திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கரூரில் கைது-மணல்


காவிரியில் மணல் அள்ளுவது தொடர்பான பிரச்சினை தொடர்பாக முன்னாள் கரூர் எம்.பியும், தற்போதைய அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏவுமான கே.சி.பழனிச்சாமி இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

கரூரில் வைத்து பழனிச்சாமியை போலீஸார் கைது செய்தனர். திமுகவின் மிகப் பெரிய புள்ளிகளில் பழனிச்சாமியும் ஒருவர். கேசிபி என திமுகவினரால் அழைக்கப்படும் பழனிச்சாமி, மிகப் பெரிய கோடீஸ்வரர், திமுகவின் முக்கியஸ்தர்களில் ஒருவர். கரூர் ஜாம்பவானான இவர் ஏற்கனவே எம்.பியாக இருந்துள்ளார்.தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று திடீரென கேசிபி கைது செய்யப்பட்டார். கரூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டாரப். காவிரியில் மணல் அள்ளும் பிரச்சினை தொடர்பாக கேசிபி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவையும் விட கூடுதலாக மணல் அள்ளியதாக கேசிபி மீது கிராம நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கேசிபி தற்போது காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Post a Comment

0 Comments