சேவாக்குடன் கருத்து வேறுபாடு இல்லை: தோனி

ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றது. இந்திய அணி நாளை சிட்னியில் நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்நிலையில் இன்று கேப்டன் தோனி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 

இந்திய அணி வீரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்று பத்திரிகைகள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. அணியின் மூத்த வீரர்கள் குறித்து நான் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஏதும் உண்மையல்ல. இந்த மாதிரியான செய்திகள் வீரர்களுக்கிடையே தடுமாற்றத்தை உண்டாக்குகிறது. 

மேலும், சேவாக்குடன் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அணியில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் விளையாடி நாளைய போட்டியில் வெற்றி பெறுவதில் குறியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Post a Comment

1 Comments

எப்படியோ ஜெயிச்சா சரி தான் !