம்சத்தில் ஒன்று தான். மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்களனைத்தும் இரண்டு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து நடந்தவைகள். இது இத்தோடு ஓயப்போவதில்லை – ஐ.பி.எல் இருக்கும் வரை இது போன்ற கேலிக் கூத்துகள் தொடர்ந்து நடக்கத் தான் போகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான டிராமாக்களை அரங்கேற்றுவதற்கு இந்தப் போட்டிகளை நடத்துபவர்களின் பணக் கொழுப்பும் அதிகாரத் திமிரையும் தாண்டி வேறு தேவைகளும் காரணங்களும் இருக்கின்றன.
கடந்த ஆண்டு தொலைக்காட்சி நேயர்கள் ரேட்டிங்கை விட இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் துவக்கத்திலேயே 18.7% சரிந்திருந்த்து. 9 அணிகள் விளையாடும் இந்த சீசனில், லீக் ஆட்டங்களையும் இறுதியாட்டத்தையும் சேர்த்து மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 76. என்னதான் பாரின் சரக்கு என்றாலும், ஓவராகப் போனால் வாந்தியில் தானே முடிந்தாக வேண்டும்? சலிப்புற்ற தொலைக்காட்சி பார்வையாளர்களை இழுத்துப் பிடிக்க வழக்கமான கிரிக்கெட் போதையைத் தாண்டி வேறு கிளுகிளுப்புகளும் தேவைப் படுகிறது.  விறுவிறுப்பு – மேலும் விறுவிறுப்பு – மேலும் மேலும் விறுவிறுப்பு என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் அவர்கள் விரும்பியே தான் மாட்டிக் கொண்டுள்ளனர்.
வெறும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எத்தனை வருடங்கள் தான் பார்ப்பார்கள்; ஒரு கள்ளக் காதல், ஒரு கொலை என்று இருந்தால் தானே ஆட்டம் களை கட்டும்? அந்த கிளுகிளு ஊறுகாய்கள் தான் இது போன்ற பொறுக்கித்தனங்களை ஊடகங்கள் மேலும் மேலும் சுவை சொட்டச் சொட்ட நமக்கு வழங்குவது.
ஊடங்கள் ஐ.பி.எல்லில் நடக்கும் கூத்துகளை கடைவிரிப்பது அதை ஒழித்துக் கட்டுவதற்காக இல்லை. தங்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரங்கள் மூலம் படியளக்கும் பொன் முட்டையிடும் வாத்தை அத்தனை சீக்கிரம் கொன்று விட முதலாளித்துவ ஊடகங்களும் முட்டாள்கள் அல்ல. தொய்வாகப் போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் நடுவே ஒரு கற்பழிப்புக் காட்சியை வைப்பதன் மூலம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு இழுத்து வரும் அதே பழைய கோடம்பாக்கத்து உத்தி இது. அதனால் தான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடக்கும் அத்தனையையும் கண்டும் காணாததும் போல் கடந்து செல்கிறது.
ஆப்ரிக்க சப்சஹாரா பாலைவனங்களில் வாழும் குழந்தைகளை விட அதிகளவில் சத்துக்குறைவால் வாடும் நோஞ்சான் குழந்தைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், நாலில் ஒருவர் மூன்று வேளை சோறில்லாமல் பட்டினியில் வாடும் வறியவர்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இப்படிப் பட்ட ஆடம்பரக் கூத்துகளை எந்த வெட்கமும் இன்றி நடத்த வேண்டுமென்றால் அதற்கு ஹிட்லரின் இதயமும், அம்பானியின் மூளையும், மன்மோகனின் ஆன்மாவும், மல்லையாவின் உடலையும் கொண்டு பிறந்த ஒரு கலவையான விஷஜந்துவால் தான் முடியும்.
ஐ.பி.எல்லின் வண்ணமயமான காட்சிகளைக் கண்டு மகிழும் ரசிகர்கள் அவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நாடகத்தை எப்போது உணரப் போகிறார்கள்? முழுமையான மேட்டுக்குடி கேளிக்கையாள மாறி விட்ட இந்த ஆட்டத்தில் இன்னும்  கொலை மட்டும்தான் நடக்கவில்லை. அது நடந்தாலும் ஆச்சரியமில்லை.!

courtesy:vinavu.

Post Comment

Thursday, May 17, 2012

விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்

ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சினை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயமாகவே இருக்கும். அதே போல விகடன் வாசகர்களையும் இது வருத்தத்திலேயே ஆழ்த்தும்.

Post Comment

மும்பை வான்கடே மைதானத்தில் ஷாருக்கான் ரகளை

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கான் மோதலில் ஈடுபட்டார். இதனால் அவர் வான்கடே மைதானத்துக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக் களப்பில் மிதந்த ஷாருக்கான் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மும்பை கிரிக்க்ட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஷாருக்கானின் பாதுகாவலர்கள் மைதான காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்த் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு ஷாருக்கான் மீது புகார் பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.

ஷாருக்கானின் இந்த அடாவடி நடவடிக்கையால் அனேகமாக மும்பை வான்கடே மைதானத்துக்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைய முடியாது என்று தடை விதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மும்பை கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிஷாவந்த் இச்சம்பவம் பற்றி கூறுகையில், ஷாருக்கான் மும்பை கிரிக்க்ட் சங்க பாதுகாவலர்கள், நிர்வாகிகள், தலைவர் வ்லாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை அவதூறாகவும் அவமதித்துப் பேசினார். அவரை வாழ்நாள் முழுவதும் இந்த மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

Post Comment

Wednesday, May 16, 2012

கரூரில் குலதெய்வ கோயிலில் பிரசன்னா சினேகா

தனிக்குடித்தனம் போகும் முன், கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளனர் பிரசன்னாவும் சினேகாவும்.

கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம்தான் பிரசன்னாவின் பூர்வீகம். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். முக்கிய காரியங்கள் செய்யும் முன் இங்கு வருவது அவர் வழக்கமாம். 

தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.

மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு சென்னை திரும்பினர். அப்புறம்தான் தனிக்குடித்தனம் போனார்களாம்.

Post Comment

ஏர்டெல் நிறுவனம் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு

 தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் மீது அன்னிய செலாவணி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாகப் பதிலளித்த பழனிமாணிக்கம், அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகளை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு பார்தி ஏர்டெல் நிறுவனத்தையும் தனது விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றும் பழனிமாணிக்கம் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொலைத்தொடர்புத் துறை சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

Post Comment

Monday, May 14, 2012

திருநங்கைகளுக்கு கட்டணமில்லாமல் பெயர் மாற்றம்


திருநங்கைகளுக்கான பெயர் மாற்ற அறிவிப்புகள் அரசிதழில் கட்டணமின்றி வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் செய்தித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,

அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரின் தமிழ்நாடு திரைப்படப்பிரிவு செய்திப்படங்கள் மின்னணு முறையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாக்கப்படும்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, 26 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். அரசுக்குச் சொந்தமான தமிழரசு பத்திரிகை மற்றும் அரசு அச்சகங்களுக்கு ரூ. 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள் வாங்கப்படும்.

சமுதாயத்தாலும், குடும்பத்தினராலும் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி அல்லலுறும் திருநங்கைகளின் துயர் துடைக்கும் நடவடிக்கையாக, புரட்சித் தலைவி அம்மாவின் உத்தரவின்படி, திருநங்கைகளுக்கான பெயர் மாற்ற அறிவிப்புகள் கட்டணம் எதுவும் இல்லாமல் அரசிதழில் வெளியிடப்படும்.

வருவாய் இழப்பீட்டில் இயங்கி வரும் வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கத்தை குத்தகைக்கு விட உரிய விதிமுறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியூர்களில் இருப்பவர்கள் அரசு வெளியீடுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், திருச்சி, மதுரை அரசு கிளை அச்சகங்களில் அரசு வெளியீடுகளுக்கான கிளை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். அங்கேயே, பெயர் மற்றும் மத மாற்ற படிவங்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Post Comment

Thursday, May 10, 2012

டிரைவர் இல்லாமல் இயங்கும் கூகுள் காரை சாலையில் இயக்க அனுமதி

கூகுள் வடிவமைத்துள்ள தானியங்கி காரை சாலையில் இயக்கி சோதனை நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் தொழில்நுட்பம் கொண்ட தானியங்கி காரை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சென்சார், கேமரா மற்றும் செயற்கைகோள் உதவியுடன் தானியங்கி முறையில் செல்லும் கையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சோதனை ஓட்ட மையத்தில் இந்த தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்தப்பட்டன. கர்சன் மற்றும் லாஸ் வேகாஸ் பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சாலைகளில் இயக்கி சோதனைகள் நடத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக சாலைகளில் இயக்கி சோதனைகள் மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த காருக்கு சாலையில் இயக்கி சோதனைகள் நடத்துவதற்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து நெவடா மாகாண போக்குவரத்து துறை தீவிரமாக பரிசீலித்து வந்தது.

புதிய விதிமுறைகளுடன் தானியங்கி காரை சாலைகளில் இயக்கி சோதனைகள் நடத்த தற்போது நெவடா போக்குவரத்து துறை அந்த காருக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. கார் எந்தெந்த சாலைகளில் செல்லும் என்பது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சோதனை செய்யப்படும் காருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் நெவடா போக்குவரத்து துறை கூறியுள்ளது. டொயோட்டோ பிரையஸ் கார்தான் தற்போது கூகுளின் தானியங்கி தொழில்நுட்பம் கொண்டதாக மாற்றப்பட்டு சாலைகளில் இயக்கப்பட உள்ளது.

Post Comment

Tuesday, May 8, 2012

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?


வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த  பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

Post Comment

பத்திரப்பதிவு முறைகேடுகளைத் தவிர்க்க கண்காணிப்பு: வருகிறது புதிய வசதி


பத்திரப்பதிவு முறைகேடுகளைத் தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவு அலுவலகங்களையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க, கேமரா வசதி செய்யப்படுகிறது. இதில் பதிவாகும் வீடியோவை, பொதுமக்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

மோசடிகளை தடுக்க...: நில மோசடி, சொத்துக்களை பதிவு செய்வதில் ஆள் மாறாட்டம் என, சொத்து ஆவணப் பதிவு தொடர்பான மோசடிகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 575 சார் பதிவாளர் அலுவலகங்களும், மூன்று முகாம் அலுவலகங்களும் உள்ளன. சொத்துக்கள் தொடர்பாக, "பவர்' வழங்கும் போது, உரிமையாளர் மட்டுமே புகைப்படம், விரல் ரேகை பதிவு செய்தால் போதும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, "பவர்' பெறுபவரும் புகைப்படம், விரல் ரேகை போன்றவற்றை பதிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களையும், "ஐ.பி.கேமரா' எனப்படும், சர்வதேச தரத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா மூலம் இணைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சண்முகம் சட்டசபையில் அறிவித்தார். சார் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

கண்காணிப்பு: இந்த கேமராக்கள் இணையதளம் மூலமாக இணைக்கப்பட்டு, சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தபடி, 575 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.
கணினிமயமாக்கும் திட்டம்இந்த வசதி குறித்து அமைச்சர் சண்முகம் கூறிய தகவல்: இந்த, "ஐ.பி.கேமரா' என்பது சர்வதேச கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவி. ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழையும் போதே இந்த கேமரா அவரை படம் எடுத்து விடும். சார் பதிவாளர் அருகில் ஒரு கேமரா இருக்கும். அது, பத்திரப்பதிவு நடைபெறுவதை படம் எடுக்கும்; பத்திரத்தின் விவரங்களும் அதில் பதிவாகி விடும். புரோக்கர்கள் நடமாட்டம், போலி ஆவணம், சதி திட்டம் போன்றவைகளை தடுக்க, இந்த கேமரா எடுக்கும் வீடியோ படங்கள் உதவும். பத்திரப் பதிவு தொடர்பாக ஏதேனும் சர்ச்சைகள் வரும்போது, இந்த வீடியோ பதிவை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். பதிவு அலுவலகங்களில் அதற்குரிய கட்டணங்கள் செலுத்தினால், அந்த வீடியோ பதிவுகள் வழங்கப்படும். மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களை கணினிமயமாக்கும் திட்டம், 117 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் செயலுக்கு வந்ததும், முறைகேடுகள் முழுமையாகத் தடுக்கப்படும்.

Post Comment

இந்த வருடத்தின் மிகப் பெரிய நிலா...

இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலவு ஞாயிறு இரவு வானில் தென்பட்டது. மற்ற பவுர்ணமி நாட்களை விட இந்த நிலா நிலா 14 சதவிகிதம் பெரிதாகவும் 30 சதவிகிதம் அதிக வெளிச்சமாகவும் இருந்ததாக வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பவுர்ணமி நாளில் வானத்தில் நிலவைக் காண்பது மகிழ்ச்சியான விசயம். அதுவும் சித்திரை பவுர்ணமி நாளில் ஆற்று மணலில் அமர்ந்து உணவு உண்டவாறு பவுர்ணமியை ரசிப்பது பாரம்பரியமான ஒன்று. இந்த ஆண்டு அறிவியர் அதிசயம் நிகழ்ந்த நாளாகவும் அது மாறிவிட்டது.

