இந்திய கிராம மக்கள்

பிரதேச மாநிலத்தில் உள்ள குலு கிராம பகுதி மக்கள் டிவி நிகழ்ச்சி பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். அந்த கிராமத்தில் மின் வசதி உட்பட அனைத்துவசதிகள் இருந்தாலும் டிவி நிகழ்ச்சிகள் மட்டும் பார்ப்பதை கிராமத்தில் உள்ள அனைத்துமக்களும் ஒற்றுமையாக இருந்து தவிர்த்து வருகின்றனர்.இது குறித்து கிராம தலைவி சீமா தேவி கூறுகையில் கிராம மக்கள் தெய்வத்தை உறுதியாக நம்புகின்றனர்.டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் போன்றவை தங்களின் நம்பிக்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர்.கடந்த இரண்டு தலைமுறையாக யாரும் டிவியை பார்ப்பது கிடையாது.டிவியில் காண்பிக்கப்படும் ராமாயாணம் மற்றும் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். முன்னாள் கிராம தலைவர் பன்னா லால் குறிப்பிடுகையில் இன்றைய தலைமுறையினர் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்து குடும்ப மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments