காமம் என்பது உடலில் உள்ள மற்ற உணர்ச்சிகளை போல இதுவும் ஒன்றுதான் , ஆனால் மனிதன் இதை மட்டும் மிகப் பெரியதாக ஆக்கிவிட்டதால் , உலகத்தில் இன்று மனிதன் படும் பாடு சொல்லி மாளாது .
இன்று உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் இந்த காம உணர்ச்சி தான்.மனிதனை வயது வித்தியாசம் இன்றி இந்த உணர்வு ஆட்டிப்படைகிறது இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போனதற்கு காரணம் இந்த காம உணர்வுதான்.
நாம் வெளிநாடுகரர்களை பார்த்து எந்த விசயங்களை நன்றாக கற்று கொண்டோமோ இல்லையோ , இந்த விசயத்தில் நாம் நன்று கற்று கொண்டோம் ,
நம் முன்னோர்கள் காலத்தில் ஆவது ஒரு வரைமுறை இருந்தது , இப்பொழுது அந்த வரைமுறை சுத்தமாக இல்லை , நாகரீக வளர்ச்சி காரணமாகவும் , தொழில்நுட்ப காரணம் காரணமாகவும் இன்னும் அதிகமாக ஆகிவிட்டது .
அடுத்து ஊடகங்கள் இன்னும் அதிகமாக ஆக்கிவிட்டது , இப்பொழுது காதல் என்ற பெயரில் அதிகமாக அரங்கேறுகிறது காம களியாட்டம் , அடுத்து கள்ளகாதல் , திருமணம் ஆனபின்பும் மனம் போன படி செல்வது , நம் நாட்டின் பெரும் செல்வம் என்பதே கலாச்சாரம் , ஒருவனுக்கு ஒருத்தி , ஒழுக்கம் இவை எல்லாம் தான் வெளிநாட்டில் நமக்கு பெயர் வாங்கி தந்து கொண்டு இருந்தது , அனால் இப்பொழுது நம் கலசாரம் மிகவும் கேட்டுபோவதற்கு காரணம் இந்த காமம் என்கின்றன உணர்ச்சி தான் , இதை மனிதன் ஒழுங்காக கட்டுக்குள் வைக்க முடியாமல் போனதால் எவ்வளவு சமுதாய சீர்கேடுகள் !
போகின்ற போக்கை பார்த்தல் இன்னும் மோசமாக போகும் போல !
முடிந்த வரை நாம் ஒழுக்கமாக வாழ முயற்சி செய்வோம் .பிறருக்கும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவோம்

நன்றி.