கோடிக்கணக்கான ஊழல் பணம்

>இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நடந்த லஞ்ச ஊழல், வரி ஏய்ப்பு போன்றவை காரணமாக பல பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சட்ட விரோதமாக நடக்கும் பண பரிவர்த்தனை நடவடிக்களை கண்காணிக்கும் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் தாரளமயமாக ஆரம்பிக்கப்பட்ட பிறகு நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக 2004--2008 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுடொன்றுக்கு தலா 19 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் வெளியே சென்றதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

திருட்டுத்தனமாக பெறப்பட்ட செல்வத்தை பதுக்கும் முயற்சிகள் காரணமாக பல கோடி இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களும், மிகவும் செல்வம் படைத்தவர்களும் இது போல திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.



source.bbc

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
துரை தயாநிதியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்


சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதாவது :

“எல்லா புகழும் இறைவனுக்கே. மதுரையில் நடைபெறும் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி வைத்த நிதியமைச்சர் அன்பழகன், விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு இடையே மதுரை வந்துள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மற்றும் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.”


“எனக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு பேரன்கள் உள்ளனர். இரண்டு பேரன்களுடன் விளையாடும் போதே இவ்வளவு சந்தோஷம் என்றால், பேரன்களின் குழந்தைகளுடன் விளையாடும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதிலும் பேரக்குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது என்பது அதைவிட சிறந்ததாகும். கொள்ளு பேரன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி எப்படி சந்தோஷமாக இருப்பார் நினைத்துபாருங்கள். அந்த வகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.”

“மதுரைக்கு 32 ஆண்டுக்கு பிறகு இப்போது வருகிறேன்.

“முதல்வருக்கு 2 மிகப்பெரிய சொத்துக்கள் உள்ளன. ஒன்று தி.மு.க. என்னும் கட்சி, மற்றொன்று அவரது மகன்களான மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆவார்கள். தி.மு.க.வை மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினும், இவர்களை தி.மு.க.வும் காக்க வேண்டும்.”

“அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுக்கு முன்னாலே எனக்கு தெரியும். கோபாலபுரம் அப்போது ஒரு குறுக்கு சந்து. 8 மணிக்கு மேல் காக்கா, நாய், நரி கூட போகாது. மாடி மேல உட்கார்ந்து பேச்சுலர்கள் வழக்கமாக கலட்டா செய்து கொண்டிருப்போம். தெருவில் 2, 3 பேருடன் பேசிக்கொண்டிருப்பார் ஸ்டாலின், 10, 15 பேருடன் போனால் அழகிரி என்று சொல்வார்கள்.”

“நான் இதுவரை ஸ்டாலினுடன் மட்டுமே அதிகம் பழகி உள்ளேன். அழகிரியிடம் அந்த அளவிற்கு பழகாவிட்டாலும் தற்போது ஏதோ பல ஆண்டு அவருடன் பழகியது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது.”
“மணமக்கள் பொருத்தமாக இருக்கிறார்கள். இது காதல் திருமணம். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து வைத்திருக்கிறீர்கள். பொருத்தம், லட்சணம், அழகு இந்த மூன்றும் நிறைந்த புதுமண காதல் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், விட்டு கொடுத்தும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் ஒத்துழைத்து சென்றால் வாழ்வு என்றும் சிறக்கும்” என்றார்.


courtesy.onlysuperstar

Post a Comment

0 Comments