NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Saturday, March 31, 2012

உலகம் முழுதும் இன்று இணையதளத்தை முடக்க சதி

உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை இன்று முடக்க இருப்பதாக சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார்.

சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டு பேசியதாவது:

இணையதளங்களில் "அனானிமஸ்' (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது வரையாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான். இதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012.

உலகம் முழுதும் 31 பேர் கைது:

யார் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்.

இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் பிளாக் அவுட்

"ஆபரேஷன் பிளாக் அவுட்' அவர்களிடம் விசாரணை நடத்தியதில், "ஆபரேஷன் பிளாக் அவுட்' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சி மேற்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சைபர் குற்றங்களை முறியடிக்க தனியொரு நாடால் முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்.

போலி பாஸ்போர்ட்

வெளிநாடுகளுக்குப் பயங்கரவாதிகள் போலி பாஸ்போர்ட் மூலம் சர்வ சாதாரணமாக செல்கிறார்கள். அதை முறியடிக்கும் வகையில் 150 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களை இண்டர்போல் அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. அதன் உதவியுடன்தான், 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்த சர்வதேச பார்வையாளர்களின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் யாராவது குற்றம் செய்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றால் அவருக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பிக்கப்படும். அந்த வாரண்ட் ஐரோப்பிய நாடுகள் முழுமைக்கும் பொதுவாக இருக்கும். அதனால், அங்கு வேறு நாட்டில் உள்ளவரைக் கைது செய்வதில் பிரச்னை இருக்காது.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மற்ற நாடுகளில் இண்டர்போல் மூலம் 'ரெட் கார்னர்" நோட்டீஸ் வெளியிடப்படும். அதன்படி, சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் கருதப்படுவார். ஆனால், அவர்களைக் கண்டுபிடிப்பதும் சட்ட நடவடிக்கை எடுப்பதும் கடினம்.

இந்த நிலை மாற வேண்டுமானால், இண்டர்போல் உறுப்பு நாடுகளுக்குள் பரஸ்பர சட்ட நடைமுறைகளை எளிமையாக்கி குற்றவாளிகளைக் கைது செய்யும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும்," என்றார் ரொனால்டு கே. நோபல்.

Post Comment

Friday, March 30, 2012

தமிழகத்தில் மின் கட்டணம் 37 சதவீதம் உயர்வு


தமிழகத்தில் மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்தது.
இந்த மின்கட்டண உயர்வு, 37 சதவீதம் வரை இருக்கும் என்றும், இது ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளையில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு விவரம்:
வீடுகளுக்கு...
* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,

* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)

* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80

* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3

* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில்  200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3

* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.

* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75
தொழிற்சாலைகளுக்கு..
தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.
வர்த்தக நிறுவனங்களுக்கு... 

* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30

* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்

* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50
குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு...

* 500 யூனிட் வரை - ரூ. 3.50

* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4

வழிபாட்டுத் தலங்களுக்கு...

* 120 யூனிட் வரை ரூ.2.50

* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5

விசைத்தறி கூடங்களுக்கு... 

* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.

* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4
கல்வி நிறுவனங்களுக்கு...

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5 

Post Comment

'மார்பிள் மாபியா' பாணியில் ராமஜெயம் கொலையா?

ராஜஸ்தானில் மார்பிள் தொழில் நடத்துவோர் தங்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த சோராபுதீன் ஷேக்கை எப்படி ஒன்று சேர்ந்து பெரும் பணத்தைச் செலவு செய்து, குஜராத் போலீஸ் மூலம் கொலை செய்தனரோ, அதே பாணியில் ராமஜெயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்காரர்கள் ஒன்று சேர்ந்து கூலிப்படையை வைத்து ராமஜெயத்தைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ராமஜெயம் ஒரு சாதாரண என்ஜீனியர்தான். ஜனனி குரூப் ஆப் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார். அவரது அண்ணன் நேரு அரசியலில் பெரியவராக உருவெடுத்த பின்னர் அவரது வலதுகரமாக மாறினார். தனது முழு நேரப் பணிகளை சைடு பிசினஸ் போல மாற்றி விட்டு கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் அவர் தீவிரம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

நேருவின் அரசியல் பணிகள், காண்டிராக்ட், குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட தொழில்களை கவனித்து வந்தார் ராமஜெயம். இதில் ரியல் எஸ்டேட் தொழிலில்தான் அவருக்கு நிறைய எதிரிகள் உருவாகினர். காரணம், அடாவடியாக பலரது நிலங்களையும் ராமஜெயம் தரப்பு வளைத்துப் போட்டதுதான் என்கிறார்கள். இதனால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக அவரது பொறியியல் கல்லூரிக்குத் தேவையான நிலத்தை பெருமளவில் ஆக்கிரமித்து எடுத்துக் கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரியல் எஸ்டேட்காரர்கள் கடந்த வருடம் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டனர். இதில் ராமஜெயத்தின் பெயர் அடிபட்டது. ஆனால் அப்போது நடந்தது திமுக ஆட்சி. எனவே அடிபட்டதோடு சரி, அதன் பிறகு அது அப்படியே அமுங்கிப் போய் விட்டது.

இப்படி கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும், ராமஜெயத்துக்கு எதிராக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த பலர் எதிரிகளாக உருவாகி வந்தனர். இப்படி ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் புள்ளிகள் அனைவரும் இணைந்து கூலிப்படையை ஏவி ராமஜெயத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களின் கொலைக்குப் பழி தீர்க்கும் வகையிலும் இது நடந்திருக்கலாமோ என்ற சந்தேகப் பார்வையும் விழுந்துள்ளது.

மேலும் ராமஜெயத்தின் நடமாட்டத்தை மிக மிக உன்னிப்பாக கவனித்துக் காத்திருந்து போட்டுள்ளனர். அவர் எப்போது தனியாக சிக்குவார் என்பதைக் கவனித்து ஆளைத் தூக்கியுள்ளனர். மேலும் நேற்று அவர் தனியாக வருவார் என்பதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்து கொண்டு டிராவலர் வேனில் கடத்திச் சென்று கொலை செய்துள்ளதைப் பார்க்கும்போது கொலை செய்வதில் மிக மிக நேர்த்தியாக செயல்படும் கை தேர்ந்த கொலைகாரக் கும்பல்தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

எனவே கொலைகாரக் கும்பல் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அல்லது வேறு மாநிலத்திலிருந்து கூட்டி வரப்பட்டவர்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Post Comment

Thursday, March 29, 2012

ரூ. 1.34 கோடி சம்பளத்தில் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை


சமூக இணையதளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் இணையதளம்,  ரூ. 1.34 கோடி ஆண்டு சம்பளத்திற்கு அலகாபாத் என்ஜினியரிங் மாணவரை பணிக்கு எடுத்திருக்கிறது. இந்திய அளவில் எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவரும் இந்த அளவு அதிக சம்பளம் பெற்றதில்லை.
இதுகுறித்து மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (MNNIT) இயக்குனரான பி சக்கரவர்த்தி கூறியதாவது:
எங்களது நிறுவனத்தில் பி.டெக். படித்துவரும் மாணவரைத்தான் பேஸ்புக் நிறுவனம் பணிக்கு அழைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட வேண்டாம் என அம்மாணவர் கேட்டுக் கொண்டதால் அவரது பெயரை இங்கே சொல்ல முடியவில்லை.
மார்ச் 27-ம் தேதி பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பணி நியமன ஆணை அம்மாணவருக்கு கிடைத்தது. ஆண்டுக்கு 2,62,500 அமெரிக்க டாலர் சம்பளமாக  (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.34 கோடி) வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு அக்டோபர் துவங்கியது. மின்னஞ்சல் மூலம் பேஸ்புக் விண்ணப்பம்  அனுப்பி இருந்தது. அதன் பிறகு 9 முறை தொலைபேசியில் இண்டர்வியூ நடத்தப்பட்டது. அனைத்து இண்டர்வியூவிலும் இம்மாணவர் வெற்றி பெற்றதால் வேலையில் வந்து சேருமாறு பேஸ்புக் இணையதளம் அழைப்பு விடுத்தது.
கான்பூரில் வசித்து வரும் இம்மாணவர்  தனது இன்ஜினீயரிங் படிப்பு முடிந்ததும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க்கில் பணியாற்ற இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Post Comment

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் கல்லணையை ஒட்டி புதர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வட்டாரத்தில் முக்கிய திமுக தலைவர் கே.என்.நேரு. முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது தம்பி ராமஜெயம். இவரது வீடு தில்லைநகர் பகுதியில் உள்ளது. ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் மீதும், கே.என்.நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன. குறிப்பாக நில மோசடி வழக்குகள் நிறைய போடப்பட்டன. இந்த வழக்குகளில் கைதாகி ஜாமீனி்ல் விடுதலையாகியிருந்தார் ராமஜெயம்.

இந்த நிலையில் இன்று காலை அவர் 6 மணிக்கு வழக்கம் போல வாக்கிங் போனார். ஆனால் 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பரபரப்படைந்தனர். அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான திமுகவினர் ராமஜெயம் மற்றும் நேரு வீடுகள் முன்பு திரண்டனர். பல்வேறு பகுதிகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் திருச்சி நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கியது.

இந்த நிலையில் ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்ட தகவல் இன்று பிற்பகல் போலீஸாருக்குக் கிடைத்தது. அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை அருகே நீர் நிரம்பிய புதர்ப் பகுதியில் வைத்து சிக்கியது. 

அவரைக் கை, கால்களைக் கட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ராமஜெயம் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அலறியடித்தபடி அவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு ராமஜெயம் உடலைப் பார்த்து அழுதபடி அடையாளம் காட்டினர்.

ராமஜெயத்தின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரை யார் கொன்றவர் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தனரா என்பது தெரியவில்லை.

ராமஜெயம் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், அதிர்சசி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Wednesday, March 28, 2012

கார் திருட்டை தடுக்கும் புதிய சாதனம்

மொபைல்போன் மூலமாக கார் திருட்டை தடுக்கும் புதிய சாதனத்தை கேரள கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சாதனம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார் திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பல நவீன சாதனங்கள் வந்தாலும் அவை எந்தளவுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன என்பது கூற முடியவில்லை.

இந்த நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள சித்ரா திருநாள் எஞ்சினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் புதிய கார் திருட்டு சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சாதனம் 100 சதவீத பாதுகாப்பை தரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொபைல்போனுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சாதனத்தை காரினுள் பொருத்திவிட வேண்டும். உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அன்னிய நபர்கள் காருக்குள் நுழைய முயன்றால் உடனடியாக உரிமையாளருக்கு அழைப்பு வரும்.

தெரிந்தவர்கள்தான் காரை திறக்கின்றனர் என உரிமையாளருக்கு தெரிந்தால் விட்டுவிடலாம். அப்படி இல்லாமல் புதிய நபர்கள் காரை திறக்கின்றனர் என்று தெரிந்தால், காருக்குள் பொருத்தப்பட்டிருக்கும் சாதனத்துக்கு அதே மொபைல்போனிலிருந்து ஒரு அழைப்பு செய்தால் போதும்.

இந்த சாதனம் உடனடியாக இயங்கி கார் எஞ்சினை ஆப் செய்து விடும். மீண்டும் உரிமையாளர் வந்து ரகசிய எண்ணை பதிவு செய்தால் மட்டுமே கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். உலகின் எந்த மூலையில் மொபைல்போன் தொடர்பில் இருந்தாலும் காரின் பாதுகாப்பை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்

இந்த கருவி 100 சதவீதம் பாதுகாப்பானது என்று இதை உருவாக்கிய மாணவர்கள் தெரிவி்த்தனர். மேலும், ரூ.2000 விலையில் விற்பனை செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

Post Comment

சூரியன் மீது வெள்ளி கிரகம்: ஜூன் 6​ந் தேதி

 சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கிரகம் வெள்ளி. மிக்கும் சூரியனுக்கும் இடையில் இந்த கிரகம் சுழன்று வருகிறது.  மி உள்பட எல்லா கிரகங்களும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றன. இதனால் சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கில் மறைகிறது. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சூழல்கின்றது. இதனால் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கு திசையில் உதிக்கும். இத்தகைய சிறப்புடைய வெள்ளி கிரகம் சூரியன் உதிக்கும் சமயத்திலும், சூரியன் மறையும் சமயத்திலும் அதிகபட்சத்தின் வெளிச்சத்தைக்காட்டி மிளிரும். இரவு நேரத்தில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக நட்சத்திரங்களிலேயே வெள்ளிதான் அதிக ஒளியுடன் திகழும்.   வெள்ளி கிரகத்தின் நகர்தலை வைத்து அதை அழைக்கிறார்கள். சூரியனின் இடதுபுறம் வெள்ளி இருக்கும்போது, வானத்தில் அது மேற்கு திசையில் காட்சி அளிக்கும். அப்போது அதை அந்தி வெள்ளி என்பார்கள். சூரியனின் வலதுபுறத்துக்கு வெள்ளி வரும்போது அதிகாலை நேரமாகும். அந்த வெள்ளி விடிவெள்ளி என்றழைக்கப்படுகிறது. 


             கிராமங்களில் இதை காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.   அந்த வெள்ளி காலத்தில்  சுக்கிரனுக்கு எதிராக கிரகப்பிரேவசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்ற நம்பிக்கையும் கிராமங்களில் உள்ளது.  சூரியனை ஒருதடவை சுற்ற 144 நாட்களை வெள்ளி கிரகம் எடுத்துக் கொள்ளும். பொதுவாக பகல் நேரங்களில் அது பளிச் என தெரியாது. ஆனால் வரும் ஜூன் மாதம் 6-ந்தேதி வெள்ளிக்கிரகம் மிக அர்வமான ஒரு நிலையில் காட்சியளிக்க உள்ளது. சூரியன் மீது வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டு போல தோன்றும். வெள்ளியின் சுழற்சி பாதையில் இத்தகைய நிகழ்வு மிக, மிக அரிதாகவே ஏற்படும். சூரியன் மீது கருப்புப் பொட்டுபோல தோன்றும் வெள்ளி, சிறிது நேரத்துக்குப் பிறகு மெல்ல, மெல்ல விலகும். இந்த அரிய, அர்வக் காட்சியை சென்னை மக்கள் 6​ந்தேதி காலை நன்கு கண்டு ரசிக்கலாம். சென்னையிலுள்ள பிளானிடோரியத்தில் இ தைக் காணலாம்.  சூரியன் மீது வெள்ளிகிரகம் கருப்பு பொட்டுபோல தோன்றும் நிகழ்ச்சி இனி 105 ஆண்டுகளுக்கு பிறகே நிகழ உள்ளது. ஆகையால் இப்போதைய தலைமுறையினர் இனி இதைக்கண்டு காண்பது அரிதாகும்.

Post Comment

Tuesday, March 27, 2012

ரூ.1500 கோடிக்கு புதிய வரி

தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமையல் எண்ணெய், வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் விலை உள்ளிட்டவை உயருகின்றன.

இதுதொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாவது:

சமையல் எண்ணெய் மீதான மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீத வரி அதிகரிக்கப்படும்.

பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட வணிகர்கள், தொழில் கூட்டமைப்புகளுக்கான கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இதர கோரிக்கைகளின் அடிப்படையிலும் நுகர்வோருக்கு பயன் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

வரிச் சலுகைகள்

- கோதுமை மீது தற்போது விதிக்கப்படும் 2 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- ஒட்ஸ் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். 

- சுற்றுச்சூழலுக்கு உகந்த சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு (இ-பைக்) விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு காம்பேக்ட் ப்ளோரசண்ட் விளக்குகள் மற்றும் காம்பேட் ப்ளோசரண்ட் குழல் விளக்குகளுக்கு தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும். 

இன்சுலின் மீதான வரி முழுமையாக வாபஸ்

- பெருகி வரும் சர்க்கரை நோயினை கருத்தில் கொண்டு இன்சூலின் மருந்துகளின் விலையினை குறைக்கும் பொருட்டு, அதன் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் தொடர்ச்சியாக சானிடரி நேப்கின்கள் மற்றும் டயாபர்கள் தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- கையினால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் காம்புகள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். 

ஹெல்மட் விலை குறையும்

- போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு தலைக் கவசத்திற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Monday, March 19, 2012

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது  இந்தியா.


 முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஹபீஸ் (105), ஜம்ஷெத் (112) ஆகியோரின் சதத்தால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி கோலியின் சதத்தால் (183 ரன்கள்) 47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடித்தது.


 முதல் விக்கெட்டுக்கு 224


 வங்கதேச தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முகமது ஹபீஸýம், நாசிர் ஜம்ஷெத்தும் பாகிஸ்தானின் இன்னிங்ûஸத் தொடங்கினர். ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்த பந்தில் அரைசதம் கண்டனர். இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
 33-வது ஓவரில் ஒருநாள் போட்டியில் தனது 4-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் ஹபீஸ். இந்தியாவுக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இது. அதே ஓவரில் பாகிஸ்தான் 200 ரன்களைக் கடந்தது. மறுமுனையில் 98 பந்துகளில் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஜம்ஷெத். பாகிஸ்தான் 36-வது ஓவரில் 224 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது.
 ஹபீஸ் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரில் ஜம்ஷெத் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்வரிசையில் யூனிஸ்கான் 34 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிக் கட்டத்தில் இந்திய பெüலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தியதால், 329 ரன்களில் முடிவுக்கு வந்தது.
 இந்தியத் தரப்பில் பிரவீண் குமார் 77 ரன்களையும், பதான் 69 ரன்களையும் வாரி வழங்கினர்.


 கோலி விளாசல்


 இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னாலேயே கம்பீரின் விக்கெட்டை இழந்தது. ஆரம்பம் முதலே வேகம் காட்டிய சச்சின், 48 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 133 ரன்களாக இருந்தது.
 இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் ரோஹித் சர்மா. 52 பந்துகளில் அரைசதம் கண்ட கோலி, 97 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள்போட்டியில் அவருடைய 11-வது சதம் இது.
 நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடக்க, மறுமுனையில் பாகிஸ்தான் பெüலர்களை பதம்பார்த்த கோலி 133 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். இந்தியா 305 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது.
 ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித்-கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. 148 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 48-வது ஓவரின் 5-வது பந்தில் தோனி பவுண்டரியை விரட்ட இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

 இறுதிச்சுற்றில் நுழையுமா இந்தியா?


 இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் தோல்வி கண்டால், 2 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இலங்கையை வங்கதேசம் வீழ்த்தினால், இந்தியாவும், வங்கேதசமும் சமபுள்ளிகளைப் பெறும். விதிமுறைப்படி இந்தியாவை வீழ்த்தியிருப்பதால் வங்கதேசம் இறுதிச்சுற்றை உறுதி செய்துவிடும்.

 இந்தியாவின் பெரிய சேஸிங்
 பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவதாக பேட் செய்து 330 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய சேஸிங் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 2002-ல் இங்கிலாந்துக்கு எதிராக 326 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே இந்திய அணியின் பெரிய சேஸிங் வெற்றியாக இருந்தது.

 கோலியின் அதிகபட்சம்
 இந்த ஆட்டத்தில் 183 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார் கோலி. சேவாக் (219), சச்சின் (200*, 186*) ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரன் குவித்த இந்தியர்களின் வரிசையில் கங்குலி, தோனி ஆகியோருடன் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கோலி.
 
 ஸ்கோர் போர்டு

 மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு)329
 விக்கெட் வீழ்ச்சி: 1-224 (ஜம்ஷெத்), 2-225 (ஹபீஸ்), 3-273 (அக்மல்), 4-313 (அப்ரிதி), 5-323 (யூனிஸ் கான்), 6-326 (ஆஸம்).
 பந்து வீச்சு: பிரவீண் குமார் 10-0-77-2, இர்ஃபான் பதான் 10-0-69-1, அசோக் திண்டா 8-0-47-2, சுரேஷ் ரெய்னா 2.2-0-15-0,
 ரோஹித் சர்மா 3-0-19-0, யூசுப் பதான் 5-0-30-0, அஸ்வின் 10-0-56-1, சச்சின் 1.4-0-12-0

 இந்தியா

 மொத்தம் (47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு)330

 விக்கெட் வீழ்ச்சி: 1-0 (கம்பீர்), 2-133 (சச்சின்),
 3-305 (ரோஹித்), 4-318 (கோலி).
 பந்து வீச்சு: ஹபீஸ் 9-0-42-1, உமர் குல் 8.5-0-65-2, சீமா 8-0-60}0, அஜ்மல் 9}0}49}1, அப்ரிதி 9}0}58}0, வஹாப் ரியாஸ் 4}0}50}0

 மின்வெட்டுக்கு விடுமுறை
 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை நாட்டு மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் பாகிஸ்தானில் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என்று அந்நாட்டு பிரதமர் கிலானி உத்தரவிட்டிருந்தார்.
 ஆட்டம் முடியும் வரை நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். மின் நிறுத்தம் கூடாது என்று நீர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.
 பாகிஸ்தானில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தினந்தோறும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் 5 மணி நேரமும், புறநகர்ப் பகுதிகளில் 12 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமலில் உள்ளது.

Post Comment

Sunday, March 18, 2012

தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம்


திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.

22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.

17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.

சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.

கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.

Post Comment

Saturday, March 17, 2012

ரூ 250 கோடி மோசடி: நடிகை ஜெனிலியா

ஹைதராபாத் கட்டுமான நிறுவனத்தின் ரூ 250 கோடி மோசடியில், அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கும் நடிகை ஜெனிலியா உள்பட ஐவர் மீது வழக்கு தொடர ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஞ்சனிபுத்ரா இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக உள்ளார் நடிகை ஜெனிலியா. 

ரூ 250 கோடி நிதி மோசடியில் சிக்கியுள்ளது இந்த நிறுவனம். வீடுகட்டித் தருவதாகக் கூறி 500 பேரிடம் பெரும் தொகையை வசூலித்தது இந்த நிறுவனம்.

இப்படி பணம் கொடுத்தவர்களில் ஒருவரான சிஎச் திருப்பாதையா என்பவர், ஹைதராபாத்தில் உள்ள பெருநகர தலைமை முதல் வகுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "2008-ல் அஞ்சனிபுத்ரா நிறுவனத்தின் இயக்குநரான சுதர்சன் குமார் ரெட்டி தனது நிறுவனத்தின் வீட்டு வசதித் திட்டத்தைச் சொல்லி, அதில் வீடு வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால், ஒரு தனி வீடு மற்றும் மாடிவீடு ஆகிய இரு வீடுகளுக்கு ரூ.54 லட்சம் கொடுத்தேன். ஆனால் அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி வீடு கட்டித்தரவில்லை.

சந்தேகத்தில் நிறுவன அலுவலகத்துப் போனேன். அது பூட்டப்பட்டிருந்தது. எனக்கு வீடு கட்டித்தருவதாகக் கூறப்பட்ட இடத்துக்குப் போய் விசாரித்ததில் அது வேறு ஒருவருக்குச் சொந்தம் என்று தெரிந்தது. என்னைப் போல பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதில் இழந்துள்ளனர். இந்த வீட்டு வசதித் திட்டம் தொடர்பான அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீட்டு வசதித் திட்டத்துக்கு விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை ஜெனிலியாதான். 

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மோசடியில் நடிகை ஜெனிலியா மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறும், வருகிற 27-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நேற்று சைபாபாத் போலீசுக்கு உத்தரவிட்டிருப்பதாக திருப்பாதையாவின் வக்கீல் பாலாஜி வதேரா தெரிவித்தார்.

Post Comment

Friday, March 16, 2012

100வது சதம், அடித்து சச்சின் புதிய சாதனை

 கடந்த ஓராண்டிற்கு மேலாக 100வது சதமடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியி்ல் ஒரு வழியாக அந்த மைல்கல்லை எட்டினார். துவக்க முதலே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 138 பந்தில் 100 ரன்கள் எடுத்தார்.

கிரிக்கெட் உலகில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அரங்கில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர், இரண்டிலும் அதிக ரன்களை எடுத்தவர், அதிக சதங்கள், அதிக அரைசதங்கள் என்று நீண்ட சாதனைப்பட்டியல் வைத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் இன்றைய போட்டியில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸ்சும் அடித்தார். அதில் முதல் பவுண்டரியை அடித்தபோது ஒருநாள் போட்டியில் 2,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 51 சதம், 65 அரைசதம் உட்பட மொத்தம் 15,470 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 55.44 ரன்களை வைத்துள்ளார். அதிகபட்சமாக 248 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேபோல 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 48 சதங்கள், 95 அரைசதங்கள் உட்பட 18,111 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 45.16 ரன்களை வைத்துள்ளார். அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் சச்சின் தனது 99வது சதத்தை அடித்தார். ஆனால் அதன்பிறகு பல டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றாலும் அவரால் 100வது சதம் சாதனையை எட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இன்றைய போட்டியில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றிவிட்டு வந்திருந்த அவர் துவக்கத்தில் இருந்தே பொறுமையாக ஆடினார். அரைசதத்தை கடந்த அவர் 138வது பந்தில் சதமடித்து சாதனை படைத்தார். இது ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடிக்கும் 49வது சதமாகும்.

கடந்த ஓராண்டாக 100வது சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்றைய போட்டியில் அச்சாதனையை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மைதானத்தில் சாமி கும்பிட்டனர். அவர் சதமடித்த உடன் சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். 

Post Comment

Thursday, March 15, 2012

இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.76,933

 உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று எனப் பெயரைப் பெற்றிருந்தாலும், இந்தியாவின் தனி நபர் வருவானம் இன்னும் சிலாகிக்கும் அளவுக்கு பெரிதாக உயரவில்லை.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ 76933 (1527 டாலர்) மட்டுமே.

இந்தியாவின் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை சற்று உயர்ந்தது என்றாலும், நடப்பு விலைவாசியோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும்.

ஜி 20 அமைப்பில் உள்ள நாடுகளில் மிகக் குறைந்த தனி நபர் வருவாய் கொண்ட நாடு என்ற 'அந்தஸ்து' இந்தியாவுக்கு மட்டும்தான். உலகின் பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் இருந்தும், தனிநபர் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லையே என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் தனி நபர் வருவாயில் 117வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது 94வது இடத்தைப் பெற்றுள்ளது.

1990-ல் சீனா 127வது இடத்திலிருந்தது. இப்போது அந்நாடு 74 வது இடத்தைப் பெற்றுள்ளது.

அதே நேரம், நாட்டின் மொத்த உற்பத்தி - ஜிடிபி- என்று பார்த்தால், உலகின் மற்ற நாடுகளைவிட நல்ல வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. 1980 முதல் 2010 வரை உலக ஜிடிபி 3.3 சதவீதம் அதிகரித்ததென்றால், இந்தியாவின் ஜிடிபி 6.2 சதவீத உயர்வு கண்டுள்ளது. உலக உற்பத்தி வீதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இந்தியாவை வெகுவாக பாதித்துள்ளதாகவும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

Post Comment

சேனல் -4 வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.


