நிலம் கையகப்படுத்த ரூ.152 கோடி ஒதுக்கீடு

 புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிக்கு, நிலங்களை கையகப்படுத்த ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 


நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாக சாலை கட்டமைப்பு உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக, சாலைகள் விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும்,  நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி  நடைபெறும் வண்ணமும், ரூ.152  கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments