செளமியா அன்புமணிக்கு முருகதாஸ் சவால்!

துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு டாகட்ர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், சினிமாப் பட வசனத்தை குறிப்பிட்டு ஒரு படத்தைப் போடடு நேரடியாகவே சவால் விட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருதகாஸ்.

துப்பாக்கி படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அசல் படத்தில் அஜீத் சுருடடுடன் காட்சி அளித்ததைப் போன்று விஜய் சுருட்டு பிடித்தபடி இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,

'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

`துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.

பசுமைத் தாயகத்தின் இந்தக் கோரிக்கைக்கு தற்போது இயக்குநர் முருகதாஸின் டிவி்ட்டரில் விஜய் ரசிகர்களும் பிறரும் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் உசசமாக முருகதாஸே, ஒரு படத்தைப் போட்டு இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

ஒரு இந்திப் படத்தில் இடம் பெற்ற, ஒருவன், இன்னொருவனை கீழே தள்ளி கொலை செய்வது போன்ற காட்சி அடங்கிய பட போஸ்டர் அது. அந்தப் படத்தைப் போட்டு, இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று கமென்ட் போட்டுளளார முருகதாஸ்.

Post a Comment

0 Comments