துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான்

ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் என டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். நண்பன் படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்ட விஜய், துப்பாக்கி படம் பற்றியும், படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து கூறியுள்ளார். துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும். இந்தபடம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான். படத்தின் கதையை அற்புதமாக கொண்டு வந்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கியில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய ஹிட்டாகும் என்று எங்களுக்கு தெரியும். முதல்வன் படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments