'வீர மகள்' ருக்சானா

ஜம்மு - காஷ்மீரில் தனது வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதியை சுட்டுக் கொன்ற வீர மங்கை ருக்சானாவுக்கு காவல்துறையில் அதிகாரி பதவியை அம்மாநில அரசு வழங்கி கெளரவித்துள்ளது.

உண்மையிலேயே இந்த செய்தியை நான் படித்ததும் நான் மிகவும் ஆச்சர்யம் அடைந்து மிக சந்தோசபட்டேன் , ஏன் என்றால் வீட்டுக்குள் வந்த பயங்கர வாதியை துப்பாக்கி மூலம் சுட்டு கொன்ற வீர திரு மகள் அல்லவா? இந்த பெண் , ருக்சனா போல அனைவரும் இருந்து விட்டால் நம் இந்தியாவை ஒரு பயலும் ஒன்னும் அசைக்க முடியாது , இந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி அரசாங்கம் அவருக்கு காவல்துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.


ஜம்மு போன்ற பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலைமை மிகவும் கஷ்டமானதுதான் , ஏன் என்றால் எப்போ என்ன நடக்கும்னே தெரியாது , அப்பேற்பட்ட சூழ்நிலையில் இது போன்று தைரியமாக இருந்தால் தான் அங்கே வாழ முடியும்

இந்த வீர திருமகளுக்கு இந்தியர்கள் சார்பில் ஒரு சல்யூட்

Post a Comment

2 Comments

புதிய தகவல்.. நன்றி!
calmmen said…
நன்றி கலை.
உங்கள் வலைபூ எனக்கு மிகவும் பிடிக்கும்