NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Monday, October 10, 2011

கரூரில் சாதனை+வேதனை


சாதனை
கரூரில், இரண்டரை நிமிடத்தில், 200 நாடுகளின் தேசியக்கொடி பெயர் மற்றும் ஒன்றரை நிமிடத்தில், 99 வகையான பூக்களின் பெயர்களைச் சொல்லி, நான்கு வயது பள்ளிச் சிறுமி, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்'டில் இடம்பெற்று சாதனை புரிந்தார்.


கரூரைச் சேர்ந்த சக்திவேல்-செல்வி தம்பதியரின் மகள் இனியா,4. இவர், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறார். சிறுமி இனியாவுக்கு அதிகளவில் ஞாபக சக்தி இருந்ததை, அவரது பெற்றோர் அறிந்தனர்.இதையடுத்து, முதல் கட்டமாக தனித்திறனை வெளிப்படுத்த, சிறுமி இனியாவுக்கு, பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் பூக்களின் பெயர்களை கற்றுக்கொடுத்தனர். சில நாட்களில் தேசியக்கொடிகள் மற்றும் பூக்களின் பெயர்களை, சிறுமி இனியா தானாகவே சொல்ல ஆரம்பித்தார்.


இதையடுத்து, 200 நாடுகளின் தேசியக்கொடியைப் பார்த்து, நாட்டின் பெயரை சொல்லுதல் மற்றும் கபிலர் பாட்டில் உள்ள, 99 தமிழ்ப் பூக்களின் பெயர்களை பார்க்காமல் சொல்லுதல் ஆகிய சாதனை நிகழ்ச்சி, நேற்று கரூர் ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை மகாலில் நடந்தது.


இந்நிகழ்ச்சியில், 200 நாடுகளில் தேசியக்கொடியைப் பார்த்து, நாடுகளின் பெயரை இரண்டு நிமிடம் 34 செகண்டிலும், 99 பூக்களின் பெயர்களை பார்க்காமல், ஒரு நிமிடம் இரண்டு செகண்டிலும் சிறுமி இனியா சொல்லி முடித்தார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளரும், நிர்வாகியுமான வெங்கடாச்சாரி, சாதனை சிறுமி இனியாவுக்கு, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சான்று வழங்கி பாராட்டினார்.




@@@@@@@@@@@@@@@


வேதனை  
கரூர் மாவட்டத்தில் நான்கு நாட்களில் மூன்று கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் மதுபான விற்பனை நடந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் 112 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 50 லட்ச ரூபாய் வரை விற்பனையாகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதலாக விற்பனையாகும்.தொழில்வளம் மிகுந்த கரூரில் மாத தொடக்கத்தில் மது விற்பனை உச்சத்தை தொடும். ஆனால் கடந்த 2 ம் தேதி ஞாயிறு கிழமையாக இருந்தும் கூட, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து இரண்டு நாட்களில் ஆயுத பூஜை திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் அன்று தொழில் நிறுவனங்களுக்கு பூஜை போட்ட பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது.இதனால் ஆயுத பூஜையன்று, ஒரே நாளில் 2,298 மதுபான பெட்டிளும், 2,020 பீர்பாட்டில் பெட்டிகள், 99 லட்சத்து 60 ஆயிரத்து 90 ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்றது. கடந்த 1, ம் தேதி மற்றும் 3,4,5 ம் தேதிகளில் மொத்தமாக மூன்று கோடியே 98 லட்சத்து 48 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் மதுபான வகைகள் விற்பனையாகியுள்ளது.


Post Comment

No comments:

POPULAR

Followers

FOLLOW ME