இந்த சித்திரா பவுர்ணமி நாளில் நிலவு வழக்கமானதை விட அளவில் 14% பெரிதாகவும், மற்ற பவுர்ணமிகளை விட 30% பிரகாசமாகவும் இருந்தது. காணக்கிடைக்காத இந்த அதிசய நிகழ்வினை பலரும் கண்டு ரசித்து படம் பிடித்தனர்.

நாசா வெளியிட்டுள்ள தகவல்படி இதற்கு முன்னர், 1955, 1974, 1992, 2005, 2011 ஆம் ஆண்டுகளில் இதுப்போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், பூமிக்கு மிக அருகில் நிலா வரும் நிகழ்வு ஜனவரி 1912-க்கு பிறகு இப்போதுதான் நிகழ்கிறதாம்.

இதற்கு அப்புறம் ஜூன் 23, 2013 ஆம் ஆண்டு தான் பூமிக்கு அருகில் நிலா வரும்.

ஞாயிறுக்கிழமை இந்த அரிய காட்சியை காண தவறியவர்கள் இதேப் போன்ற பிரகாசமான நிலவைக் காண இன்னும் 13 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சித்திரை பவுர்ணமியோடு இந்த அரிய காட்சியை காண்பது இனிமேலும் சாத்தியமில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Post Comment

Monday, May 7, 2012

செளமியா அன்புமணிக்கு முருகதாஸ் சவால்!

துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு டாகட்ர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், சினிமாப் பட வசனத்தை குறிப்பிட்டு ஒரு படத்தைப் போடடு நேரடியாகவே சவால் விட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருதகாஸ்.

துப்பாக்கி படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அசல் படத்தில் அஜீத் சுருடடுடன் காட்சி அளித்ததைப் போன்று விஜய் சுருட்டு பிடித்தபடி இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,

'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

`துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.

பசுமைத் தாயகத்தின் இந்தக் கோரிக்கைக்கு தற்போது இயக்குநர் முருகதாஸின் டிவி்ட்டரில் விஜய் ரசிகர்களும் பிறரும் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் உசசமாக முருகதாஸே, ஒரு படத்தைப் போட்டு இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

ஒரு இந்திப் படத்தில் இடம் பெற்ற, ஒருவன், இன்னொருவனை கீழே தள்ளி கொலை செய்வது போன்ற காட்சி அடங்கிய பட போஸ்டர் அது. அந்தப் படத்தைப் போட்டு, இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று கமென்ட் போட்டுளளார முருகதாஸ்.

Post Comment

Friday, May 4, 2012

கட்டுப்பாடான உணவு மூளையை பாதுகாக்கும்

வயதாக வயதாக மூளையின் நினைவாற்றல் குறைந்துவிடும். ஆனால் ஒருசிலர் மட்டுமே சின்ன சின்ன விசயங்களைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு அசத்துவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கமே. குறைவாகவும், கட்டுப்பாடோடும் மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்று கண்டறிந்துள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள்.

கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலி நாட்டில் எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்குழுவில் இருந்த ரோம் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த விஞ்ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி, எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான் என்று கூறியுள்ளார். உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post Comment

Thursday, May 3, 2012

குழந்தைகள் கண் சிகிச்சைக்கு உதவ தன்னார்வ அமைப்பு - ரஜினி தொடங்கி வைத்தார்

"சிஸ்டிநோசிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதற்கான தன்னார்வ அமைப்பினை சென்னையில் தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் "சிஸ்டிநோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள "சிஸ்டகான்' மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

'சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் நாட்டிலேயே முதன்முறையாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாகப் பங்கேற்ற ரஜினி, தனது ஆதரவை இந்த அமைப்புக்குத் தெரிவித்தார்.

சிஸ்டிநோசிஸ் நோய் குறித்து மியாட் மருத்துவமனை சிறுநீரக மருத்துவ துறைத் தலைவரும், "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' தலைவருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகையில், "சிஸ்டிநோசிஸ்' என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மரபணு சார்ந்த அரிய வகை நோயாகும். உலகம் முழுவதும் இந்த நோயால் 2 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எவ்வளவு குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பது தெரியவில்லை. மொத்தம் 6 குழந்தைகளுக்கு இந்த அரிய நோய் பாதிப்பு உள்ளது "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடன் இந்த நோய் பாதிப்பு தெரியாது. எனினும் குழந்தை வளரும்போது உரிய காலத்தில் வளர்ச்சி இல்லாத நிலையில், சிறுநீர்ப் பரிசோதனையில் சர்க்கரை இருந்தாலோ அல்லது அமினோ அமிலம் வெளியேறினாலோ இந்த நோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்; உடனடியாக

குழந்தையின் விழி வெண்படலம் ("கார்னியா') நன்றாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள குழந்தையை கண் மருத்துவரிடம் அனுப்பி சிறப்புப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

முன்கூட்டியே இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால் குழந்தைக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து அதன் வளர்ச்சியை உறுதி செய்து காப்பாற்ற முடியும்.

இப்போது இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குழந்தைகளின் மருந்துச் செலவுக்கு உரிய தலா ரூ.2 லட்சம், நன்கொடை மூலம் திரட்டப்பட்டு வருகிறது," என்றார்.

இந்த அமைப்பு குறித்த விவரங்களை www.sugarbp.org இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post Comment

Tuesday, May 1, 2012

ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் ட்விட்டரில் 'மிரட்டல்'

கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டனர், நடிகை ஸ்னேகாவும் நடிகர் பிரசன்னாவும். ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து, விவிஐபிக்களை அழைத்து ஓய்ந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

இருவரும் சந்தித்துக் கொண்டது, காதல் வளர்த்தது, பெற்றோரின் சம்மதத்துக்குக் காத்திருந்தது, சாதிகளை மீறி திருமணத்துக்கு சம்மதம் வாங்கியது என இத்தனை நாட்களும் மீடியாவில் அரைபட்ட செய்திகள் கேள்விகள், பதில்களாக ஓடிக் கொண்டிருந்தன... 

பிரசன்னா, ஸ்னேகா திருமணம் வருகிற 11ம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.

தம்பதிகளாகப் போகும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தோம். வாய் நிறைந்த புன்னகையுடன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர் இருவரும்.

அவர்களின் திருமணத் திட்டங்கள், திருமணத்துக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்து நம்மிடம் கூறியதாவது: 

இந்தத் திருமணத்தை பிரசன்னாதான் முதலில் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு நீங்கள் எதுவுமே சொல்லாமல் அமைதி காத்தீர்களே?

ஸ்னேகா: இருவரும் சேர்ந்து அறிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். அது கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு நானே ஒரு பேட்டியில் சொல்லிவிட்டேனே.

உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பிருந்தே காதலா?

பிரசன்னா: அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பு அவரைப் பிடிக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களாகக் காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம்.

பிரசன்னாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

ஸ்னேகா: அவரது உண்மையான காதல். அந்தக் காதலை எப்போதும் ஒரே மாதிரி அவர் கொண்டாடும் விதம். எனக்கு மிகப் பொருத்தமான இணை அவர் என முடிவு செய்த பிறகே காதலை ஒப்புக் கொண்டேன். 

மாமனார் மாமியார் பற்றி...

ஸ்னேகா: அதை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். எனக்கு மாமனார்-மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே பிரசன்னாவின் பெற்றோர் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் ஆறு மாத காலம் தனிக்குடித்தனம் இருக்கிறோம். பின்னர் அனைவரும் ‌ஒரே குடும்பத்தில் சேர்ந்து இருப்போம். 

எதிர்காலத் திட்டங்கள்...

ஸ்னேகா: என்ன திட்டம்... ஓ குழந்தைகள் பற்றியா... அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத்தான் அதை முடிவு செய்வோம். நிறைய கமிட்மென்ட்ஸ் உள்ளன. எல்லாவற்றையும் முடித்த பிறகே குழந்தைகள்.

ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் உங்களுக்கு மிரட்டல் வந்ததாமே...

பிரசன்னா: அட ஆமாங்க. ட்விட்டர் வலைதளத்தில் சிலர் எங்கள் புன்னகை அரசியையா கல்யாணம் செய்ய போகிறாய் என்று மிரட்டினர். ஆனால் அந்த மிரட்டலை நான் புன்னகையோடு வரவேற்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது, திருமணத்திற்கு பிறகும் ஸ்னேகாவை புன்னகை அரசியாகவே பார்த்துக் கொள்வேன் என்றார்.

பின்னர், "எல்லாரும் திருமணத்துக்கு தவறாம வந்துடுங்க, வாழ்த்துங்க", என்றனர் இருவரும்.

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME