NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Monday, April 30, 2012

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்

பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய்ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.

Post Comment

ஹவுஸ்புல் 2 ரீமேக்கில் ஜீவா, ஆர்யா, விஷால்?

இந்தியில் ஜான் ஆப்பிரஹாம், அசின், அக்ஷய்குமார், ரித்தேஷ் தேஷ்முக் என ஸ்டார் கூட்டணியில் வெளியான ஹவுஸ்புல் 2 வசூலில் சாதனை படைத்துள்ளதை தொடர்ந்து, அப்படத்தினை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தமிழ் ரீமேக்கில், ஆர்யா, விஷால், ஜீவா ஆகியோர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே டெல்லி பெல்லி ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார் ஆர்யா இந்நிலையில் அவருக்கு இன்னொரு ரீமேக் வாய்ப்பும் ஹவுஸ்புல் 2 ரூபத்தில் வந்துள்ளது. ஏற்கனவே இந்தி த்ரீ இடியட்ஸ் ரீமேக்கில் நடித்த ஜீவா, ஹவுஸ்புல் 2 ரீமேக்கில் நடிப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தமிழ் ரசிகர்கள் தற்போது காமெடி சப்ஜெக்டுகளை விரும்புவதால், ஹவுஸ்புல் 2 ரீமேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கோடம்பாக்கம் கூறுகிறது. தமிழில் ரிலீஸான பந்தா பரமசிவம் என்ற படத்தின் ரீமேக் தான் ஹவுஸ்புல். இந்தியில் கல்லா கட்டியதால், இப்போது புதுப்பொலிவுடன் மீண்டும் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் விஷாலும் ஒரு ரோலில் நடிக்கலாம் என்கிறது விவரமறிந்த வட்டாரம். 

Post Comment

Sunday, April 29, 2012

கரூரில் வாடிக்கையாளர்களை இழந்து வரும் பி.எஸ்.என்.எல்

 கரூரில் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல் இழந்து வருவதால் தங்களது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்..

கரூர் மாவட்டமானது ஜவுளித் தொழில், பேருந்து கட்டுமானப் பணி, கொசுவலை மற்றும் சாயப்பட்டறை போன்ற பல தொழில்களை உள்ளடக்கியதாகும். இந்தத் தொழில்களை நம்பி பல லட்சம் பேர் பிழைத்து வருகின்றனர்.

தொழில் நகரமான கரூரில் தொடக்க காலத்தில் தொழில் அதிபர்களுக்கு கை கொடுத்தது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.தான். இந்நிறுவனத்தின் அனைத்து சேவைகளையுமே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக பி.எஸ்.என்.எல். நிறுவன பணியாளர்களின் முகம் சுளிக்க வைக்கிற செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவதை தவிர்ப்போரின் எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் உயர்ந்து வருகிறது.

இதைப் பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுவதுடன் வாடிக்கையாளர்களின் குறைகளையும் உடனே நிவர்த்தி செய்து விடுகிறது. இது தொடர்பாக புகார் கொடுக்க திருச்சி பொது மேலாளர் அலுவலகத்தின் எண் 0431 - 2460000 ஐ தொடர்பு கொண்டால் பொது மேலாளர் வெளியே சென்றுள்ளார் என்ற பதிலே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தனியார் நிறுவனங்கள் லாபமடைவதற்காகவே பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதே நிலைமை நீடிக்குமேயானால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும் என்கிறார்கள் 'கஷ்டமர்கள்'!

Post Comment

Saturday, April 28, 2012

இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி

திருப்பூரில் இணையதளம் மூலம் பின்னலாடை நிறுவன கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை தொண்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 லட்சம் மீட்கப்பட்டது.


திருப்பூரில் சிபி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் பின்னலாடை வர்த்தம் செய்து வருகிறது. வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இணையதள பண பரிவர்த்தனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இணைய தள முகவரிக்கு கடந்த மார்ச் மாதம் netsecure@onlinesbi.com என்ற முகவரியில் இருந்து அந்நிறுவனத்தின் வங்கி கணக்கு எண் மற்றும் இணைய தள ரகசிய குறியீட்டு எண்ணை ஆகியவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு தகவல் வந்தது.
மேலும் தில்லியில் இருந்து தொலைபேசி வழியாக படிவம் பூர்த்தி செய்து அனுப்பாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்த தகவலை தொடர்ந்து அந்த நிறுவனம் வங்கி கணக்கு எண் மற்றும் இணையதள ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தது. இதையடுத்து சிபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன வங்கி கணக்கில் இருந்து 8 வங்கி கணக்குகளுக்கு இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.


இந்த மோசடி குறித்து அந்நிறுவனத்தின் கணக்கு மேலாளர் முத்துசாமிசுப்பிரமணியன் திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து திருப்பூர் ஏ.எஸ்.பி. (பயிற்சி) விக்ரமன் தலைமையிலான தனிப்படையினர் மகாராஷ்ட்ரா மாநிலம் புனே, தானே போன்ற இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  


விசாரணையில் இணைய தளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி செய்து அப்பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் கோவையில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய புனேவை சேர்ந்த பிராஸ்கான் என்பவரை தனிப்படையினர் மகாராஷ்ட்ரா மாநில போலீஸ் உதவியுடன் இம்மாதம் 19 ம் தேதி கைது செய்தனர்.


