NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Saturday, February 26, 2011

திகார் சிறை கைதிகளுக்கு CAMPUS INTERVIEW

திகார் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வளாக தேர்வுநடத்தப்பட்டது. இதன்மூலம் உடனடியாக விடுதலைபெறும்கைதிகள் வேலைக்கான அனுமதி கடித்ததுடன் மகிழ்ச்சியோடு விடுதலையாக உள்ளனர். புதுடில்லியில் உள்ள திகார் சிறை மற்ற சிறைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. பேஸ் புக்கில் இணைந்த முதல் சிறைச்சாலை என்ற பெருமையோடு சிறை கைதிகளை படிக்க வைப்பது மற்றும் கைத்தொழில் கற்று அந்த பொருள்களை சந்தைப்படுத்திதருவது என்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் சிறை நிர்வாகம் இயங்கி வந்தது. அதன் வரிசையில் தற்போது மற்றொரு நடவடிக்கையாக சிறைகைதிகளுக்கு பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்கச் செய்யும் வகையில் கேம்பஸ் இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து வேதாந்தா பவுண்டேசன், அகர்வால் பேக்கர்ஸ், ரிலாக்ஸ்கோ, பாரடோ செக்யூரிட்டி உள்ளிட்டவை நேர்முகத்தேர்வை நடத்தியது.இதில் அகர்வால் பேக்கர்ஸ் நிறுவனம் மட்டும் 30 பேர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சிறை அதிகாரி டெபுடி ஜெனரல் நீரஜ்குமார் தெரிவித்ததாவது: இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தவறு செய்பவர்கள் திருந்த செய்ய ஒரு முயற்சியாகும். மேலும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது ஆண் சிறை கைதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த கேம்பஸ் இன்டர்வியூ வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து பெண் சிறை கைதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தா

Post Comment

1 comment:

வேடந்தாங்கல் - கருன் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

POPULAR

Followers

FOLLOW ME