விமர்சகர்களைப் பற்றி கவலையில்லை - கௌதம் மேனன்

தமிழக இளைஞர்களிடையே தங்களுக்கு பிடித்த காதல் திரைப்படம் என்ன என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் கூறும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்க அப்படம் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தினை இந்தியில் 'EK DEEWANA THA' என்னும் பெயரில் கெளதம் மேனன் ரீமேக் செய்து வெளியிட்டார்.

தமிழில் கிடைத்த பெரும் வரவேற்பு இந்தியிலும் கிடைக்கும் என நம்பினார். ஆனால் அந்த் அளவிற்கு இந்தி திரையுலகினர் அப்படத்தினை வரவேற்கவில்லை. படமும் பெரும் தோல்வியுற்றது.

இது குறித்து கெளதம் மேனன் படம் வெளியான சமயத்தில் தனது டிவிட்டர் இணையத்தில் "விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை.  அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை" என்று தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்ததால் மீண்டும் கெளதம் தனது இணையத்தில் " பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம்.  ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது.. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. " என்று தெரிவித்திருக்கிறார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது.

Post a Comment

0 Comments