தமிழகத்தில் மின் கட்டணம் 37 சதவீதம் உயர்வு


தமிழகத்தில் மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்தது.
இந்த மின்கட்டண உயர்வு, 37 சதவீதம் வரை இருக்கும் என்றும், இது ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளையில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு விவரம்:
வீடுகளுக்கு...
* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,

* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)

* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80

* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3

* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில்  200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3

* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.

* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75
தொழிற்சாலைகளுக்கு..
தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.
வர்த்தக நிறுவனங்களுக்கு... 

* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30

* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்

* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50
குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு...

* 500 யூனிட் வரை - ரூ. 3.50

* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4

வழிபாட்டுத் தலங்களுக்கு...

* 120 யூனிட் வரை ரூ.2.50

* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5

விசைத்தறி கூடங்களுக்கு... 

* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.

* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4
கல்வி நிறுவனங்களுக்கு...

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5 

Post a Comment

0 Comments