உலக குடும்ப மருத்துவர் நாள்-மே 19


பலியானோர் கணக்கு!
# ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர். சிகரெட் மட்டுமல்லாமல் பீடி, நேரடி புகையிலை போன்ற மற்றப் பொருட்களும் இதற்குக் காரணமாக உள்ளன. இறப்பவர்களில் 83 சதவீதம் பேர் தற்போது புகைப்பவர்கள் அல்லது முன்னால் புகைத்தவர்கள்.
# இப்படி இறப்பவர்களில் 6 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே 17 சதவீதம் பேர் பலியாகிறார்கள். இப்படி 2004-ம் ஆண்டில் நேரடியாகப் புகைக்காமல் இறந்தவர்களில் 31 சதவீதம் பேர் குழந்தைகள்.
# 20-ம் நூற்றாண்டில் புகையிலைப் பயன்பாட்டால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடி பேர்.
# இதேபோலப் புகைபிடித்தல், புகையிலைப் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருந்தால், 21-ம் நூற்றாண்டில் இறக்கப் போகும் நபர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும்.
# உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.
# உலக இளைஞர்களில் நான்கில் மூன்று பேர் புகை பிடிப்பதன் காரணமாக ஏற்படும் இதயக் கோளாறாலேயே இறக்கிறார்கள்.
# புகை பிடிப்பவர்கள், புகை பிடிக்காதவர்களைவிட சராசரியாக இத்தனை ஆண்டுகள் முன்னதாகவே இறந்துபோகிறார்கள்: ஆண்கள் : 13.2 ஆண்டுகள் - பெண்கள்: 14.5 ஆண்டுகள்
# புகை பிடிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கை, கால்களுக்கு ஆக்சிஜன் செல்வதைப் புகை பிடிப்பது தடுப்பதால், உடல் ஊனம் ஏற்படலாம்.
# புகை பிடிப்பதால் வரும் எப்சீமியா என்னும் நோய் நுரையீரல் செயல்பாட்டு திறனைக் குறைக்கும். அடிக்கடி மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படும். விளைவாக நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.
# புகை பிடிக்காமல் இருப்பதால் சேமிக்கப்படும் பணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், எவ்வளவு பணத்தைப் புகைப்பதில் கொட்டுகிறோம் என்பது புரியும். ஏனென்றால், இன்றைக்கு மிகக் குறைந்த அளவு என்று வைத்துக் கொண்டாலும்கூட ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5-லிருந்து ரூ. 10 வரை.
# ஆண்டுதோறும் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக 3,000 பேர் நுரையீரல் புற்றுநோயாலும், 46,000 பேர் இதய நோய்களாலும் இறக்கின்றனர்.
# ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்றாலும் புகையிலை பயன்பாடு காரணமாகவே உலக அளவில் உற்பத்தி இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. மதுப் பழக்கம், மருத்துவ அவசரகாலச் சிகிச்சைகளால் இழக்கப்படும் நேரத்தைவிட இதனால்தான் உற்பத்தி இழப்பு அதிகம்.
# ரோட்டில் போடப்படும் தார் சிகரெட்டில் அதிகம் இருக்கிறது. இது நுரையீரலில் படிகிறது, புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது.
# ஒரு சிகரெட்டில் 4000 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் 250 வேதிப்பொருட்கள் மோசமானவை. 50 வேதிப்பொருட்கள் புற்றுநோய்க் காரணிகள்.
# புகை பிடிப்பதால் மயக்கம் வரும், சுவையும் மணத்தையும் நன்றாக உணர முடியாது, மூச்சிளைப்பும் தொடர் இருமலும் ஏற்படும், உடல் எதிர்ப்புசக்தியை இழக்கும்.
# புகைப்பதால் உடலில் சேரும் கார்பன் மோனாக்சைடு உடலில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதால் தசை, மூளை, உடல் திசுக்களும் குறிப்பாக இதயமும் கடுமையாக வேலை பார்க்க வேண்டி வரும். காலப்போக்கில் நுரையீரலுக்கு முழு சுவாசமும் செல்லாது.

thanks.hindu

Post a Comment

0 Comments