Sri Lanka's killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Sri Lanka's killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது.


இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.


இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4.


ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


Post Comment

ரயில் பயணக் கட்டணம் உயர்வு

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2012 - 2013 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.


மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். பயணிகள் கட்டணம் கி.மீ.க்கு 2 காசு முதல் 30 காசு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலை சிரமதசையில் உள்ளதாகவும், கட்டண உயர்வைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.


மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.


கட்டண உயர்வு: புறநகர் ரயில்கள், சாதாரண வகுப்புகளில் தற்போதைய கட்டணத்தைவிட கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. மெயில், எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்புக்கு 3 காசு; ஸ்லீப்பர் வகுப்புக்கு 5 காசு அதிகரிக்கப்படும்.


ஏ.சி. சேர் கார், 3 அடுக்கு ஏ.சி.க்கு 10 காசு, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 15 காசு, ஏ.சி. முதல் வகுப்புக்கு 30 காசு அதிகரிக்கப்படும். பிளாட்பார கட்டணம் ரூ. 5 ஆக அதிகரிக்கப்படும்.


இந்தக் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
ரயில்வே துறை கடினமான காலகட்டத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், ""சம்பள கமிஷனின் அறிவுறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது உள்ளிட்ட கூடுதல் செலவினங்களால் தாங்க முடியாத சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணத்தால்தான் இப்போது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில் கட்டண ஒழங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அமைச்சர்.
புதிய ரயில்கள்: 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 புதிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும். இவை தவிர, மெயின் லைனில் ஓடும் மின்சார ரயில்கள் 8, டீசலில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் 9 இயக்கப்படும். 39 ரயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும். இப்போதுள்ள 23 ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரயில் நிலையங்களை மேம்படுத்த... ரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 19 ஆயிரம் கி.மீ. தூரம் இருப்புப் பாதையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில்லாத வகையில் 2012-2013 நிதியாண்டுக்கு ரூ. 60,100 கோடி மதிப்பீட்டுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 1,112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (கடந்த நிதியாண்டில் ரூ. 762 கோடி).
12-வது ஐந்தாண்டு திட்டக் கால வரையறைக்குள் அனைத்து இருப்புப் பாதைகளையும், அகல ரயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 800 கி.மீ. அகல ரயில்பாதையாக மாற்ற ரூ. 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர புதிய இருப்புப் பாதைகளை அமைக்க ரூ. 6,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துறையில் 2012 - 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள் அமைக்கப்படும். ஆளற்ற ரயில் கேட்டுகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிக்கப்படும்.
ஒடிசாவின் சீதாபள்ளியில் சரக்கு ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை, கேரளத்தின் பாலக்காட்டில் பயணிகள் ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவப்படும்.
மேற்குவங்கத்தின் ஷியாம்நகரில் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையும், நய்ஹத்தியில் சரக்கு முனையம் ஏற்படுத்தப்படும்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகுரா வரை ரயில்களை இயக்க புதிய இருப்புப் பாதை அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் ரயில்வே துறையின் சார்பில் விளையாடும் வீரர்கள் 10 பேருக்கு ரயில் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.
12-வது ஐந்தாண்டு திட்டம், மம்தா பானர்ஜியின் தொலைநோக்குத் திட்டம் - 2020 ஆவணத்துடன் தொடர்புடையதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.
நிதி நிலைமை:பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ.45,000 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது ஒதுக்கப்படுவது ரூ. 24,000 கோடி மட்டுமே.
வரும் நிதியாண்டில் 1,025 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2011-2012 நிதியாண்டைவிட 55 மெட்ரிக் டன் அதிகமாகும்.
பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்குப் பின், அந்த வகையில் கிடைக்கும் வருவாய் ரூ. 36,200 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,03,917 கோடியாக இருந்தது. இது எதிர்பார்த்ததைவிட ரூ. 2,322 கோடி குறைவாகும்.
வரும் நிதியாண்டில் கட்டண வருவாய் 27.6 சதவீதம் அதிகரிக்கும் என்பதால் ரூ.1,32,552 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரயில்வே நலனுக்காகத்தான்...கட்டண உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறியது: ரயில்வேயின் நலனுக்காகத்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறித்து திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதுவும் தெரியாது. பலர் நினைப்பதுபோல, இந்த பட்ஜெட் ஒன்றும் ரைட்டர்ஸ் மாளிகையிலிருந்து (மேற்கு வங்க முதல்வர் அலுவலகம்) தயாரிக்கப்படவில்லை. இப்போது "ஐ.சி.யூ'வில் (அவசர சிகிச்சைப் பிரிவு) இருப்பதுபோன்று சிரமமான நிலையில் ரயில்வே துறை இருப்பதால்தான் இந்நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
முக்கிய அம்சங்கள்
புறநகர் ரயில், சாதாரண வகுப்பு ரயில்களில்
கி.மீ.க்கு 2 காசு உயர்வு.
மெயில், எக்ஸ்பிரஸ்களில் கி.மீ.க்கு 3 காசு உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு.
ஏசி சேர் கார், 3 டயர் ஏசி, முதல் வகுப்புக்கு கி.மீ.க்கு 10 காசு உயர்வு.
2 டயர் ஏசி ரயிலுக்கு கி.மீ.க்கு 15 காசும், ஏசி முதல் வகுப்புக்கு 30 காசும் உயர்வு.
பிளாட்பார டிக்கெட் ரூ. 5.
75 புதிய எக்ஸ்பிரஸ்கள்; 21 புதிய பாசஞ்சர்கள்.
இ.எம்.யூ. ரயில்கள் 8, டி.இ.எம்.யு. ரயில்கள் 9.
39 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்.
23 ரயில்களின் சேவை அதிகரிப்பு.
2012- 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.
ரயில் நிலைய மேம்பாட்டுக்கு அமைப்பு.
ரயில் பாதுகாப்புக்கு ஆணையம்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள்.
ஆளில்லா ரயில் கேட்டுகள் 5 ஆண்டுகளில் ஒழிப்பு.
2 அடுக்கு கன்டெய்னர் ரயில் அறிமுகம்.
பெரிய ரயில் நிலையங்களில் "எஸ்கலேட்டர்' வசதி.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று ரயில்களில் இடவசதி.
ரயிலில் டிஜிட்டல் போர்டில் அடுத்த நிறுத்தம் பற்றி அறிவிப்பு.
ரயில்கள் சென்றுகொண்டிருக்கும் பகுதி குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். இன்டெர்நெட் மூலம் அளிப்பு.
உணவுக்கான ஆர்டரை செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கும் வசதி.
