இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம்....

53% இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தை பயன்படுத்துவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இணையத்தில் இயங்குவது இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. ஆய்வு செய்ததில் 53% இந்தியர்கள் தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர் என்று இந்த ஆய்வை நடத்திய கெர்னி குளோபல் ரிஸர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் சராசரி சீனாவில் 36 சதவீதமும், ஜப்பானில் 39 சதவீதமும், சர்வதேச அளவில் 51% உள்ளது. இந்த ஆய்வு 10 நாடுகளில், 10,000 பேரை வைத்து நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில், 97% இந்தியர்கள் தங்களுக்கு ஃபேஸ்புக் கணக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில் 77% இந்தியர்கள், தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகக் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments