தேவையற்ற அழைப்புகளால் தொந்தரவா ? விடுபட விரைவில் புது வழி

செல் போன் வாடிக்கையாளர்கள் பலரையும் புலம்ப வைக்கும் ஒரு விஷயம் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள். நேரம், காலம் பார்க்காமல் வரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் எரிச்சலில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் திட்டம் ஜனவரியில் இருந்து செயல்படவிருக்கிறது . 2011 ஜனவரி முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் எல்லாம் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட நம்பர்களில் இருந்தே வரும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்க வேண்டுமா இல்லை புறக்கணிக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யமுடியும். இதே போல் ஏற்கனவே அமலில் இருக்கும் நேஷனல் டூ நாட் கால் டைரக்டரியிலும் சில மேம்படுத்தப்பட்ட மாறுதல்கள் செய்யப்படுகின்றன. தற்போது நடைமுறையில் என்.டி.என்.சி.,யில் பதிவு செய்து 45 நாட்களுக்குப் பிறகு தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., கள் தடை செய்யப்படுகின்றன. ஆனால் புதிய நடைமுறையின் கீழ் , பதிவு செய்த 7வது நாளிலேயே தேவையற்ற அழைப்புகள், மெசேஜூகளை தடை செய்ய முடியும். மேலும் ‌டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்.டி.என்.சி., டைரக்டரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எண்களுக்கு விதிமுறையை மீறி அழைப்புகள் விடுத்தால், முதல் 5 அத்துமீறல்களுக்கு பைன் மட்டும் போடப்படும். ஆறாவது முறையாக அத்துமீறல் நடந்தால் எந்த எண்ணில் இருந்து அழைப்பு விடுக்கப்படுட்டதோ, அந்த எண்ணின் சேவை துண்டிக்கப்படும்.

Post a Comment

1 Comments