மாற்றுத்திறனாளிப் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் பெட்டி வடிவமைப்பு.
ரயில்வே துறை விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு ""ரயில் கேல் ரத்னா'' விருது.
எலும்பு மஜ்ஜை, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு 50% கட்டணம் சலுகை.
"ஏழைகள் ரதம்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி பெட்டி.  மார்ச் 14:மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2012 - 2013 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். பயணிகள் கட்டணம் கி.மீ.க்கு 2 காசு முதல் 30 காசு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலை சிரமதசையில் உள்ளதாகவும், கட்டண உயர்வைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
கட்டண உயர்வு: புறநகர் ரயில்கள், சாதாரண வகுப்புகளில் தற்போதைய கட்டணத்தைவிட கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. மெயில், எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்புக்கு 3 காசு; ஸ்லீப்பர் வகுப்புக்கு 5 காசு அதிகரிக்கப்படும்.
ஏ.சி. சேர் கார், 3 அடுக்கு ஏ.சி.க்கு 10 காசு, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 15 காசு, ஏ.சி. முதல் வகுப்புக்கு 30 காசு அதிகரிக்கப்படும். பிளாட்பார கட்டணம் ரூ. 5 ஆக அதிகரிக்கப்படும்.
இந்தக் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அத��கரித்துள்ளதால், வேறுவழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
ரயில்வே துறை கடினமான காலகட்டத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், ""சம்பள கமிஷனின் அறிவுறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது உள்ளிட்ட கூடுதல் செலவினங்களால் தாங்க முடியாத சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணத்தால்தான் இப்போது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில் கட்டண ஒழங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அமைச்சர்.
புதிய ரயில்கள்: 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 புதிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும். இவை தவிர, மெயின் லைனில் ஓடும் மின்சார ரயில்கள் 8, டீசலில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் 9 இயக்கப்படும். 39 ரயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும். இப்போதுள்ள 23 ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரயில் நிலையங்களை மேம்படுத்த... ரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 19 ஆயிரம் கி.மீ. தூரம் இருப்புப் பாதையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில்லாத வகையில் 2012-2013 நிதியாண்டுக்கு ரூ. 60,100 கோடி மதிப்பீட்டுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 1,112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (கடந்த நிதியாண்டில் ரூ. 762 கோடி).
12-வது ஐந்தாண்டு திட்டக் கால வரையறைக்குள் அனைத்து இருப்புப் பாதைகளையும், அகல ரயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 800 கி.மீ. அகல ரயில்பாதையாக மாற்ற ரூ. 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர புதிய இருப்புப் பாதைகளை அமைக்க ரூ. 6,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துறையில் 2012 - 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள் அமைக்கப்படும். ஆளற்ற ரயில் கேட்டுகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிக்கப்படும்.
ஒடிசாவின் சீதாபள்ளியில் சரக்கு ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை, கேரளத்தின் பாலக்காட்டில் பயணிகள் ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவப்படும்.
மேற்குவங்கத்தின் ஷியாம்நகரில் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையும், நய்ஹத்தியில் சரக்கு முனையம் ஏற்படுத்தப்படும்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகுரா வரை ரயில்களை இயக்க புதிய இருப்புப் பாதை அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் ரயில்வே துறையின் சார்பில் விளையாடும் வீரர்கள் 10 பேருக்கு ரயில் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.
12-வது ஐந்தாண்டு திட்டம், மம்தா பானர்ஜியின் தொலைநோக்குத் திட்டம் - 2020 ஆவணத்துடன் தொடர்புடையதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.
நிதி நிலைமை:பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ.45,000 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது ஒதுக்கப்படுவது ரூ. 24,000 கோடி மட்டுமே.
வரும் நிதியாண்டில் 1,025 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2011-2012 நிதியாண்டைவிட 55 மெட்ரிக் டன் அதிகமாகும்.
பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்குப் பின், அந்த வகையில் கிடைக்கும் வருவாய் ரூ. 36,200 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,03,917 கோடியாக இருந்தது. இது எதிர்பார்த்ததைவிட ரூ. 2,322 கோடி குறைவாகும்.
வரும் நிதியாண்டில் கட்டண வருவாய் 27.6 சதவீதம் அதிகரிக்கும் என்பதால் ரூ.1,32,552 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரயில்வே நலனுக்காகத்தான்...கட்டண உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறியது: ரயில்வேயின் நலனுக்காகத்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறித்து திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதுவும் தெரியாது. பலர் நினைப்பதுபோல, இந்த பட்ஜெட் ஒன்றும் ரைட்டர்ஸ் மாளிகையிலிருந்து (மேற்கு வங்க முதல்வர் அலுவலகம்) தயாரிக்கப்படவில்லை. இப்போது "ஐ.சி.யூ'வில் (அவசர சிகிச்சைப் பிரிவு) இருப்பதுபோன்று சிரமமான நிலையில் ரயில்வே துறை இருப்பதால்தான் இந்நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
முக்கிய அம்சங்கள்
புறநகர் ரயில், சாதாரண வகுப்பு ரயில்களில்
கி.மீ.க்கு 2 காசு உயர்வு.
மெயில், எக்ஸ்பிரஸ்களில் கி.மீ.க்கு 3 காசு உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு.
ஏசி சேர் கார், 3 டயர் ஏசி, முதல் வகுப்புக்கு கி.மீ.க்கு 10 காசு உயர்வு.
2 டயர் ஏசி ரயிலுக்கு கி.மீ.க்கு 15 காசும், ஏசி முதல் வகுப்புக்கு 30 காசும் உயர்வு.
பிளாட்பார டிக்கெட் ரூ. 5.
75 புதிய எக்ஸ்பிரஸ்கள்; 21 புதிய பாசஞ்சர்கள்.
இ.எம்.யூ. ரயில்கள் 8, டி.இ.எம்.யு. ரயில்கள் 9.
39 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்.
23 ரயில்களின் சேவை அதிகரிப்பு.
2012- 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.
ரயில் நிலைய மேம்பாட்டுக்கு அமைப்பு.
ரயில் பாதுகாப்புக்கு ஆணையம்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள்.
ஆளில்லா ரயில் கேட்டுகள் 5 ஆண்டுகளில் ஒழிப்பு.
2 அடுக்கு கன்டெய்னர் ரயில் அறிமுகம்.
பெரிய ரயில் நிலையங்களில் "எஸ்கலேட்டர்' வசதி.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று ரயில்களில் இடவசதி.
ரயிலில் டிஜிட்டல் போர்டில் அடுத்த நிறுத்தம் பற்றி அறிவிப்பு.
ரயில்கள் சென்றுகொண்டிருக்கும் பகுதி குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். இன்டெர்நெட் மூலம் அளிப்பு.
உணவுக்கான ஆர்டரை செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கும் வசதி.
மாற்றுத்திறனாளிப் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் பெட்டி வடிவமைப்பு.
ரயில்வே துறை விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு ""ரயில் கேல் ரத்னா'' விருது.
எலும்பு மஜ்ஜை, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு 50% கட்டணம் சலுகை.
"ஏழைகள் ரதம்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி பெட்டி.  மார்ச் 14:மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2012 - 2013 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். பயணிகள் கட்டணம் கி.மீ.க்கு 2 காசு முதல் 30 காசு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலை சிரமதசையில் உள்ளதாகவும், கட்டண உயர்வைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
கட்டண உயர்வு: புறநகர் ரயில்கள், சாதாரண வகுப்புகளில் தற்போதைய கட்டணத்தைவிட கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. மெயில், எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்புக்கு 3 காசு; ஸ்லீப்பர் வகுப்புக்கு 5 காசு அதிகரிக்கப்படும்.
ஏ.சி. சேர் கார், 3 அடுக்கு ஏ.சி.க்கு 10 காசு, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 15 காசு, ஏ.சி. முதல் வகுப்புக்கு 30 காசு அதிகரிக்கப்படும். பிளாட்பார கட்டணம் ரூ. 5 ஆக அதிகரிக்கப்படும்.
இந்தக் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
ரயில்வே துறை கடினமான காலகட்டத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், ""சம்பள கமிஷனின் அறிவுறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது உள்ளிட்ட கூடுதல் செலவினங்களால் தாங்க முடியாத சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணத்தால்தான் இப்போது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில் கட்டண ஒழங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அமைச்சர்.
புதிய ரயில்கள்: 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 புதிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும். இவை தவிர, மெயின் லைனில் ஓடும் மின்சார ரயில்கள் 8, டீசலில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் 9 இயக்கப்படும். 39 ரயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும். இப்போதுள்ள 23 ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரயில் நிலையங்களை மேம்படுத்த... ரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 19 ஆயிரம் கி.மீ. தூரம் இருப்புப் பாதையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில்லாத வகையில் 2012-2013 நிதியாண்டுக்கு ரூ. 60,100 கோடி மதிப்பீட்டுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 1,112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (கடந்த நிதியாண்டில் ரூ. 762 கோடி).
12-வது ஐந்தாண்டு திட்டக் கால வரையறைக்குள் அனைத்து இருப்புப் பாதைகளையும், அகல ரயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 800 கி.மீ. அகல ரயில்பாதையாக மாற்ற ரூ. 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர புதிய இருப்புப் பாதைகளை அமைக்க ரூ. 6,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துறையில் 2012 - 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள் அமைக்கப்படும். ஆளற்ற ரயில் கேட்டுகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிக்கப்படும்.
ஒடிசாவின் சீதாபள்ளியில் சரக்கு ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை, கேரளத்தின் பாலக்காட்டில் பயணிகள் ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவப்படும்.
மேற்குவங்கத்தின் ஷியாம்நகரில் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையும், நய்ஹத்தியில் சரக்கு முனையம் ஏற்படுத்தப்படும்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகுரா வரை ரயில்களை இயக்க புதிய இருப்புப் பாதை அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் ரயில்வே துறையின் சார்பில் விளையாடும் வீரர்கள் 10 பேருக்கு ரயில் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.
12-வது ஐந்தாண்டு திட்டம், மம்தா பானர்ஜியின் தொலைநோக்குத் திட்டம் - 2020 ஆவணத்துடன் தொடர்புடையதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.
நிதி நிலைமை:பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ.45,000 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது ஒதுக்கப்படுவது ரூ. 24,000 கோடி மட்டுமே.
வரும் நிதியாண்டில் 1,025 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2011-2012 நிதியாண்டைவிட 55 மெட்ரிக் டன் அதிகமாகும்.
பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்குப் பின், அந்த வகையில் கிடைக்கும் வருவாய் ரூ. 36,200 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,03,917 கோடியாக இருந்தது. இது எதிர்பார்த்ததைவிட ரூ. 2,322 கோடி குறைவாகும்.
வரும் நிதியாண்டில் கட்டண வருவாய் 27.6 சதவீதம் அதிகரிக்கும் என்பதால் ரூ.1,32,552 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரயில்வே நலனுக்காகத்தான்...கட்டண உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறியது: ரயில்வேயின் நலனுக்காகத்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறித்து திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதுவும் தெரியாது. பலர் நினைப்பதுபோல, இந்த பட்ஜெட் ஒன்றும் ரைட்டர்ஸ் மாளிகையிலிருந்து (மேற்கு வங்க முதல்வர் அலுவலகம்) தயாரிக்கப்படவில்லை. இப்போது "ஐ.சி.யூ'வில் (அவசர சிகிச்சைப் பிரிவு) இருப்பதுபோன்று சிரமமான நிலையில் ரயில்வே துறை இருப்பதால்தான் இந்நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
முக்கிய அம்சங்கள்
புறநகர் ரயில், சாதாரண வகுப்பு ரயில்களில்
கி.மீ.க்கு 2 காசு உயர்வு.
மெயில், எக்ஸ்பிரஸ்களில் கி.மீ.க்கு 3 காசு உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு.
ஏசி சேர் கார், 3 டயர் ஏசி, முதல் வகுப்புக்கு கி.மீ.க்கு 10 காசு உயர்வு.
2 டயர் ஏசி ரயிலுக்கு கி.மீ.க்கு 15 காசும், ஏசி முதல் வகுப்புக்கு 30 காசும் உயர்வு.
பிளாட்பார டிக்கெட் ரூ. 5.
75 புதிய எக்ஸ்பிரஸ்கள்; 21 புதிய பாசஞ்சர்கள்.
இ.எம்.யூ. ரயில்கள் 8, டி.இ.எம்.யு. ரயில்கள் 9.
39 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்.
23 ரயில்களின் சேவை அதிகரிப்பு.
2012- 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.
ரயில் நிலைய மேம்பாட்டுக்கு அமைப்பு.
ரயில் பாதுகாப்புக்கு ஆணையம்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள்.
ஆளில்லா ரயில் கேட்டுகள் 5 ஆண்டுகளில் ஒழிப்பு.
2 அடுக்கு கன்டெய்னர் ரயில் அறிமுகம்.
பெரிய ரயில் நிலையங்களில் "எஸ்கலேட்டர்' வசதி.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று ரயில்களில் இடவசதி.
ரயிலில் டிஜிட்டல் போர்டில் அடுத்த நிறுத்தம் பற்றி அறிவிப்பு.
ரயில்கள் சென்றுகொண்டிருக்கும் பகுதி குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். இன்டெர்நெட் மூலம் அளிப்பு.
உணவுக்கான ஆர்டரை செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கும் வசதி.
மாற்றுத்திறனாளிப் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் பெட்டி வடிவமைப்பு.
ரயில்வே துறை விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு ""ரயில் கேல் ரத்னா'' விருது.
எலும்பு மஜ்ஜை, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு 50% கட்டணம் சலுகை.
"ஏழைகள் ரதம்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி பெட்டி.  மார்ச் 14:மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2012 - 2013 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். பயணிகள் கட்டணம் கி.மீ.க்கு 2 காசு முதல் 30 காசு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலை சிரமதசையில் உள்ளதாகவும், கட்டண உயர்வைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
கட்டண உயர்வு: புறநகர் ரயில்கள், சாதாரண வகுப்புகளில் தற்போதைய கட்டணத்தைவிட கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. மெயில், எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்புக்கு 3 காசு; ஸ்லீப்பர் வகுப்புக்கு 5 காசு அதிகரிக்கப்படும்.
ஏ.சி. சேர் கார், 3 அடுக்கு ஏ.சி.க்கு 10 காசு, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 15 காசு, ஏ.சி. முதல் வகுப்புக்கு 30 காசு அதிகரிக்கப்படும். பிளாட்பார கட்டணம் ரூ. 5 ஆக அதிகரிக்கப்படும்.
இந்தக் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
ரயில்வே துறை கடினமான காலகட்டத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், ""சம்பள கமிஷனின் அறிவுறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது உள்ளிட்ட கூடுதல் செலவினங்களால் தாங்க முடியாத சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணத்தால்தான் இப்போது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில் கட்டண ஒழங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அமைச்சர்.
புதிய ரயில்கள்: 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 புதிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும். இவை தவிர, மெயின் லைனில் ஓடும் மின்சார ரயில்கள் 8, டீசலில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் 9 இயக்கப்படும். 39 ரயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும். இப்போதுள்ள 23 ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரயில் நிலையங்களை மேம்படுத்த... ரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 19 ஆயிரம் கி.மீ. தூரம் இருப்புப் பாதையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில்லாத வகையில் 2012-2013 நிதியாண்டுக்கு ரூ. 60,100 கோடி மதிப்பீட்டுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 1,112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (கடந்த நிதியாண்டில் ரூ. 762 கோடி).
12-வது ஐந்தாண்டு திட்டக் கால வரையறைக்குள் அனைத்து இருப்புப் பாதைகளையும், அகல ரயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 800 கி.மீ. அகல ரயில்பாதையாக மாற்ற ரூ. 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர புதிய இருப்புப் பாதைகளை அமைக்க ரூ. 6,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துறையில் 2012 - 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள் அமைக்கப்படும். ஆளற்ற ரயில் கேட்டுகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிக்கப்படும்.
ஒடிசாவின் சீதாபள்ளியில் சரக்கு ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை, கேரளத்தின் பாலக்காட்டில் பயணிகள் ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவப்படும்.
மேற்குவங்கத்தின் ஷியாம்நகரில் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையும், நய்ஹத்தியில் சரக்கு முனையம் ஏற்படுத்தப்படும்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகுரா வரை ரயில்களை இயக்க புதிய இருப்புப் பாதை அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் ரயில்வே துறையின் சார்பில் விளையாடும் வீரர்கள் 10 பேருக்கு ரயில் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.
12-வது ஐந்தாண்டு திட்டம், மம்தா பானர்ஜியின் தொலைநோக்குத் திட்டம் - 2020 ஆவணத்துடன் தொடர்புடையதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.
நிதி நிலைமை:பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ.45,000 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது ஒதுக்கப்படுவது ரூ. 24,000 கோடி மட்டுமே.
வரும் நிதியாண்டில் 1,025 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2011-2012 நிதியாண்டைவிட 55 மெட்ரிக் டன் அதிகமாகும்.
பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்குப் பின், அந்த வகையில் கிடைக்கும் வருவாய் ரூ. 36,200 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,03,917 கோடியாக இருந்தது. இது எதிர்பார்த்ததைவிட ரூ. 2,322 கோடி குறைவாகும்.
வரும் நிதியாண்டில் கட்டண வருவாய் 27.6 சதவீதம் அதிகரிக்கும் என்பதால் ரூ.1,32,552 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரயில்வே நலனுக்காகத்தான்...கட்டண உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறியது: ரயில்வேயின் நலனுக்காகத்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறித்து திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதுவும் தெரியாது. பலர் நினைப்பதுபோல, இந்த பட்ஜெட் ஒன்றும் ரைட்டர்ஸ் மாளிகையிலிருந்து (மேற்கு வங்க முதல்வர் அலுவலகம்) தயாரிக்கப்படவில்லை. இப்போது "ஐ.சி.யூ'வில் (அவசர சிகிச்சைப் பிரிவு) இருப்பதுபோன்று சிரமமான நிலையில் ரயில்வே துறை இருப்பதால்தான் இந்நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
முக்கிய அம்சங்கள்
புறநகர் ரயில், சாதாரண வகுப்பு ரயில்களில்
கி.மீ.க்கு 2 காசு உயர்வு.
மெயில், எக்ஸ்பிரஸ்களில் கி.மீ.க்கு 3 காசு உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு.
ஏசி சேர் கார், 3 டயர் ஏசி, முதல் வகுப்புக்கு கி.மீ.க்கு 10 காசு உயர்வு.
2 டயர் ஏசி ரயிலுக்கு கி.மீ.க்கு 15 காசும், ஏசி முதல் வகுப்புக்கு 30 காசும் உயர்வு.
பிளாட்பார டிக்கெட் ரூ. 5.
75 புதிய எக்ஸ்பிரஸ்கள்; 21 புதிய பாசஞ்சர்கள்.
இ.எம்.யூ. ரயில்கள் 8, டி.இ.எம்.யு. ரயில்கள் 9.
39 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்.
23 ரயில்களின் சேவை அதிகரிப்பு.
2012- 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.
ரயில் நிலைய மேம்பாட்டுக்கு அமைப்பு.
ரயில் பாதுகாப்புக்கு ஆணையம்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள்.
ஆளில்லா ரயில் கேட்டுகள் 5 ஆண்டுகளில் ஒழிப்பு.
2 அடுக்கு கன்டெய்னர் ரயில் அறிமுகம்.
பெரிய ரயில் நிலையங்களில் "எஸ்கலேட்டர்' வசதி.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று ரயில்களில் இடவசதி.
ரயிலில் டிஜிட்டல் போர்டில் அடுத்த நிறுத்தம் பற்றி அறிவிப்பு.
ரயில்கள் சென்றுகொண்டிருக்கும் பகுதி குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். இன்டெர்நெட் மூலம் அளிப்பு.
உணவுக்கான ஆர்டரை செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கும் வசதி.
மாற்றுத்திறனாளிப் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் பெட்டி வடிவமைப்பு.
ரயில்வே துறை விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு ""ரயில் கேல் ரத்னா'' விருது.
எலும்பு மஜ்ஜை, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு 50% கட்டணம் சலுகை.
"ஏழைகள் ரதம்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி பெட்டி.

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME