கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் போக்குவரத்துபுறக்காவல் நிலையம் துவக்கம்

கரூர் அருகே போக்குவரத்து புறக்காவல் நிலையம் துவக்க விழா நடந்தது.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை காந்திகிராமம் பகுதியில் கடந்தாண்டுகளில் சட்டம் ஒழு ங்கு புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. காந்திகிராமம் பகுதியில் தொ டர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்துகள் நடப்பதால் அப்பகுதியில் புதிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சட்டம் ஒழுங்கு புறக்காவல் நிலையத்தில் ஒரு பகுதியாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. புறக்காவல் நிலையத்தை துவக்கி வைத்து கரூர் எஸ்.பி., மகேஸ்வரி கூறியதாவது:பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எ ல்லைக்கு உட்பட்ட காந்திகிராமம் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இரவு நேரங்களில் வழிபறி, கொலை, கொள்ளை போ ன்ற குற்றசெயல் நடந்து வருவதால், அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வை த்திருந்தனர். அதனடிப்படையில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சா லை காந்திகிராமம் பகுதியில் புற க்காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.நாளுக்குநாள் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் கோரிக்கை வைத்தனர். சட்டம் ஒழுங்கு புறகாவல் நிலையத்தின் ஒருபகுதியில் போக்குவரத்து புறகாவல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.இந்த ஸ்டேஷனில் ஒரு இன் ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., எட்டு போலீஸார் என மொத்தம் 10 பேர் சுழற்சி முறையில் பணிபுரிவர். வரும்காலங்களில் அரசின் அனுமதிபெற்று தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments