சவுதி அரேபியால் வசிப்பவர்கள் இன்டெர்நெட்டில் பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என்றால் அந்நாட்டு அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும். இந்த லைசென்சுகள் அவரவர்களின் வெப்சைட்டுகளில் காண்பிக்கப்பட வேண்டும்.செய்தி பத்திரிகை , ஆன்லைன் செய்திபத்திரிகை நடத்துபவர்கள் என அனைவரும் லைசென்ஸ்எடுக்க வேண்டும் என சவுதி அரசின் கலாச்சார மற்றும் இன்பர்மேஷன் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரபு நாடுகளில் பிளாக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். 20 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



இது போன்ற சட்டம் நம் நாட்டிலும் அமுல்படுத்தினால் நம் நிலை என்ன ஆவது ?