இந்தியா ஆஸ்திரேலியா


நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது எல்லோருக்கும் மிகவும் சோகம் , என்ன பண்றது சார் நாம பசங்க ஒருத்தர் விளையாண்டா இன்னொருத்தர் விளையாட மாட்டாங்க , அதுதான நம்மோட ஸ்டைல் , நம்ம டீம் ல எல்லோரும் எல்லா எப்பவும் நல்ல விளையாண்டா நாம்தான் நம்பர் ஒன் டீம் ,

சச்சின் நேற்று பதினேழு ஆயிரம் ரன் அடிக்கிறது உள்ள நமக்கு எல்லாம் எவ்ளோ பயம் (அனால் அவருக்கு இல்ல ) ரொம்ப வருஷம் ஆச்சு , சச்சின் இந்த மாதிரி விளையாடி , நம்ம ஒபெநிங் விளைய்டுற சேவாக் நாற்பது ரன்னுக்கு மேல அடிக்க மாட்டேனு எப்பவுமே பிடிவாதமாக இருக்கார் , ஒபெநிக் எப்பவுமே அவருடைய ஸ்கோர் முப்பது அல்லது நாற்பது , அடுத்து காம்பிர் இவர் எல்லாரையும் நல்ல ஏமாத்திட்டு போய்ட்டார் , ஆனா ரிக்கி பாண்டிங் முகத்தில் கடைசி விக்கெட் எடுத்த அப்புறம் தான் சிரிப்பே வந்துச்சு.

நம்ம கேப்டன் விளையாடி இருந்தா கூட நமக்கு ஒரு முப்பது ரன் வந்து நமக்கு உதவியா இருந்து இருக்கும் , அதுவும் இல்லாமல் போச்சு ,நேற்று மிகவும் அதிகபடியாக எதிர்பார்க்க பட்டது யுவராஜ் , ஆனால் அவர் நம் மிகவும் ஏமாற்றி விட்டார் .ஹர்பஜன் சிங் அவுட் ஆனது நமக்கு மிகவும் ஏமாற்றம் , ஜடேஜா மற்றும் படேல் இவங்க ரெண்டு பெரும் கபடி விளையாடுறாங்க , தேவையில்லாம ரன் அவுட் ஆகி நமோட வெற்றி போயிருச்சு , நம்மோட முயற்சி மிகவும் பாராட்ட தக்கது , நம்ம அணிக்கு நம்பர் ஒன் இடத்திற்கு போவதிற்கு நீண்ட நாள் இல்லை , ஆஸ்திரேலியா அணியை விட நாம் பலமாக தான் இருக்கிறோம் .


சச்சினுடைய ஆட்டம் புதுசா விளையாட வந்த பசங்களுக்கும் (சீன் போடுற சுள்ளங்களுக்கும் ) ஒரு பாடம்.

Post a Comment

0 Comments