பிராஸ்கான் அளித்த தகவலின்பேரில் மும்பையில் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த பென்சான் (27) புனேவில் தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் அஸ்வின்பராய் (24), புனேவில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் ரிஸ்வான்கான் (26) ஆகியோரை போலீஸார் கடந்த 24 ம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தனர்.


பென்சான், ரிஸ்வான்கான், அஸ்வின்பராய் ஆகியோர் சிபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன கணக்கில் இருந்து இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் தில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


திருப்பூர், கோவை மாவட்டங்களில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கில் கோவை தொண்டு நிறுவனம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது என சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். அப்போது ஏ.எஸ்.பி. விக்ரமன், டி.எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.

Post Comment

நானோ காரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிகாரி

குறைந்த விலையில் மிகத் தரமான அம்சங்களை டாடா நானோ கார் கொண்டிருக்கிறது. இது தொழில்நுட்பத்துறையின் புதிய மணி மகுடமாக விளங்குகிறது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையை கடந்த 3 ஆண்டுகளாக நானோ கார் தக்க வைத்து வருகிறது. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் நானோ கார் இதுவரை எதிர்பார்த்த அளவு சாதனை படைக்கவில்லை.

சலுகைகள், பிரச்சாரங்கள் மூலம் நானோ காரின் விற்பனை தற்போது ஓரளவு நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு நானோ கார் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

ஐரோப்பிய, அமெரிக்க சந்தையிலும் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ராபர்ட் டி ஹார்மட்ஸ் நானோ காரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

"3,000 டாலர் விலையில் எனும் மிகக்குறைந்த விலையில் தயாரிக்கப்படும் நானோ கார் உலகின் குறைந்த விலை கார் தயாரிப்பு திட்டங்களுக்கு முன்மாதிரியான அம்சங்களுடன் திகழ்கிறது. புதிய குறைந்த விலை கார் திட்டங்களுக்கு ஒரு புதிய தர நிர்ணயத்துக்கும் அடிப்படையை அமைத்துக் கொடுத்துள்ளது.

கார் வடிவைமப்பு தொழில்நுட்பத்தின் மணி மகுடமாக நானோ கார் விளங்குகிறது. குறைந்த விலையில் இத்துனை அம்சங்களுடன் ஒரு காரை வடிவமைப்பது மிக சவாலானது," என்று அவர் நானோவுக்கும், டாடாவுக்கும் புகழாராம் சூட்டியுள்ளார்.

வடிவமைப்பு, தரம் என பல்வேறு கோணங்களில் உள்நாட்டு வாடிக்கையாளர்களை இதுவரை முழுமையாக நானோ கார் கவராத நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் குறைந்த விலை கார்களை வடிவமைப்பதில் உள்ள சவால்களை கருத்தில்கொண்டு நானோ காரை வெகுவாக அவர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Comment

Friday, April 27, 2012

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

Post Comment

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா


தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்தை திருஞான சம்பந்தர் நிறுவினார்.

இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Comment

Thursday, April 26, 2012

அண்ணா தொழில்நுட்ப பல்கலை இணைப்பு சிக்கலால் மாணவர்கள் குழப்பம்


அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளை இணைப்பது தொடர்பாக தெளிவான முடிவுகள் எடுக்கப்படாததால், 6 லட்சம் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், இக்கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை பாதிக்க வாய்ப்புள்ளது என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 2007 பிப்ரவரியில் திருச்சி, கோவையிலும், செப்., மாதத்தில் நெல்லையிலும், 2010ல் சென்னை, மதுரை என 5 இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் துவங்கப்பட்டன. இப்பல்கலைக்கு உட்பட்டு, தற்போதுள்ள 550 தொழில்நுட்ப கல்லூரிகளில், 6 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
புதிய ஆட்சி வந்தபின், இப்பல்கலைகள் ஒன்றாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பான தெளிவான முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. பல &'செமஸ்டர்கள்&' முடித்துள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிகாலம் ஜூனில் முடிவடைகிறது. அதற்குபின், தொழில்நுட்ப பல்கலைகள் ஒன்றாக இணைக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. அவ்வாறு இணைக்கப்படும்போது மதிப்பெண் சான்றுகள் மதுரை, திருச்சி, நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் இருந்தும், இணைப்புக்கு பின் சென்னை அண்ணா பல்கலையில் இருந்தும் டிகிரி சான்றுகள் வழங்க வாய்ப்புள்ளது.
அதாவது, மதிப்பெண் சான்று ஒரு பெயரிலும் (அண்ணா தொழில்நுட்ப கிளை பல்கலைகள்), டிகிரி சான்று வேறொரு பெயரிலும் (சென்னை அண்ணா பல்கலை) வழங்கப்படும். இரு பெயர்கள் கொண்ட சான்றிதழ்களுடன், உயர் கல்விக்காக வெளிநாட்டில் சென்று படிக்க செல்லும் மாணவர்களை, அங்குள்ள பல்கலைகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கிளை பல்கலைகள் ரத்து செய்யப்படும் நிலையில், இங்கு படித்து வெளிநாடு அல்லது பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும்போது உண்மை தன்மை சான்று பெறுவதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
முதல் பருவ தேர்வு
பி.இ., எம்.இ., படிப்புக்கான முதல் பருவ தேர்வை கடந்த ஜனவரியில் அனைத்து கிளைகளுக்கும் சேர்த்து சென்னை அண்ணா பல்கலையே நடத்தியது. ஒவ்வொரு பல்கலை கிளைக்கும் துணைவேந்தர் அந்தஸ்தில் ஒருவர் இருக்கும்போது, உரிய அறிவிப்பின்றி கிளை பல்கலைகளை ஒன்றாக இணைக்காமல், அனைத்து கிளைக்கும் சேர்த்து சென்னை அண்ணா பல்கலை பருவமுறை தேர்வை நடத்தலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளில் படிக்கும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பங்களால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post Comment

டெக்னிக்கல்' கூலி


""இந்தியாவில் படித்து, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யும் இன்ஜினியர்கள், அங்கு "டெக்னிக்கல்' கூலிகளாக உள்ளனர்,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
உலகப் புத்தக திருநாளை முன்னிட்டு, விஜயா பதிப்பகம் சார்பில் கோவையில் புத்தகக் கண்காட்சி நடந்தது. மேயர் வேலுசாமி, கண்காட்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மற்றும் தமிழக திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி கூறியதாவது:

குறைவு: தமிழில், மிகச் சிறந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தான் குறைவு. குறிப்பாக, மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களை படிப்பதில்லை. அதிகம் மதிப்பெண் பெற வேண்டி, பாடங்களை மனப்பாடம் செய்கின்றனர்; விஷயத்தை புரிந்து படிப்பதில்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று, இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பலர், முதலாமாண்டு செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. இதற்கு பாடத்தை, புரிந்து படிக்காதது தான் காரணம். மனப்பாடக் கல்வி, அறிவை வளர்க்காது. இலக்கியம், வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களை படித்தால் தான், அறிவு விரிவடையும்.

கூலிகள்: இந்தியாவில் படித்து, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யும் இன்ஜினியர்கள், அங்கு "டெக்னிக்கல்' கூலிகளாகத் தான் வேலை பார்க்கின்றனர். இன்ஜினியரிங் படித்தவர்கள், அங்கு இன்ஜினியர்களாக இல்லை; அங்குள்ள ஐ,டி., கம்பெனிகளில், கம்ப்யூட்டர் புரோகிராமர்களாக உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், 20 சதவீதம் பேர் தான் வேலைக்குச் செல்கின்றனர்; 80 சதவீதம் பேர் சும்மாவாக உள்ளனர். நாம் டாக்டர், இன்ஜினியர், வழக்கறிஞர் என்று பட்டம் பெற்றால் மட்டும் போதாது; நல்ல மனிதர்களாக, நல்ல குடிமகனாக இருப்பது முக்கியம். இந்த சிந்தனை வளர வேண்டும் என்றால், சிறந்த புத்தகங்களையும், சாதனையாளர்களின் வரலாறுகளையும், உன்னதமான இலக்கியங்களையும் படிக்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி பேசினார்.

Post Comment

Wednesday, April 25, 2012

உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்!?

 உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life and Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.

அதை விட கொடுமை, தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...

Post Comment

Tuesday, April 24, 2012

தல’ தோணியின் எந்த 'ஹேர்ஸ்டைல்' உங்களுக்குப் பிடிக்கும்?

ஐ.பி.எல் மேட்ச் பற்றிதான் இன்றைக்கு எங்குமே பேச்சு. அதுவும் சென்ற முறை ஐ.பி.எல் கப் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் கப் வெல்லுமா என்பதும், அணியின் கேப்டன் தோணி அதை நிறைவேற்றுவாரா என்பதும் பலரது எதிர்பார்ப்பு. கேப்டன் தோணி ஆரம்பத்தில் இந்திய அணியில் இணைந்தது முதல் இன்றைக்கு கேப்டனாக ஜொலிப்பது வரை பல்வேறு ஹேர் ஸ்டைல்களில் பலரையும் கவர்ந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தோணியின் ஹேர்ஸ்டைல் மீது அலாதியான மோகம் தான். தோணியின் வித விதமான ஹேர் ஸ்டைல் குறித்து விவரிக்கின்றனர் பிரபல ஸ்டைலிஸ்டுகள்.

கிரிக்கெட் வீரர்களை தினசரி டிவியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்தாலும் அது ஸ்டைல்தான். முக்கியமாக தலை அலங்காரம் அனைவரையும் கவரக்கூடியது. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோணி முதலில் நீளமாக முடியை வளர்த்திருந்தார். அதுவே அவரை தனியாக அடையாளப் படுத்தி காட்ட உதவியது. உலகப் கோப்பையை ஜெயித்த உடன் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று வழு வழு என்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தார். அதுவும் அனைவராலும் கவரப்பட்டது. அதுதான் தோணி. தன்னுடைய கேப்டன்ஷிப் பற்றி மட்டுமல்ல தன்னைப் பற்றியும் தனியாக பேசவேண்டும் என்று விரும்புபவர் கூல் கேப்டன் தோணி.

தோள் பட்டை வரை நீண்ட முடி 

இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே முதல் முதலில் நீளமுடி வளர்த்தவர் தோணிதான். அந்த முடியும் கோல்டன் கலர் டை அடித்தது கூடுதல் கவர்ச்சியாக இருந்தது. பல கிரிக்கெட் ரசிகர்கள் தோணியின் அதிரடி ஆட்டத்தில் மயங்கி நீள முடிக்காரர்களாக மாறினர் என்பது சிறப்பம்சம்

க்ராப்கட் அழகு முடி

தோள்பட்டை வரை நீண்டிருந்த முடியை தனது நண்பரும் பாலிவுட் நடிகருமான ஜான் ஆப்ரஹாம் கோரிக்கையை ஏற்று குட்டையாக அழகாக வெட்டிக்கொண்டார். இந்த ஸ்பைகி ஹேர் ஸ்டைல் இளம் பெண்கள் பலரை அவரது ரசிகைகளாக மாற்றியது.

மொட்டைத்தலை

உலகக் கோப்பை வெற்றியை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். தோணியிடம் ஆர்பாட்டம் எதுவும் இல்லை. கூலாக போய் மொட்டை போட்டுக்கொண்டு வந்து விட்டார். பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இதுபற்றி கேள்வி எழுமே என்ற கவலை இல்லை. உலகக் கோப்பை வெற்றியைப் பற்றி கேட்ட கேள்வியை விட தோணியின் மொட்டை பற்றியே கேள்வி எழுந்தது. ஊடகங்கள் பரபரப்பாக பேசின. அதுதான் தோணி சிறந்த ட்ரெண்ட் செட்டர் என்பதை நிரூபித்தவர்.

ஆர்மி ஸ்டைல்

முடி வளர்ந்த உடன் ஆர்மி ஸ்டைல் ஹேர் கட் செய்து கொண்டார். இது அவருக்கு அம்சமாக பொருந்தி வந்தது. சமீபத்தில் தோணி தன்னுடைய ஹேர் ஸ்டைலை லேயர்டு டைப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை முறை ஹேர் ஸ்டைல் மாற்றினாலும் சரி தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதில் தோணிக்கு நிகர் தோணிதான். அவருடைய ரசிகர்களை கவர்ந்ததும் அந்த கூல் டைப் தான். இதேபோல் கால்பந்தாட்ட வீரர்களான டேவிட் பெக்காம் உள்ளிட்டவர்களும் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்பவர்கள்தான். ஆனால் தோணியைப் போல பல வித தலை அலங்காரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை.

Post Comment

Monday, April 23, 2012

2,000 புத்தகங்களை எடைக்கு போட்டுவிட்டு பட்டினி கிடந்தேன்


விண்ணை முட்டும் கட்டடங்கள், கோடிகளில் புரளும் வியாபாரங்கள் நிறைந்த தி.நகரில் 1,400 சதுர அடிகட்டடத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், கடந்த 48 வருடங்களாக வாடகை நூலகம் நடத்துகிறார் ரவிராஜ். அறவியில் வளர்ச்சியில் வீட்டுக்குள் வந்து அமர்ந்துள்ள சாத்தான் என்கிறார் தொலைக்காட்சிப் பெட்டியை. கடந்த காலத்தில் மக்களுக்கு படிப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. புத்தக விற்பனை அமோகமாக இருந்தது. இப்போது படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக ஆதங்கப்படுகிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து... என்ன படித்திருக்கிறீர்கள்?
பி.யூ.சி., படித்திருக்கிறேன்.இந்த தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?மூர் மார்க்கெட்டில் நண்பர் ஒருவர் வாடகை நூலகம் நடத்தி வந்தார். புத்தகம் வாசிக்க கடைக்குச் செல்வேன். காலப்போக்கில் நானும் கடை நடத்த தொடங்கினேன்.தி.நகரில் எத்தனை ஆண்டுகள்? 48 ஆண்டுகள் கடந்து விட்டன. பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். 
ஒரு மகன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். மற்றொரு மகனும், மகளும் புகழ்பெற்ற கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
வாடகை நூலகத்தில் கிடைத்த வருமானம் கொண்டு தான் படிக்க வைத்தீர்களா?பழைய புத்தகங்கள் தான் எங்களை வாழவைத்தன.வாசிப்பவர்களின் எண்ணிக்கை எப்படி உள்ளது?
புத்தகம் படிப்பவர்கள் குறைந்து விட்டனர். கடந்த 20 வருடங்களுக்கு முன் மக்களுக்கு படிப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. வாசகர்களில் யார் அதிகம்? பெண்கள் அதிகமாக புத்தகம் வாங்குகிறார்கள். ஏதோ அழகு குறிப்பு, சமையல் புத்தகங்கள் வாங்குகிறார்கள் என, நினைக்க வேண்டாம். தலை சிறந்த புத்தகங்களை வாசிக்கிறார்கள். ஆண்களுக்கு பெரிதாக ஆர்வமில்லை.பிரபலங்கள் வந்ததுண்டா?
இந்தக் கடையில் கால் வைக்காத பிரபலங்களே இல்லை. தமிழகத்தில் இருந்த தலைசிறந்த எழுத்தாளர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமாத் துறையினர் அனைவரும் வந்துள்ளனர். பெயர் பட்டியல் மிக நீளமானது.

அடிக்கடி வரும் பிரபலங்கள் யார்?பாக்கியராஜ், ஜி.ஆர்.டி., மனோரமா, ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் இன்னும் பலர்...ஆளை விழுங்கும் தி.நகரில் இத்தனை ஆண்டுகள் வாடகை நூலகம் நடத்துவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டுமே?உழைப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. கையும் காலும் தான் உதவி; கொண்ட கடமை தான் பதவி என்பது போல, யாரிடமும் 10 பைசா கூட வாங்குவதில்லை.
பிள்ளைகள் உதவி செய்கிறார்களா?அடுத்தவர் உழைப்பில் வாழக் கூடாது என்பது என் கொள்கை. உயிர் இருக்கும் வரை நூலகம் நடத்துவேன்.வாடகை புத்தகம் எந்தளவுக்கு செல்கிறது?
புத்தக வாசிப்பு குறைந்து போனதால், வியாபாரம் பாதித்து, 2,000 புத்தகங்களை எடைக்குப் போட்டு விட்டு ஒரு வாரம் சாப்பிடாமல் கிடந்தேன். அப்புறம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்.
நூல்களை வாடகைக்கு எடுப்போர் பத்திரமாகக் கொண்டு வருகிறார்களா?பச்சிளம் குழந்தைபோல் பாதுகாப்புடன் கொண்டு வருவார்கள்.எதிர்கால சந்ததிக்கு தெரிவிப்பது...
இளம் வயதில் தமிழா படி, தமிழா படி என்று தெருத்தெருவாக குரல் எழுப்பியிருக்கிறேன். படித்தால் மட்டுமே தன்மானத்துடன் வாழ முடியும். சட்டம் இயற்றியாவது நூல்களைப் படிக்க வைக்க வேண்டும்.இவ்வாறு ரவிராஜ் தெரிவித்தார்.

Post Comment

Sunday, April 22, 2012

இந்தியாவில் புதிய ஐபேட்


இந்தியாவில் ஆப்பிளின் ஐபேடுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆப்பிள் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் இதுவரை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. கண்டிப்பாக ஆப்பிளின் இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வரும் ஏப்ரல் 27 முதல் இந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் அதன் விலையையும் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதன்படி 16ஜிபி அளவுள்ள புதிய ஐபேட் ரூ.30500க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் 36500க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.42500க்கு விற்கப்படும்.
அடுத்ததாக வைபை+ மற்றும் 4ஜி வசதியுடன் வரும் 16ஜிபி ஐபேட் ரூ.38900க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் ரூ.44900க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.50900க்கு விற்கப்படும்.
இந்த புதிய ஐபேடின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இது புதிய ரெட்டினா டிஸ்ப்ளே, க்வட் கோர் க்ராபிக்சுடன் கூடிய ஆப்பிளின் புதிய எ5எக்ஸ் சிப், 5 மெகா பிக்சல் ஐசைட் கேமரா மற்றும் 1080 எச்டி வீடியோ வசதி மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் போன்றவற்றைக் கொண்டு வருகிறது. இந்த புதிய ஐபேட் இந்தியாவில் வெற்றிக் கனியைப் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Post Comment

Saturday, April 21, 2012

மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம்: ட்ராய்


இனி ரூ.20க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக ரூ.1 பிராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து இதுவரை ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் ரூ.2 பிராசஸிங் கட்டண வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அந்த 2 ரூபாய் அல்லாது கூடுதலாக, ரூ.1 பிராசஸிங் கட்டணமாக ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும். இது ரூ.20 மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு. ரூ.20-க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் அவசியம் இல்லை.
அதிகமாக மொபைல்களை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவிகிதம் பேர் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள். வெறும் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

Post Comment

Friday, April 20, 2012

தலைவரை நியமிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

காவிரி நடுவர் மன்றத்துக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி.சிங், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துவிட்டார் என்று நான் அறிகிறேன். காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிப்பது குறித்து காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இதுவரை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந் நிலையில், காவிரி நதிநீர் தாவா தொடர்பான பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007ம் ஆண்டில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கக் கோரி தமிழக அரசு 16-3-2012 அன்று காவிரி நடுவர் மன்றத்தில் மனு செய்தது. இந்த மனு, 17-4-2012 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நடுவர் மன்றம் 23-3-2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்துவிட்டதால், அன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்றத் தலைவரின் ராஜினாமா, தமிழக மக்களின் மனதில் கடும் கவலையையும், ஆபத்து வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவா சட்டப் பிரிவு 4 (2)-ன்படி காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் செயல்பட முடியாது.

இந்த சட்டப்பிரிவு 5 ஏ-ன்படி, காவிரி நடுவர் மன்றத் தலைவர் இல்லாமல் தீர்ப்பாய நடவடிக்கைகள் எதையும் தொடர முடியாது. இந்தச் சூழ்நிலையில், தாங்கள் நேரடியாகத் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டுëம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Post Comment

Thursday, April 19, 2012

குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகள் கூடத்தில் பாய் விரித்து தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டே படுப்பது அவர்களுக்கு குதூகலத்தை தரக்கூடியது. இன்றைக்கு கூட்டுக்குடும்பம் என்பது அருகிப் போய்விட்டது. தனிக்குடித்தனத்தில் கூட பெற்றோர் தனியாகவும், குழந்தைகள் தனியாகவும் படுக்கின்றனர். இது தவறான பழக்கமாகும். குழந்தைகளை தங்களுடன் ஒன்றாக படுக்க வைப்பதுதான் நன்மை தரக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள்.

நன்னடத்தை அதிகரிக்கும்

குழந்தைகளும் பெற்றோர்களும் ஒரே படுக்கையறையில் உறங்குவதால் குழந்தைகளின் நடத்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறதாம். அவர்களின் சுய சிந்தனை, நன்னடத்தை அதிகரிக்கிறதாம். மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

உடல், மன வளர்ச்சி

உளவியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. நாம் தனித்து விடப்பட வில்லை. நம்மை பாதுகாக்க பெற்றோர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றதாம். பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மன நலம் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்ற மடைந்துள்ளது. மேலும் அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக வளர பெற்றோர்களுடன் உறங்குவதே ஏற்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மன அழுத்தம் குறைகிறது

பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள், பறவை கூட்டில் தாய் பறவையின் அரவணைப்பில் குஞ்சு பாதுகாப்பாக உறங்குவதைப்போல உணர்கின்றனர். அவர்களின் உளவியல் ரீதியான ஹார்மோன் நன்றாக செயல்படுகிறது. குழந்தைகள் தனியாக உறங்கும்போது மன அழுத்தம் தரும் கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கிறதாம். அதேசமயம் பெற்றோருடன் உறங்கும் போது ஹார்மோன் சுரப்பு குறைகிறதாம். ஹார்வார்டு பல்கலைக்கழக உளவியல்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 

தொந்தரவில்லாத உறக்கம்

குழந்தைகளுடன் உறங்கும் போது அவர்களுக்கு தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது. இதனால் பகல் வேலைகளில் குழந்தைகளால் உற்சாகமாக செயல்படமுடிகிறது.

பாதுகாப்பு உணர்வு

குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உறங்குவதனால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. அவர்களின் தன்னம்பிகையும், சுதந்திர உணர்வும் அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு அட்டாச்மென்ட் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

படுக்கயறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிக நேரம் ஒன்றாக தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த குடும்ப படுக்கையறை ஸ்டைல் மூலம் குடும்ப உறவுகளின் மீது குழந்தைகளுக்கு ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

Post Comment

Wednesday, April 18, 2012

3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை-ரஜினிகாந்த்

 3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால, அதை ஈடுகட்டுவதில் உதவ ரஜினி முன்வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது முழுக்க தவறான செய்தி என ரஜினியே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3' திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Post Comment

Tuesday, April 17, 2012

கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!- 3 சிக்கல்

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பிலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்திலும் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான 3 படம் பிளாப் என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகி விட்டது. தெலுங்கில் இந்தப் படம் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளதாம். இதனால் நாலாபுறமும் தனுஷை நிதி சிக்கல் நெருக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மருமகனை இந்த சிக்கலிலிருந்து காக்க கை கொடுத்துள்ளாராம்.

கொலவெறி பாடல் ஏற்படுத்திய மிகப் பெரிய ஹைப் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் வெளியான 3 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படம் நன்றாகப் போவதாக செய்திகள் வெளியானாலும் கூட படம் பிளாப் என்று இப்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்துள்ளதாம். வார இறுதி நாட்களிலும் கூட பல தியேட்டர்களில் திணறித் திணறித்தான் கூட்டம் கூடுகிறதாம்.

இந்த நிலையில் 3 படத்தால் சிக்கல்களில் சிக்க ஆரம்பித்துள்ளாம் தனுஷ் குடும்பம். இந்தப் படத்தை தனுஷ் குடும்பம்தான் தயாரித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டி குமாரால் சிக்கல் உருவெடுத்திருப்பதால், மகளையும், மருமகனையும் பத்திரமாக காப்பாற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியே களத்தில் குதிக்க நேரிட்டுள்ளதாம்.

ரஜினிகாந்த் இப்படி பண உதவி செய்வது என்பது புதிதல்ல. ஏற்கனவே குசேலன் படம் தொடர்பாக இப்படி ஒரு சிக்கல் வந்தபோது சற்றும் தயக்கமில்லாமல் நஷ்டக் கணக்கை தனது சொந்தப் பணத்தை வைத்து சரி செய்து கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியவர் அவர் என்பது நினைவிருக்கலாம். தற்போது மருமகன் தனுஷுக்கும் அவர் கை கொடுத்துள்ளாராம்.

3 படத்தின் ஆந்திர விநியோக உரிமையை வாங்கியவரான நட்டி குமார்தான் 3 படம் தொடர்பாக முதல் குண்டைப் போட்டவர். தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதற்கு தனுஷ், ஐஸ்வர்யாதான் காரணம் என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டினார் நட்டி. ரூ. 4 கோடிக்கு இந்த நட்டி குமார் படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

3 படம் தொடர்பாகவும், நட்டி குமாரின் குற்றச்சாட்டு காரணமாகவும் வெளி வரும் செய்திகள் ரஜினியை அப்செட் செய்துள்ளதாம். இதை அவர் விரும்பவில்லையாம். எனவே இந்தப் பிரச்சினை சட்டென்று சரி செய்து விட வேண்டும் என்று அவர் விரும்புகிறாராம். இதனால் நஷ்டப் பணத்தைக் கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறும், அந்தப் பணத்தைத் தானே தருவதாகவும் ஐஸ்வர்யா, தனுஷிடம் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நட்டி குமார் தனது மகள், மருமகனால் நஷ்டப்பட்டுப் போனேன் என்று கூறியது ரஜினியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இதையடுத்தே இந்த முடிவுக்கு வந்தாராம் ரஜினி. ரஜினியின் இந்த முடிவை ஐஸ்வர்யாவும், தனுஷும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியே நட்டியைத் தொடர்பு கொண்டு நஷ்டத்தை சரி செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.

இந்த செய்திகள்தான் இப்போது கோலிவுட்டை பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பாக ரஜினி தரப்பிலோ அல்லது ஐஸ்வர்யா தரப்பிலோ அல்லது நட்டி தரப்பிலோ யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுப்பு வெளியிடவும் இல்லை.

Post Comment

Sunday, April 15, 2012

சிக்மா கேமரா


சிக்மா தனது தலைசிறந்த புதிய கேமரா ஒன்றை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு சிக்மா எஸ்டி1 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மிகவும் ஸ்டைலாக இருக்கும் இந்த கேமரா செயல்பாட்டிலும் சூப்பராக இருக்கும்.
இதன் முக்கிய தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இந்த கேமரா இன்டர்சேஞ்சபுள் லென்ஸ் எஸ்எல்ஆர், 15எக்ஸ்3எம்பி போவோன் எக்ஸ்3 சிமோஸ் சென்சார், 11 எஎப் சென்சார், 48 எம்பி கொண்ட எல்சிடி திரை மற்றும் எஎப் பைன் டியூனிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் வியூவ் பைன்டர், 3.0 இன்ச் எல்சிடி மானிட்டர்  மற்றும் லயன் பேட்டரி போன்றவற்றையும் இந்த கேமரா கொண்டுள்ளது. இதன் எடை 700 கிராம் மட்டுமே. இந்த கேமராவின் செயல்பாடு மிக வேகமாக இருக்கும்.
இந்த கேமராவில் யுஎஸ்பி 2.0 மற்றும் வீடியோ அவுட் உள்ளதால் இது எடுக்கும் படங்களை மிக எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும்.
மேலும் பல நவீன் தொழில் நுட்பங்களைக் கொண்டு வரும் இந்த கேமராவின் விலை ரூ.115000 ஆகும். ஏற்கனவே இந்த கேமராவிற்கு பலரிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக போட்டோ எடுக்கும் துறையில் ஈடுபடுபவர்களுக்கு சரியான கேமராவாக இது இருக்கும்.

Post Comment

Saturday, April 14, 2012

யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார் கெவின் பீட்டர்சன்


அமெரிக்காவில் புற்றுநோய் கட்டிக்கான சிகிச்சை முடித்து நாடு திரும்பியுள்ள இந்திய மிடில் ஆடர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கை, இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்திய மிடில் ஆடர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கிற்கு, கடந்த ஆண்டு புற்றுநோய் கட்டி ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா சென்ற யுவராஜ் சிங்கிற்கு 3 நிலைகளை கொண்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடித்து கடந்த 9ம் தேதி இந்தியா திரும்பிய, யுவராஜ் சிங் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்வில்ஸ் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இருவரின் சந்திப்பு குறித்து பீட்டர்சன், ட்விட்டர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், பெய் சுக்கரை(யுவராஜ் சிங்) நேரில் சந்தித்து பேசியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இணையதளத்தில் கடந்த வாரம் பீட்டர்சன் வெளியிட்ட செய்தியில் அவர் கூறியிருந்ததாவது

லண்டனில் இருந்து யுவராஜ் சிங் இந்தியா செல்லும் முன் சந்தித்து அவருடன் பேசியதை அதிஷ்டமாக கருதுகிறேன். வரும் வாரம் (இந்த வாரம்) அவரை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். ஒரு விளையாட்டு வீரரின் இக்கட்டான சூழ்நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிப்பது விளையாட்டு வீரரான எனது கடமையாக நினைக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

கடந்த 2008ல் இந்தியாவில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள வந்த கெவின் பீட்டர்சனுக்கு, யுவராஜ் சிங் உடன் நட்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post Comment

Friday, April 13, 2012

நியூயார்க் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார் ஷாரூக்கான்!

 இந்தி நடிகர் ஷாரூக்கானை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் 2 மணிநேரம் நியூயார்க் விமானநிலையத்தில் தடுத்து வைத்தனர்.

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். யேல் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக ஷாரூக்கானும் அவருடன் முகேஷ் அம்பானியின் மனைவி நீடாவும் நியூயார்க் சென்றிருந்தனர்.

நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கிய ஷாரூக்"கான்" என்ற பெயரைக் கேட்டதும் கிலி அடைந்தார்போல் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை அப்படியே ஓரம்கட்டி உட்காரவைத்துவிட்டனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து ஷாரூக்கானிடம் விசாரணை நடத்திக் கொண்டே இருந்தனர். இப்படியே 2 மணிநேரம் ஓடிப்போய்விட்டது. இதன் பிறகே ஷாரூக்கான் விடுவிக்கப்பட்டார்.

யேல் பல்கலைக் கழகமும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுதான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ப்பது தெரியவந்தது.

இது பற்றி கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் இதெல்லாம் சகஜம்... எப்பவுமே நடக்கிறதுதான் பாஸ் என்ற ரீதியில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இப்படி ஷாரூக்கான் சோதனையில் சிக்குவது 3-வது முறை. காரணம் கான் என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்காகாரர்களுக்கு குழப்பம் ஏற்படுவதே!. கமல்ஹாசனைக் கூட இப்படித்தான் ஒரு்முறை நிறுத்தி வைத்து சோதித்தனர் - காரணம் அவரது பெயரில் ஹாசன் என்ற பெயர் இருப்பதால்.

Post Comment

Thursday, April 12, 2012

சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி கட்டத்தில் 'திரில்' வெற்றி

ஐபிஎல் 5 தொடரில்  முதல் போட்டியில் 206 ரன்களை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. துவக்கத்தில் டு பிளசிஸ், மார்கல் ஆகியோரின் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 5 தொடரில்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூர் அணியினர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல், அகர்வால் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய அகர்வால் 26 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து, 45 ரன்கள் எடுத்தார். பின்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்ற போது, பிராவோவின் கையில் கேட்சாகி வெளியேறினார்.

துவக்கத்தில் பொறுமையாக ஆடி கிறிஸ் கெய்ல், அகர்வால் வெளியேறிய பிறகு தனது வழக்கமான அதிரடிக்கு மாறினார். ரெய்னாவின் முதல் ஓவரிலேயே 3 சிக்ஸ் அடித்த அவர் அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

35 பந்துகளை சந்தித்து 6 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசிய கெய்ல் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஜடோஜாவின் பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த டி வில்லியர்ஸ் 4 ரன்களில் ஏமாற்றினார்.

பொறுப்பாக ஆடி வந்த விராத் கோஹ்லி 2 சிக்ஸ், 5 பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்து அதிரடிக்கு தாவினார். இறுதிக் கட்டத்தில் வந்த திவாரி 8 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார்.

கடைசி ஓவரை வீசிய போலிஞ்சர் சிக்ஸ் அடிக்க முயன்ற விராத் கோஹ்லியை 57 ரன்களில் வெளியேற்றினார். அடுத்த வந்த கேப்டன் வெட்டோரி 1 ரன்னில் ரன் அவுட்டானார். மேலும் ராஜூ, புஜாரா ஆகியோர் டக் அவுட்டாகினர். கடைசி பந்தில் வினய் குமார் ஒரு சிக்ஸ் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்களை இழந்து 205 ரன்களை குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் போலிஞ்சர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களையும், மார்கல், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மந்தமான துவக்கம் கிடைத்தது. சோம்பிலாக ஆடிய முரளிவிஜய் 11 ரன்களை எடுத்து முரளிதரன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

துவக்க வீரர் டு பிளசிஸ் மட்டும் அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த சுரேஷ் ரெய்னா 23 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த டு பிளசிஸ் 71 ரன்களில் முரளிதரனின் பந்திலேயே அவுட்டானார். அதன்பிறகு வந்த டோணி 2 சிக்ஸ் அடித்து 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

விராத் கோஹ்லி வீசிய 18வது ஓவர் சென்னை சூப்பர் கிங்க் அணிக்கு சாதகமாக அமைந்தது. டோணிக்கு பிறகு ஆட வந்த அல்பி மார்கல் 18வது ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து மொத்தம் 28 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் அதிரடி மார்கல் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். இதையடுத்து போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தது.

அதன்பிறகு பிராவோ 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் முரளிதரன் 3 விக்கெட்களை எடுத்தார்.

Post Comment

சச்சின் பயன்படுத்தும் பிளாக்பெர்ரி


கிரிகெட் கிங் என்று பட்டம் பெற்ற சச்சின் டென்டுல்கர் பயன்படு்த்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பல புதிய புதிய மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வந்தாலும், பெரிய பிரபலங்கள் எந்த மொபைலை பயன்படு்த்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும்.
அந்த அடிப்படையில் சென்சுரி நாயகன் சச்சின் டென்டுல்கர் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் போர்ஷே பி-9981 என்ற ஸ்மார்ட்போனை பயன்படு்த்தும் தகவல் ட்விட்டர் மூலம் வெளியாகி உள்ளது.
ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தின் மூலம் சச்சின் டென்டுல்கர் பயன்படுத்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டிஎப்டி தொடுதிரையில், கியூவர்டி கீப்பேட் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் 2.8 இஞ்ச் பிக்ஸல் திரையினையும் கொண்டது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி 7.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.
8ஜிபி வரை மெமரி வசதியினை கொடு்க்கும் இந்த ஸ்மார்ட்போனில், 16ஜிபி வரை கூடுதல் மெமரியினை பெற இதன் மைக்ரோஎஸ்டி வசதி சப்போர்ட் செய்கிறது. அதிக வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் அதிகம் தான்.
பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போனை ரூ.112,975 விலையில் பெறலாம்.

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME