மைக்ரோசாப்ட் இந்தியாவில் நடத்திய ஓட்டெடுப்பு

பிரபல மைக்ரோசாப்ட் நெட்வொர்க் (எம்.எஸ்.என்.,) இணையதளம் நடத்திய ஓட்டெடுப்பில், இந்த ஆண்டின் சிறந்த மனிதராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பிரபலமானவர்களில் உங்கள் ஓட்டு யாருக்கு என்ற வகையில் மைக்ரோசாப்ட் நெட்வொர்க் இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தியது. இதில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, 28 சதவீதம் பேரும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, 27 சதவீதம் பேரும், விப்ரோ நிறுவன தலைவர் அசிம்பிரேம்ஜிக்கு, 20 சதவீதம் பேரும், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, 17 சதவீதம் பேரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நடிகர் சல்மான் கானுக்கு, தலா 4 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இந்த ஓட்டெடுப்பில் நிதிஷ்குமார், 8,486 ஓட்டுகள் பெற்று முதலிடம் வகிப்பதால், எம்.எஸ்.என்., சார்பில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments