துபாயில் தியானம் குறித்த பயிலரங்கு

துபாயில் தியானம் குறித்த பயிலரங்கினை ஹைதராபாத் பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொசைட்டியின் நிறுவனர் ஸ்ரீ சுபாஷ்ஜி பத்ரி நடத்தினார். தியானத்தின் அறிவியல் பூர்வ உண்மைகளை உணர்ந்து சிறப்பான உடல்நலம், மன அமைதி பெறுவதன் நோக்கத்தினை விவரித்தார்.

கடந்த 19-ம் தேதி கார்ஸ் வொர்க்‌ஷாப்பில் நடைபெற்ற நிகழ்வில் பொது மேலாளர் சலீம் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலாளர் கோபாலகிருஷ்ணன் பத்ரி குறித்த அறிமுகவுரை வழங்கினார். துணைப் பொது மேலாளர் வலித் தத்தாய் நினைவுப் பரிசு வழங்கினார். மேலாளர் குருமூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வின் நலத்துறை அலுவலர் அப்துல் கனி ஒருங்கிணைத்தார்.

கடந்த 20-ம் தேதி மாலை எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடைபெற்ற பயிலரங்கில் அமீரக பிரமிட் கிளை தலைவர் ஜெய்கிஷி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தியானம் குறித்தும் அதன் மூலம் நாம் அடையும் நன்மைகள் குறித்தும் பத்ரி விவரித்தார்.

பத்ரிக்கு பொதுமேலாளர் ஹமீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்று நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர்கள் பாலரசு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments