அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு

சட்டசபையில் உயர்கல் வித்துறை அமைச்சர் பழனியப்பன் பல்கலைக் கழக சட்ட திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்து விட்டது. இதனால் கல்வி சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவு வெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகதரமிக்க நிறுவனங்களாக மாற்றி அமைக்க சிறப்பு திட்டம் ஒன்று செயல் படுத்தும். அதற்கேற்ப 2006-ம் ஆண்டு திருச்சி அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக சட்டம், கோயம் புத் தூர் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக சட்டம், 2007-ம் ஆண்டு திருநெல்வேலி அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக சட்டம், 2010-ம் ஆண்டு சென்னை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2010-ம் ஆண்டு மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழக சட்டம் ஆகிய சட்டங்களை நீக்கம் செய்வதென்றும் 1978-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கும் பொருட்டு இந்த சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments