எனக்கு பிடித்த பாரதியார் கவிதை வரிகள்

எழுதுவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் , எழுதுவதற்கு ஒன்றும் இல்லாததால் தான் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது , இங்கே எழுதலாம் என்று யோசிக்கும்போது எழுதுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தும் அதற்கான சரியான எழுத்து கோர்வை வராமல் போவதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன் ,மனதில் வெறுமைதான் அதிகமாக மிஞ்சுகிறது ,அதற்காக வெறுமை யை பற்றி எழுத முடியுமா என்ன ? ஆனால் ஆன்மீகவாதிகள் சொல்வார்கள் வெறுமை என்கின்ற நிலைதான் தியானம் , ஆஹா நான் அவ்வளவு பெரிய ஆளா ? என் மனதில் அதிகமாக வெறுமைதான் தோன்றுகிறது , அதற்காக மீசை வைத்தவன் எல்லாம் பாரதி ஆக முடியுமா ?

எனக்கு பிடித்த பாரதியார் கவிதை வரிகள்























அறிவே தெய்வம்

கண்ணிகள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே

நன்றி

Post a Comment

2 Comments

chinathambi said…
NIce post...
Download Bharathiar Songs MP3
http://chinathambi.blogspot.com
calmmen said…
thanks chinathambi