89.38 கோடியை எட்டிய மொபைல்போன் வாடிக்கையாளர்கள்


மொபைலும் கையுமாக இல்லாத நபர்களை இன்று பார்ப்பது மிக கடினமான ஒன்று. அந்த அளவுக்கு தொழில் நுட்ப வசிதகளையும், சவுகரியங்களையும் மொபைல்கள் மூலம் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது தொழில் நுட்ப உலகம். இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரது எண்ணிக்கை மொத்தம் 893.84 மில்லியனை எட்டி உள்ளது.
லேண்ட் லைன் பயன்படுத்துவோரது எண்ணிக்கை 926.53 மில்லியனை நெருங்கி உள்ளது. ஒட்டு மொத்தமாக தொலைபேசி பயன்படுத்தும் மக்கள் அடர்த்தி இந்தியாவில் 76.86% சதவிகிதத்தை எட்டி இருக்கிறது.
106.38 மில்லியன் மக்கள் ஐடியா செலுலாரை பயன்படு்த்துகின்றனர். யூனினார் நிறுவனம் 36.31 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 175.65 மில்லியன் வாடிக்ககையாளர்களையும், மக்கள் மத்தியில் அதிக பெயர் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் 150.08 மில்லியன் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
மொபைலகள் பயன்படுத்துவோரது எண்ணிக்கை பற்றி தெரிந்து கொள்ளும் போது, பிராட் பேண்டு வசதியை உபயோகிப்போரது விவரமும் பார்ப்போம். நவம்பர் மாதம் 13.13 மில்லியன் வாடிக்கையாளர்களும், டிசம்பர் மாதம் 13.30 மில்லியன் வாடிக்கையாளர்களும் பிராட் பேண்டு வசதியை பயன்படு்த்தி இருக்கின்றனர். இங்கே கூறப்பட்டுள்ள இந்த ஒரு மாத கால அளவில் 1.3 சதவிகிதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது பிராட் பேண்டு சேவை.
அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசி மற்றும் கைப்பேசியின் விவரம் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் பார்வையாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறிய தகவலாக இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments